
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
இந்த பெண்ணிடம் செல்வம் குவிந்திருக்கிறது. கல்வியும் இருக்கிறது. ஆனால் அந்த கல்வியானது இந்த பெண்ணின் மனதை பக்குவப்படுத்தவில்லை. தான் ஒரு வசதியான குடும்பத்துப் பெண் என்ற மேட்டிமைத்தனம் தெரிகிறது. அதனை இவ்வளவு பப்ளிக்காக பொதுவில் போட்டு உடைத்திருக்க வேண்டாம்.
அன்பளிப்புகளை தருபவரின் பொருளாதார சூழ்நிலையையும் கருத்தில் கொள்ளாது இவ்வாறு பதிவிடுவது பெற்ற கல்வியின் பயனை இந்த அம்மணி பெறவில்லை என்ற முடிவுக்கே நாம் வருவோம்.
உலகில் ஒரு வேளை சாப்பாடு கூட கிடைக்காமல் கூழை சாப்பிட்டு காலம் தள்ளும் ஜீவன்களும் உண்டு. அவர்களையும் சற்று நினைத்துப் பாருங்கள்.
No comments:
Post a Comment