Followers

Wednesday, April 20, 2016

அமீர்கான் இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார்!





அமீர்கான் இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார்!

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனை கேள்விப்பட்டு நடிகர் அமீர்கான் தால், கோரகென் என்ற இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார். அக்கிராமங்களின் தண்ணீர் தேவைகளையும் அடிப்படை தேவைகளையும் தனது சொந்த செலவில் நிறைவேற்றிக் கொடுக்கிறார். இதற்கு முன் 2001 குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட கட்ச் கிராமத்தையும் தத்தெடுத்தவர் அமீர்கான். இந்த நாட்டு மக்களின் சுக துக்கங்களில் யாரெல்லாம் பங்கெடுக்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான தேச பக்தி உடையவர்கள்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
19-04-2016

---------------------------------------------

இது ஒரு புறம் இருக்க வறுமை பகுதிகளை பார்வையிட வந்த கடலை மிட்டாய் ஊழல் புகார் பிரபலம் பாஜகவின் மத்திய அமைச்சர் பங்கஜ் முண்டே அங்கு நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார். அந்த மக்களுக்கு வழி சொல்லாமல் மோடியைப் போல் செல்ஃபி எடுத்துக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல் மராட்டியர்களின் இன வெறியை தூண்டி அதன் மூலம் பணம் பண்ணும் ராஜ் தாக்கரேயோ அல்லது உத்தவ் தாக்கரேயோ அந்த மக்களின் வாழ்வுக்கு எந்த உதவிகளையும் செய்யவில்லை.

இப்போது சொல்லுங்கள் யார் தேச பக்தர்? யார் தேச விரோதி?

No comments: