Followers

Monday, April 18, 2016

விஜயலஷ்மி என்ற பிராமண பெண் இன்று இஸ்லாத்தில்....

விஜயலஷ்மி என்ற பிராமண பெண் இன்று இஸ்லாத்தில்....
--------------------------------------------------------------------------
'ஐந்து வேளையும் பள்ளியிலிருந்து வரும் பாங்கின் ஓசையில் ஏதோ ஓர் ஈர்ப்பு எனக்கு இருக்கும். அதனால் எனது கல்லூரி தோழிகளிடம் குர்ஆன் மொழி பெயர்ப்பு கேட்டேன். 'நீ எல்லாம் அதை தொடக் கூடாது' என்று எனக்கு அவர்கள் தரவில்லை. நம்மை ஒதுக்கும் அந்த குர்ஆனின் குறைகளை காண வேண்டும் என்ற வெறியில் தினத்தந்தியில் தினமும் வரும் சிறு சிறு குர்ஆன் வசனங்களை சேகரிக்க ஆரம்பித்தேன். ஆச்சரியமாக அந்த பழக்கம் குர்ஆனின் மேல் எனக்குள் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. வின் டிவியில் இஸ்லாம் சம்பந்தமாக வரும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்தேன். பல மாற்றங்கள் என்னுள் எழுந்தது.

அன்றிலிருந்து குர்ஆனை ஆய்வு செய்தேன். எனது மாற்றங்களை உணர்ந்த எனது பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர். தினத் தந்தி வாங்குவது நிறுத்தப்பட்டது. கேபிள் டிவி கனெக்ஷன் தடுக்கப்பட்டது. இது என்னை மேலும் இஸ்லாத்தின்பால் கொண்டு சென்றது. இதனால் ஆத்திரமுற்று என்னை அடித்தனர். சுவற்றில் என் தலையை மோதினர். அந்த நேரத்தில் என் உயிர் போயிருக்கக் கூடாதா என்று ஏங்கினேன்.'
ஆஹா... என்ன ஒரு உறுதி... அந்த காலத்திய சுமையா அவர்களின் உறுதியை இந்த பெண்ணிடமும் பார்க்கிறேன். இறைவன் இந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்துக் கொடுத்து ஈருலக வெற்றியையும் தந்தருள்வானாக!

No comments: