Followers

Wednesday, April 13, 2016

துருக்கி ராணுவம் இரவு நேர தொழுகையில் லயித்திருக்கும் போது!



ராணுவ வீரர்களுக்கு கட்டாயமாக இறை நம்பிக்கை, இறைவனின் பயம் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் மிக முக்கியமான பொருப்பில் இருப்பவர்கள். வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள். அரபு நாடுகளில் ராணுவத்தினர் சீருடையோடு ஒவ்வொரு பள்ளியிலும் தொழுவதை நாம் காணலாம். ராணுவ அணி வகுப்பு நடக்கும் போதும் தொழுகை நேரத்தில் அனைவரும் தொழுகைக்கு வந்து விடுவர்.

ஆனால் நம் நாட்டில் இது நடைமுறைபடுத்தப் படுவதில்லை. இறை பக்தி கொஞ்சமும் இல்லாததால் நமது ராணுவத்தினர் வரம்பு மீறுகின்றனர். இரவு பன்னிரண்டு மனி, ஒரு மணி என்று காஷ்மீரில் நமது ராணுவம் இளம் பெண்களை அழைத்துச் செல்வதும் இரண்டு நாட்கள் அனுபவித்து விட்டு பிறகு வீட்டில் எறிந்து விட்டு செல்வதும் தொடர்கதையாகிறது. எதிர்த்து கேள்வி கேட்டால் 'நீ பாகிஸ்தானின் கைக் கூலி' என்று சொல்லி என்கவுண்டரில் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். இரண்டு நாட்கள் முன்பு கூட நடந்துள்ளது.

நமது ராணுவத்தில் பெரும்பாலும் இந்து மக்களே உள்ளனர். அந்த மக்களுக்கு இறை பக்தியை ஊட்ட வேண்டும். இறை பக்தி என்று நான் சொல்வது அமீத்ஷாவும், நரேந்திர மோடியும், பாபா ராம்தேவும் சொல்லும் இறை பக்தி அல்ல. அது பக்தி என்ற பெயரில் நடத்தப்படும் பகல் வேஷம். நான் சொல்ல வரும் பக்தி கிருபானந்த வாரியாரும், குன்றக்குடி அடிகளாரும் போதித்த இந்து மத பக்தி. நமது ராணுவத்தினருக்கு முறையாக கவுன்சிலிங் கொடுத்து முறையான இறை பக்தியையும் ஊட்டினால் ராணுவத்தின் மேல் உள்ள களங்கம் துடைக்கப்படும். இந்து, முஸ்லிம், கிருத்தவ போதனைகள் முறையாக நமது ராணுவத்துக்கு போதிக்கப் பட்டால் உலகிலேயே சிறந்த ராணுவமாக நமது ராணுவம் மிளிரும். மோடி தலைமையிலான இந்த ஆட்சியில் அது சாத்தியமில்லை. அடுத்து அமரக் கூடிய ஆட்சியாளர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

No comments: