Followers

Thursday, April 07, 2016

வாரணாசி விசுவநாதர் ஆலயம்! -ஒளரங்கஜேப்



பாபரை இந்தியாவுக்கு அழைத்து வந்த மன்னன் யார்?-------------------------------------------------------மொகலாய மன்னன் பா...

Posted by Nazeer Ahamed on Thursday, April 7, 2016

பாபரை இந்தியாவுக்கு அழைத்து வந்த மன்னன் யார்?
-------------------------------------------------------

சோம நாத புர ஆலயத்தை இடித்த அரசர் கஜினி என்று வரலாறுகளில் படித்திருப்போம். கஜினியிலிருந்து முல்தான் வழியாக சோம நாத புரத்தை அடைய 5000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தாக வேண்டும். வழியில் 10000 ஆயிரத்துக்கும் அதிகமான இந்து கோவில்கள் இருந்துள்ளன. இந்து மதத்தை இழிலு படுத்தி சொர்க்கம் அடைய கஜினி நினைத்திருந்தால் அனைத்து கோவில்களையும் பாமியான் புத்த கோவில்களையும் இடித்திருக்க வேண்டும். ஆனால் கஜினி அதில் எதையுமே கை வைக்கவில்லை. அவனுக்கு சோமநாதபுர ஆலயத்தின் மேல்தான் கண் இருந்தது. ஏனெனில் நோமநாதபுர ஆலயத்தில் அன்றைக்கே 20000 தங்க தீனார்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதனை கொள்ளையிடுவதுதான் அவனது நொக்கமே ஒழிய இந்து மதத்தை இழிவுபடுத்துவது அல்ல. அடுத்து கஜினியின் படையில் 25 சதவீதம் இந்துக்கள் இருந்தனர். திலக் டோங்கி, ராண்ட், ஹிந்த் என்ற இந்து ஜெனரல்களும் கஜினி படையிலும் இருந்தனர். இந்துக்களும் இந்த கொள்ளையில் ஈடுபட்டனர். வழியில் ஒரு மசூதியும் தாக்கப்பட்டது. ஆக இவர்களுக்கு பணம்தான் முக்கியமே ஒழிய மதம் அல்ல. இது அந்த காலத்திய நடைமுறை.

மொகலாய மன்னன் பாபரை ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்த ஹிந்து மன்னனின் பெயர் ராணா சங்கா. இப்றாஹிம் லோடியை தோற்கடிக்க பாபரை வலிந்து அழைத்து வந்த இந்து மன்னன்தான் ராணா சங்கா. இப்படி வலிந்து ஒருவர் கூப்பிட்டு ஆட்சியை தர சம்மதித்தால் யார்தான் மறுப்பார்.

ஒளரங்கஜேப்பை 44 ஹிந்து ராஜாக்கள் மாமன்னராக ஒத்துக் கொண்டு அவரது ஆட்சியின் கீழ் தங்கள் குறு நில நாடுகளை ஆண்டு வந்துள்ளனர். ஒளரங்க ஜேப் இந்துக்களுக்கு எதிரியாக இருந்திருந்தால் 44 ஹிந்து ராஜாக்கள் அவரை மாமன்னராக அங்கீகரித்திருக்க முடியுமா? ஐம்பது ஆண்டுகள் ஆட்சிதான் ஆள முடிந்திருக்குமா?

பிரிட்டிஷார் இந்தியாவில் கொள்ளையடித்த செல்வத்தை கப்பல் கப்பலாக இங்கிலாந்துக்கு கொண்டு சென்றனர். ஒருவரும் இந்தியாவில் இறக்கவில்லை. ஆனால் மொகலாய மன்னர்கள் யாரும் இந்திய செல்வங்களை மெக்கா மதினாவுக்கோ அல்லது ஆப்கானிஸ்தானுக்கோ கொண்டு செல்லவில்லை. அனைத்தையும் இந்திய மண்ணிலேயே செலவழித்தார்கள். அனைத்து அரசர்களும் தனது பூமியாக நினைத்து டெல்லியிலேயே அடக்கமும் செய்யப்பட்டனர்.

---------------------------------------------

வாரணாசி விசுவநாதர் ஆலயம்! -ஒளரங்கஜேப்

வங்காளத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்த ஒளரங்கஜேப் வாரணாசி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது ஆட்சியின் கீழிருந்த ஹிந்து ராஜாக்கள் ஒளரங்கஜேப்பிடம் 'பயணத்தை ஒரு நாள் நிறுத்தித் தங்கிச் சென்றால் அந்த நாளில் எங்களது ராணிகள் கங்கையில் குளித்து விட்டு விசுவநாதரை தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்'என்று கோரிக்கை வைத்தனர்.

ஹிந்து அரசர்களும் ராணியரும் கங்கைக் கரையில் தங்கி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டுச் செல்ல வேண்டுமென்ற கோரிக்கையை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டவர் ஒளரங்கஜேப்.

அதனைத் தொடர்ந்து ஒளரங்கஜேப்பின் அன்றைய வழிப்பயணம் நிறுத்தப் பட்டது. வாரணாசிக்கு இடையேயான ஐந்து மைல்தூரம் முழுவதும் முகலாயப் பெரரசின் இராணுவத்தினர் நிறுத்தப் பட்டார்கள்.

இந்து ராணிகள் பல்லக்குகளில் சென்று புனித கங்கையில் நீராடினர். காசி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டார்கள். (ஒளரங்கஜேப் ஆட்சியில் அவரவர் விருப்பப்படி வணங்கிட அனுமதிக்கப் பட்டனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்)

பூஜைகள் முடிந்தபின் ஹிந்து ராணிகள் திரும்பினர். ஆனால் கட்ச் சமஸ்தானத்தின் ராணி மட்டும் திரும்பவே இல்லை. உடனே அந்த ராணியைத் தேடிக் கண்டு பிடிக்க முழு அளவிளான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனாலும் ராணியைப் பற்றிய தகவல் எதுவும் தெரியாததால் ஒளரங்கஜேப் ஆத்திரமடைந்தார். ராணியைத் தேடிக் கண்டு பிடித்திட தனது மூத்த அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.

அதிகாரிகள் தீவிரமாகத் தேடுகையில் விசுவநாதர் ஆலயத்தில் உள்ள ஒரு சிலை மட்டும் அசைந்தது. அந்தச் சிலையை அசைத்த போது பாதாளச் சுரங்கம் ஒன்றிற்குச் செல்லும் படிக் கட்டுகள் காணப்பட்டன. உள்ளே இறங்கிப் பார்த்தபோது அங்கே காணாமல் போன ராணி அவமானப் பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து ஹிந்து ராஜாக்கள் தங்களது எதிர்ப்பை உரத்த குரலில் வெளியிட்டார்கள். இந்த அக்கிரமத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று ஒளரங்கஜேப்பிடம் கோரினார்கள்.

அந்த இடத்தின் புனிதத் தன்மை மாசு படுத்தப்பட்டு விட்டதை உணர்ந்ததால் ஒளரங்கஜேப் விசுவநாதர் விக்கிரகத்தை வேறு இடத்திற்கு மாற்றிட உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்தக் கோவில் தரைமட்டமாக்கப் பட்டது. அந்தக் கோவிலின் மடாதிபதி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

ஆதாரம்: பிஷம்பர்நாத் பாண்டே, 'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'
Page : 70,71

இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

P.N.Pande

“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”

P.N.Pande, Islam And Indian Culture, Page 55

உண்மை இவ்வாறு இருக்க நம் நாட்டு பாட நூல்களில் ஒளரங்கஜேப் 'இந்து கோவில்களை மத வெறியினால் இடித்தார்' என்று பொய்களைப் புனைந்திருக்கிறார்கள். பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கிறோம் என்பதை சமூக ஆர்வலர்கள் உணர்ந்து பொய்யாக புனைந்த வரலாறுகளை திருத்த முன் வர வேண்டும்.

1 comment:

Dr.Anburaj said...

சிலை வணக்கத்தை ஒழிப்பது அரேபிய வல்லாதிக்க இயக்கத்திற்கு அல்லா சாப்பிடுவது போல்.முஹம்மது காபாவில் இருந்த 360 சிலைகளை சா்வாதிகார முறையில் உடைத்தாா் ஏமனில் உள்ள காபாவை அழித்தாா். ஆக சிலைகளை உடைப்து ” தீன் ” ஆன காாியம். இதைப்படித்த அரபி வல்லாதிக்க காடையா்கள் தங்கள் சுழ்நிலைக் கேற்ப அரசியல் ராணுவ தந்திரங்களுக்கு உட்பட்டு இந்து கோவில்களை உடைத்தாா்கள்.முஹம்மதுவை முன் உதாரணமாகக் கொண்டு.
இது பொதுவான உண்மை.முஸ்லீம்களில் இந்துக்களை சகமுஸ்லீம்கள் போல் பேதமின்றி நடத்திய மன்னா்கள் யாரும் இல்லை ? காபீா்கள் -சிலை வணங்கிகள் -கல்லை கழுவி குடிக்கும் மடையா்கள் என்பது இந்துக்களைக் குறித்த அவர்களின் விமா்சனம். இன்றும் இந்த சொல்லாட்சி முஸ்லீம்களின் அரேபிய மத பரப்பரைகளில் உள்ளது.

முஸ்லீம்களில் இந்துக்களை சகமுஸ்லீம்கள் போல் பேதமின்றி நடத்திய உங்களுக்கு தொிந்தால் பதிவுகள் செய்யலாம் படித்து க் கொள்கிறேன்.
ஔரங்கசீப்பை காப்பாற்ற நினைக்க வேண்டாம் அவன் ஒரு அரேபிய வல்லாதிக்க மனநோயாளி. அப்பனையும் உடன்பிறப்பகளையும் கொன்று ....அாியணையில் அமா்ந்த காபீா்-காட்டான்.மனநோயாளி.