Followers

Monday, January 20, 2020

இவ்வாறு உலகம் முழுக்க முஸ்லிம்கள் ஏன் துன்புறுத்தப்படுகின்றனர்?


இவ்வாறு உலகம் முழுக்க முஸ்லிம்கள் ஏன் துன்புறுத்தப்படுகின்றனர்? முஸ்லிம்கள் செய்த குற்றம்தான் என்ன? மோடியும் அமீத்ஷாவும் ஏன் முஸ்லிம்களை மட்டும் நாடற்றவர்களாக்க முயற்சிக்கின்றனர்?
காரணங்கள் இதுதான்.....
ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்கிறார்கள்....
மனிதனுக்கு மனிதன் காலில் விழுந்து தங்களின் சுயமரியாதையை இழக்க வேண்டாம் என்கிறார்கள்....
மனிதர்களில் சாதி வேற்றுமை கூடாது என்கின்றனர்.
மத குருமார்களையும், பாதிரிமார்களையும், வணங்க வேண்டாம் என்கிறார்கள்.
வட்டி, மது, திருட்டு, விபசாரம், பெண்அடிமை, பொருளாதார ஏற்றத் தாழ்வு கூடாது என்கிறார்கள்..
இதெல்லாம் நடைமுறைக்கு வந்தால் தங்களின் மேட்டிமைத்தனம் சென்று விடுமே என்ற கோபத்தில் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர்: பொய்யான குற்றச்சாட்டுக்களில் கைது செய்கின்றனர்: கொலையும் செய்கின்றனர்: இஸ்லாமிய பெண்களை மான பங்கப்படுத்துகின்றனர். தாய் மதம் திரும்புங்கள் என்று வலுக்கட்டாயப்படுத்துகின்றனர். சீனாவானாலும், இந்தியாவானாலும், பர்மாவானாலும், ஐரோப்பிய நாடுகளானாலும் பாசிசவாதிகளின் இலக்கு முஸ்லிம்களே என்பது விளங்கும்.
உண்மையான இறை நம்பிக்கையாளனுக்கு இந்த உலகம் ஒரு சிறைச்சாலை என்று நபிகள் நாயகம் சொல்லிச் சென்றுள்ளனர். எனவே எத்தகைய இன்னல்களை கொடுத்தாலும் சகித்துக் கொள்வோமேயொழிய இஸ்லாமிய மார்க்கத்தை மட்டும் எக்காலத்திலும் விட்டு விட மாட்டோம்.
மோடியும், அமித்ஷாவும், உலகின் பாசிச வாதிகளும் கண்டிப்பாக முஸ்லிம்களிடம் தோல்வியையே தழுவுவார்கள். இறைவன் நாடினால் அதனை இந்திய வரலாறும் வருங்காலத்தில் பதிவு செய்யும்.
ஆக்கம்: சுவனப்பிரியன்
-------------------------------------------------------
2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
2:214 اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَ لَمَّا يَاْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْؕ مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِؕ اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ‏
2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)




2 comments:

Dr.Anburaj said...

சிரியாவில் இருந்து வாழ வகையின்றி அகதியாக சிறிய படகில் அதிக எண்ணிக்கையில் பயணித்து கடலில் ஜலசமாதி அடைந்த முஸ்லீம்கள் எண்ணிக்கை தெரியுமா ?
இவர்களை அகதியாக்கியது திரு.நரேந்திர மோடியா ? திரு.அமித்ஷாவா ?
--------------------------------------------------------------------
லெபனான் இருந்து வாழ வகையின்றி அகதியாக சிறிய படகில் அதிக எண்ணிக்கையில் பயணித்து கடலில் ஜலசமாதி அடைந்த முஸ்லீம்கள் எண்ணிக்கை தெரியுமா ?
இவர்களை அகதியாக்கியது திரு.நரேந்திர மோடியா ? திரு.அமித்ஷாவா ?
-------------------------------------------------------------------

மத்திய அரேபிய நாடுகளில் நிலவும் உள்நாட்டு சண்டையில் பாதிக்கப்பட்ட பல லட்சம் மக்களை கடலில் முழ்காமல் காப்பாற்றி அகதிகள் முகாம்கள் அமைத்து சோறு போட்டு காப்பாற்றி வருவது இத்தாலி அமெரிக்கா இங்கிலாந்து ஜொ்மனி போன்ற நாடுகள்தாம்.
நிச்சயம்
எகிப்தோ குவைத்தோ சவுதி அரேபியாவோ பாக்கிஸ்தானே இல்லவே....இல்லை.
இந்தியா என்றும் அதை தடுக்க வில்லை.
-------------------------------------------------------------------------------------
இராக் கில் வாழ்ந்த எஸ்டி இன ஆண்களை அநியாயமாக கொன்று 10000 பெண்களை கைபற்றி குரான்வழி அரசை அமைக்க பாடுபடுவதாகச் சொல்லும் இசுலாமிய தேச ராணுவ முகாம்களில் காம இச்சையை தீர்கக பயன்படுத்தியதற்கு
காரணம்
திரு.நரேந்திர மோடியா ? திரு.அமித்ஷாவா ?
----------------------------------------------------------------------
முஸ்லீம்கள் வாழும் நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் நடக்காத ஒரே நாடு குவைத்மட்டும்தான்.
மற்ற அனைத்து நாடுகளில் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றதே ஏன்.
காரணம் திரு.நரேந்திர மோடியா ? திரு.அமித்ஷாவா ?

vara vijay said...

And you have to imitate life and style of muhammad. That is the only one reason why i dont want to enter islam.