Followers

Friday, April 15, 2016

சவுதியில் கடந்த சில தினங்களாக ஐஸ் மழை!









பாலைவனப் பிரதேசமான சவுதி அரேபியால் கடந்த சில தினங்களாக ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. பாலைவனம் சோலைவனமாக மாறியதால் இந்த மாற்றங்கள். இனிமேலாவது நம் நாட்டில் மரங்களை வளர்ப்போம். விளை நிலங்களை மனைகளாக்காது இருப்போம்.

சவுதி அரேபியாவின் மக்கள் தொகைக்கு இந்த மழையானது மிக அதிகம். ஆனால் நம் நாட்டு மக்கள் தொகைக்கு பாதி அளவு கூட பெய்வதில்லை. பெய்கின்ற அந்த மழை நீரையும் சேமித்து வைக்காது வீணாக கடலில் கலக்க வைக்கிறோம்.

சவுதி அரேபியாவில் கழிவறை நீரை வடி கட்டி உரமாகவும், அதிலிருந்து கிடைக்கும் நீரை விவசாய நிலங்களுக்கும் பாய்ச்சுகிறார்கள். கழிவறை தண்ணீரையும் வீணாக்குவதில்லை. அதில் கிடைக்கும் மனித மலங்களையும் உரமாக்கி விடுகிறார்கள். செல்வந்த நாட்டுக்கு இருக்கக் கூடிய இந்த சிக்கன நடவடிக்கை வறிய நாடான நம் நாட்டுக்கு இருப்பதில்லை.

இது போன்று நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தக் கூடிய ஆட்சியாளர்களை நம் நாடு பெறுவது எப்போது? இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மரங்களை நடுவோம்: நீராதாரத்தை கணக்கின்றி பெறுவோம்.






4 comments:

Dr.Anburaj said...


மகத்தான இந்து சமூகத்திற்கு தண்ணீரை பாதுகாக்கும் முறைபற்றிய விாிவாக கருத்து செயல்திட்டம் இருந்தது. ஊா் தோறும் குளம் ஓடைகள் தெப்பக்குளம் கல்லணை என்று தண்ணீரை சேமித்து நிலத்தடி நீா் மட்டம் காத்தாா்கள்.

வெளிநாட்டு காடையா்கள் இந்தியாவை கைபற்றியதால் இந்த மண்ணை கொள்ளையடிக்கவும் வைப்பாட்டிகள் பெறவும் ஒரு அமைப்பாக மாற்றி விட்டாா்கள. விளைவு சமூக பொறுப்பற்ற ஒரு கலாச்சார சீரழிவு ஏற்பட்டு விட்டது. எப்படி மாற்றுவது?

indian said...

Dr.Anburaj

you must see this video

https://www.youtube.com/watch?v=a1X9LOeMf_0

மொகலாயர்களின் ஆட்சி

indian said...

Dr.Anburaj

go to this video link

மொகலாயர்களின் ஆட்சி

https://www.youtube.com/watch?v=a1X9LOeMf_0

Dr.Anburaj said...


பொியாா் தாசன் என்ற அப்துல்லா என்ற ஒரு காமெடி பீஸ்ஸின் உளறல் என்ன அவ்வளவு முக்கியம் வாய்ந்ததா ?
குரானின் கூற்றுபடி மருத்துவ கல்லூாிக்கு தானம் வழங்கப்பட்ட பொியாா்தாசன் என்ற அப்துல்லா வின் உடலுக்கு கபுா் வேதனை உண்டா ? இல்லையா ? உண்டு என்றால் எப்படி ?
இல்லையெனில் குரான் பொய் சொல்கின்றதா ?

எது உண்மை இந்தியன் அவர்களே