Followers

Sunday, April 10, 2016

திருப்பூரில் பிரபலமடைய குண்டு வைத்த இந்துத்வா!



நேற்று திருப்பூரில் சந்தேகத்திற்கிடமாக இரு சக்கர வாகனத்தில் உலவிக் கொண்டிருந்த ஒருவனை போலீஸார் பிடித்து விசாரித்துள்ளனர். இவன் 'இந்து முன்னேற்றக் கழகத்தைச்' சேர்ந்த முருகன் (வயது 40) என்பது தெரிய வந்தது. வெடி குண்டுகளோடு பிடிபட்டுள்ளான். மேலும் அவனை தீர விசாரித்தபோது சில நாட்களுக்கு முன்பு இந்துத்வாவை சேர்ந்த நல்லூர் கோபிநாதன் காரில் குண்டு வெடிக்க வைத்ததும் தான் தான் என்று ஒத்துக் கொண்டுள்ளான். 'ஏன் இப்படி செய்தாய்' என்று கேட்டதற்கு 'பிரபலமடைவதற்காக இந்துத்வா தலைவர்கள் தங்கள் கார்களில் குண்டு வைக்க சொன்னார்கள்' என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளான்.

பிஜேபி ராஜா 'தீவிரவாதம:... தீவிரவாதம்' என்று அடிக்கடி புலம்புவதை கேட்டிருக்கலாம். இவர்கள் பிரபலம் அடைய சொந்த மக்களையும் பலி கொடுக்க தயங்காத மாபாதகர்கள் இந்த இந்துத்வாவினர்.

இந்துக்களே! இந்த தேச விரோதிகளிடம் மிக எச்சரிக்கையாக இருங்கள். தேர்தல் வேறு நெருங்குகிறது. யாரும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளாததால் விரக்தியின் விளிம்பில் உள்ளனர் பிஜேபியினர். எனவே ஓட்டு அறுவடை செய்ய எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். மிக கவனமாக நாம் இருக்க வேண்டும்.

No comments: