
மலேசியாவின் மலாக்கா மாகாணத்தில் டாக்டர் ஜாகிர் நாயக்கின் கருத்தரங்கம் நடைபெற்றது. ஹிண்ட்ராஃப் என்ற இந்துத்வா அமைப்பு இந்த கூட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மலேசிய அமைச்சர் ஒருவரும் ஜாகிர் நாயக்கை கடுமையாக விமரிசித்து பின்னர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக கூட்டம் நிறைவேறியது.
முடிவில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடந்தது. பல கேள்விகள் மாற்று மதத்தவர்களால் கேட்கப்பட்டன. சென்கிராம் தர்மா என்ற 24 வயது இந்து இளைஞர் ஒரு கேள்வியைக் கேட்டார். இவர் ஒரு பல்கலைக் கழக மாணவர். இவரது கேள்விக்கு ஜாகிர் நாயக் மிகச் சிறப்பான பதிலை தந்தார். பதிலை பெற்றுக் கொண்ட அந்த மாணவர் உடன் அரங்கிலேயே இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டார்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
No comments:
Post a Comment