Followers

Saturday, April 02, 2016

கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதால் கல்லூரி மாணவி தற்கொலை!



போபால்: குவாலியரில் உள்ள MITS கல்லூரியில் படித்து வந்த ஸூருபி கம்தான் என்ற மாணவி இந்தியா டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸோடு வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தித்து வந்தார். ஆனால் இவரது பிரார்த்தனை பலிக்கவில்லை. இந்தியா தோற்றது. வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதனால் மனமுடைந்த மாணவி தனது ரூமுக்குச் சென்று துப்பட்டாவினால் தூக்கு மாட்டி இறந்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் நிகழ்வு. பணம் பண்ணுவதற்காக தேவையற்ற விளம்பரங்களையும் தேசபக்தியையும் இதில் புகுத்தி பலருக்கு மன உளைச்சலையும் தற்கொலைவரை செல்லவும் தூண்டுகிறார்கள். ஒரு விளையாட்டில் வெற்றி தோல்விதான் தேச பக்திக்கு அடையாளமா? அவனவன் பணத்தை வாங்கிக் கொண்டு வேண்டுமென்றே தோற்றுப் போகும் இந்த ஆட்டத்துக்கு இத்தனை பில்டப்புகள் தேவையா?

இதை எல்லாம் சொன்னால் 'போலோ பாரத் மாதா கீஜே.... உனக்கு தேச பக்தி கிடையாது. உன்னை பாகிஸ்தானுக்கு நாடு கடத்தி விடுவோம்' என்று டவுசர் பார்ட்டிகள் கம்பையும் வேல்களையும் தூக்கிக் கொண்டு வருவார்கள். :-)

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
01-04-2016

http://timesofindia.indiatimes.com/city/bhopal/Girl-commits-suicide-after-Indias-loss-to-West-Indies/articleshow/51647853.cms

No comments: