Followers

Wednesday, April 06, 2016

இந்த இருவரில் யார் தீவிரவாதி ராஜா?





உபியில் முஸாஃபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் வயல் வெளிகளிலும் தற்காலிக குடியிருப்புகளிலும் தங்கி வருகின்றனர். அவர்களுக்கு இலவசமாக நிரந்தர தங்குமிடம் கட்ட தமுமுக முடிவு செய்து பணம் வசூல் செய்தது. அதன் படி இடம் வாங்கப்பட்டு 100 வீடுகள் கட்டித்தர முடிவெடுக்கப்பட்டு வேலை துரிதமாக நடந்து வருகிறது. தமுமுக தலைவர் ஹைதர் அலி இடங்களை பார்வையிடுகிறார்.

இஸ்லாமிய அமைப்புகள் தங்களுக்குள் உள்ள கசப்புகளை தூரமாக்கி இது போன்ற ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

எச் ராஜா சார்ந்திருக்கும் பிஜேபி அந்த மக்களை விரட்டி வீடில்லாமல் ஆக்கியது. தமுமுக மொழி கடந்து அந்த மக்களை நேசித்து சொந்த வீடு கட்டிக் கொடுக்கிறது.

இந்த இருவரில் யார் தீவிரவாதி ராஜா?

12 comments:

Dr.Anburaj said...


போா் வெறியன் தீவிரவாதி யாா் ? அபுபக்கரா ? உமரா ?

முஹம்மதுவின் காலத்தில் அரேபியாவில் இருந்த அனேக இனக்குழுக்கள் முஹம்மதுவுடன் உடன்படிக்கை செய்திருந்தார்கள். முஹம்மதுவின் ஆள் பலத்தைக் கண்டு இஸ்லாமை பின் பற்றுவதாகச் சொல்லி, முஹம்மதுவிற்கு ஜகாத் (ஸகாத் வரி) கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். சிலர் விரும்பி இஸ்லாமை ஏற்றார்கள், சிலர் தங்களுக்கு சண்டையிட வலிமையில்லை என்பதால், விருப்பமில்லாமலும் இஸ்லாமை ஏற்றார்கள்.

முஹம்மது மரித்தவுடன், அபூ பக்கர் கீழ்கண்ட சவால்களை சந்தித்தார்:

1) அரேபிய இனக்குழுக்கள் "நாங்கள் முஹம்மதுவுடன் தான் உடன்படிக்கைச் செய்தோம், அவர் மரித்துவிட்டார், அரேபிய வழக்கத்தின் படி அவரோடு நாங்கள் புரிந்த உடன்படிக்கையும் முரிந்துவிட்டது, இனி நாங்கள் மதினாவிற்கு ஜகாத் (ஸகாத் வரி) செலுத்துவதில்லை" என்று கூறினார்கள். நாங்கள் முஸ்லிம்களாகவே இருப்போம், ஆனால், ஜகாத் அபூ பக்கருக்கு தரமாட்டோம், எங்களை நாங்களே ஆட்சி செய்துக்கொள்வோம் என்று கூறினார்கள்.

2) இன்னும் சிலர், இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டார்கள், தாங்கள் கடந்த காலத்தில் பின்பற்றின மதத்திற்கே திரும்பி விட்டார்கள்.

3) சிலர் தங்களை நபிகள் என்றுச் சொல்லிக்கொண்டு, இஸ்லாமுக்கு இனி நாங்கள் அடிமைகள் இல்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
இஸ்லாம் அமைதி மார்க்கம் தான் என்று நிரூபிக்கம் சமயம் வந்தது, அதுவும் முதல் தலைவர் அபூ பக்கருக்கு வந்துள்ளது. இவர் என்ன செய்து இருந்திருக்கவேண்டும்? இஸ்லாம் அமைதி மார்க்கம் என்றும், இஸ்லாமை கட்டாயப்படுத்தி யார் மீதும் திணிக்கக்கூடாது என்றும் நினைத்து செயல்பட்டு இருந்திருக்கவேண்டும். இவர்-முதல் கலிபா அபுபக்கா் செய்தது என்ன?
ரித்தா போர்கள் - இஸ்லாமைவிட்டு வெளியேறியவர்களுடன் நடந்த போர்கள்(War of Apostasy):

அபூ பக்கருக்கும் உமருக்கும் இடையே நடைப்பெற்ற ஒரு சிறிய உரையாடலை, முஸ்லிம்களின் அதிகார பூர்வமான புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து காண்போம். தம்பி, இந்த கடிதத்தை இந்த ஒரு ஹதீஸோடு நான் முடிக்கிறேன்.

புகாரி ஹதீஸ் எண்: 1399

1399. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார் (உமர்(ரலி), 'லா இலாஹ இல்லல்லாஹ்" கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி), உமரை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்" என்றார். இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்" என்றார். Volume :2 Book :24

இதே விவரங்கள் வேறு ஹதீஸ்களிலும் வருகிறது, அவைகளின் எண்கள்: 1400, 1456-1457, 6925, 7284-7285.

Dr.Anburaj said...

தம்பி, நன்றாக மேற்கண்ட ஹதீஸ்களை படித்துப் பார்.

முஹம்மதுவின் கூற்றுப்படி, "லா இலாஹ இல்லல்லாஹ்" என்றுச் சொல்லி, முஸ்லிமாக வாழ்பவன் பாதுகாப்பாக இருப்பான், அவன் மீது போர் செய்யக்கூடாது. இதனை உமர் அபூ பக்கருக்கு ஞாபகப்படுத்துகிறார். ஆனால், அபூ பக்கரின் கூற்றுப்படி "அவன் முஸ்லிமாக இருந்தாலும் சரி, அல்லாஹ் தான் உண்மையான இறைவன் என்று சொன்னாலும் சரி, ஸகாத் கொடுக்கவில்லையென்றால், அவன் காஃபிர் தான், எனவே அவனோடு நான் போரிடுவேன். ஸகாத்தாக அவன் ஒரு ஒட்டகக்குட்டியை முஹம்மதுவிற்கு கொடுத்தவனாக இருந்திருந்தால், அதனை நான் இப்போது வசூலிக்காகமல் விடமாட்டேன்" என்பதாகும்.

இதற்கு உமர் அளித்த பதிலை நன்றாக கவனி. அபூ பக்கருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டி இந்த முடிவை எடுக்கக்கூடிய ஞானம் கொடுத்ததாக உமர் கூறுகிறார்.

". . . இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்" என்றார்."

Dr.Anburaj said...

1) முஹம்மது உயிரோடு இருந்த போது, அரேபியாவின் இனக்குழுக்கள் இஸ்லாமை எதன் அடிப்படையில் தழுவினார்கள்?
2) முஹம்மது மரித்தவுடன் ஏன் அவர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டு தங்கள் முந்தையை மதத்தை பின்பற்ற ஆரம்பித்தார்கள்?
3) முஹம்மதுவின் வாளுக்கு பயந்து இவர்கள் இஸ்லாமை ஏற்றார்கள் என்று பொருள்படுகின்றதல்லவா?
4) இன்னும் சிலர், ஸகாத் மட்டும் நாங்கள் தரமாட்டோம், ஆனால், முஸ்லிம்களாகவே இருப்போம் என்றுச் சொன்ன பிறகும் ஏன் அபூ பக்கர் அவர்களோடு போர் புரிந்தார்?

5) ஸகாத்திற்காக அல்லாஹ்வின் அடியார்களை வெட்டிச் சாய்க்கும் இந்த மதம், ஒரு வன்முறையின் மதம் என்பதை, அந்த மக்களுக்கு அபூபக்கர் நேரடியாக தெரிவித்தது போல ஆகிவிட்டதல்லவா?

6) இஸ்லாமில் கட்டாயமில்லை என்ற வசனமும் இறையியலும், வெறும் பேச்சுக்காகத் தானா?

7) இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம் என்று அபூ பக்கர் நினைத்திருந்தால், ஏன் அவர்களோடு போர் புரிந்தார்? ஏன் உமரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை? சில சஹாபாக்களை அனுப்பி அவர்களுக்கு இஸ்லாமை இன்னும் அழமாக விளக்கியிருக்கலாம் அல்லவா? ஸகாத் என்பது ஒரு முஸ்லிமின் ஐந்து கடமைகளில் "ஒன்று" என்று விளக்கியிருந்திருக்கலாம் அல்லவா? ஒருவேளை அவர்கள் அப்போதும் ஏற்க மறுத்தால், முடிவை அல்லாஹ்விடம் விட்டுவிட்டு இருந்திருக்கலாம் அல்லவா? அவர்களோடு சண்டையிடாமல் இருந்திருந்தால், இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று தெரிந்திருக்கும் அல்லவா?

8) அற்பமான பணத்திற்காக, இன்னொரு முஸ்லிமோடு போர் புரிந்து இரத்தம் சிந்துவது பாவமில்லையா?

9) இஸ்லாமின் படி, அபூ பக்கர் நேர் வழி நின்ற கலிஃபா என்றால், இந்த செயல்களுக்கெல்லாம் மூல காரணம் அல்லாஹ் தானே! இந்த வழியை அபூ பக்கரின் மனதில் போட்டவர் அல்லாஹ் என்றால், யார் குற்றவாளி? அபூ பக்கர் வெறும் அம்பு தான், எய்தவன் அல்லாஹ் தானே!

10) ஸகாத் கொடுப்பது பொருளாதார கடமையென்றால், அந்தந்த இனக்குழுக்கள் தங்கள் சொந்த தலைவருக்கு ஸகாத் கொடுத்துவிட்டு போகிறார்கள்! அவர்களும் முஸ்லிம்கள் தானே! ஏன் அவர்கள் மீது அபூ பக்கர் போர் தொடுத்தார்?

11) அபூ பக்கர் நடந்தது நேர் வழியென்றால், நாளைக்கு இந்த ஐஎஸ் போன்ற தீவிரவாத கும்பல், ஒரு நாட்டை முழுவதுமாக பிடித்து ஆட்சி பிடித்தால், உடனே பக்கத்தில் உள்ள இதர இஸ்லாமிய நாட்டைப் பார்த்து எனக்கு ஸகாத் கொடு, இல்லையேல், அபூ பக்கர் செய்த ரித்தா போர் போல, நான் உன் மீது போர் தொடுப்பேன் என்றுச் சொன்னால், அதனை இன்றுள்ள சௌதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அவருக்கு அடிபணியுமா? அடிபணியவேண்டுமா? அல்லது சண்டையிடுமா?

12) முதல் கலிஃபா "அபூ பக்கர்" மாதிரி, இன்றைய "அபூ பக்கர் பக்தாதி (ஐஎஸ் தலைவர்)" பாகிஸ்தானுக்கு கடிதம் எழுதி, நீ முஸ்லிமாக இருந்தாலும், அல்லாஹ்வை மட்டுமே வணங்கினாலும், என் கலிஃபாத்துவத்திற்கு அடிபணிந்து, எனக்கு ஸகாத் கொடுக்கவில்லையென்றால், உன் மீது போர் தொடுக்கப்படும் என்றுச் சொன்னால்? பாகிஸ்தான் முஸ்லிம்கள் என்ன செய்வார்கள். இந்த அபூ பக்கர் பக்தாதியையும் "நேர்வழி நின்ற கலிஃபா" என்றுச் சொல்வார்களா?

13) அன்று அந்த அபூ பக்கரின் இருதயத்தை விரிவாக்கிய அல்லாஹ், இன்று இந்த அபூ பக்கர் பக்தாதியின் இருதயத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான் என்று முஸ்லிம்கள் நம்புவார்களா?

14) அபூ பக்கரின் இந்த செயல் இஸ்லாமை தூயவடிவில் காட்டுகின்றதா தம்பி? ஆமாம் என்றுச் சொன்னால், "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்று முஸ்லிம்கள் சொல்லிக்கொண்டு இருப்பதெல்லாம் ஏமாற்றுவேலையாகும்.

15) அபூ பக்கர் "அரசை நடத்தும் தலைவர் முறையில் நடந்துக்கொண்டார்" என்று முஸ்லிம்கள் சொல்வார்களானால், இதனை கவனியுங்கள். தற்போது நம் இந்திய திரு நாட்டில், பீஜேபியின் (BJP) ஆட்சி நடைப்பெறுகிறது (பீஜேயின் ஆட்சி என்று நான் சொல்லவில்லை). இவர்கள் ஜனநாயகத்தை புறக்கணித்துவிட்டு, இனி எல்லா முஸ்லிம்களும், இந்துக்களாக மாறவேண்டும் என்று சட்டம் போட்டு, முஸ்லிம்களோடு சண்டையிட்டு, அவர்களை ஒடுக்கினால், "இவர்களும் நேர் வழி நின்ற கலிஃபாக்களைப் போன்றவர்கள் என்று முஸ்லிம்கள் இவர்களை அங்கீகரிப்பார்களா?". இவர்கள் இந்துக்களாக இருந்தாலும், இந்துத்துவ ஆன்மீகத்தை பக்கத்தில் வைத்துவிட்டு, இந்த செயலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அபூ பக்கரைப் போல இவர்களும் ஒரு அரசை நடத்துவதால், இவர்களின் இருதயங்களை இவர்களின் தெய்வங்கள் விரிவாக்கினபடியால், இப்படி மாற்று மதங்கள் மீது போர் தொடுத்தால் எப்படி இருக்கும்? அபூ பக்கரின் இருதயத்தை அல்லாஹ் விரிவாக்கினால், ஏன் மற்ற மக்களின் இருதயத்தை அவர்களின் இறைவன் விரிவாக்கமாட்டான்?

Dr.Anburaj said...

அன்புள்ள அப்பா(அல்லா)விற்கு, ஆயிஷா எழுதும் கடிதம்-1
சாட்சி சொல்வதில் ஒரு பெண் சரிபாதியாக மதிக்கப்படவேண்டும் - குர்-ஆன் 2:282
ஒரு நாள் ஆயிஷாவிற்கு ஒரு யோசனை வந்தது, இன்றிலிருந்து குர்-ஆனை தமிழில் படிக்கலாம் என்று, தமிழ் குர்-ஆனை வாங்கினாள், படித்தாள், இதோ தன் சந்தேகங்களை கடிதமாக அல்லாவிற்கே எழுதுகிறாள்.]

அன்புள்ள அப்பா(அல்லாஹ்)விற்கு,

ஆயிஷா எழுதும் கடிதம். நலம் நலமறிய ஆவல். உங்களிடம் நலம் விசாரிப்பது கொஞ்சம் ஓவர் தான். நீங்கள் எப்போதும் நலமாகவே இருப்பீர்கள்.

நீர் கொடுத்த வேதத்தை(குர்-ஆன்) நான் அரபியில் பல முறைபடித்துள்ளேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் நான் அதிக பக்தியுடையவளாக என் உள்ளத்தில் உணர்ந்துள்ளேன். என்னுடைய தந்தை எங்களை விட்டு போனபிறகு நாங்கள் தனிமையையும், பாதுகாப்பின்மையையும் உணருகிறோம். இதை போக்கிக்கொள்ளவும், இன்னும் நீர் குர்-ஆனில் என்ன சொல்லியிருக்கிறீர் என்று அறிந்து ஆறுதல் அடைய ஆவலுள்ளவளாய், நான் குர்-ஆனை தமிழில் படிக்க ஆரம்பித்தேன். எப்போதும் போல நான் சுத்தமாக குளித்துவிட்டு, அரபி குர்-ஆனை எவ்வித கண்ணியத்தோடு படிக்கிறேனோ, அதே கண்ணியத்தோடு தமிழ் குர்-ஆனையும் படிக்க ஆரம்பித்தேன்.அல்லா, நான் குர்-ஆன் இரண்டாம் அதிகாரம் படிக்கும்போது 282ம் வசனத்தை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஒரு பெண் சாட்சி சொல்லும்போது பாதியாக மதிக்கப்படுவாள் என்று நீர் சொல்லியிருக்கிறீர்.

குர்-ஆன் 2:282

...(நீங்கள் சாட்சியாக ஏற்கக்கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்;...

Quran 2:282 YUSUFALI: ... and get two witnesses, out of your own men, and if there are not two men, then a man and two women, such as ye choose, for witnesses, so that if one of them errs, the other can remind her....

ஹதீஸ்களை பார்க்கும் போது, முஹம்மது பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்கள், பக்தியில் குறைவுள்ளவர்கள் என்றுச் சொல்கிறார். நரகத்தில் அதிகமாக காணப்படுவது பெண்கள் தான் என்றுச் சொல்கிறார்.புகாரி 304. 'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது;

Dr.Anburaj said...

1) ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதி என்று குர்-ஆன் 2:282ல் சொன்னதால், பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்களா? அல்லது

2) பெண்கள் (பிறப்பிலிருந்தே) அறிவில் குறைவுள்ளவர்கள் என்று நீரும், உம் தூதரும் சொல்வதால், ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியா?

இதில் எது உண்மை. இது ஒரு தவறான, நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு வசனமாகும்.

இதை உலகத்தில் யார் சொல்லியிருந்தாலும், போகட்டும் நாக்கிலே எலும்பு இல்லை என்பதால் மனிதன் எதையானாலும் பேசுவான் என்று நான் விட்டுவிட்டுயிருப்பேன். ஆனால், எல்லாம் அறிந்த இறைவனாகிய "நீர் (அல்லா)" சொன்னது தான் என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. என் மனைவி, அல்லது சகோதரி அறிவில் சிறிது குறைவுள்ளவள், பக்தியில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை என்றுச் சொல்ல முஹம்மதுவிற்கு உரிமை உண்டே தவிர, உலக மொத்த பெண்ணினமே, அறிவில் குறைவுள்ளவர்களாக இருப்பார்கள், எனவே அவர்களின் சாட்சி ஆணின் சாட்சியில் பாதி என்றுச் சொல்ல அவருக்கு உரிமையில்லை.

பகுத்தறிவு, நேர்மை, நீதி, நியாயம், உண்மை, பொய், கடமை இவைகளின் இனம் (Sex) என்ன அல்லா? ஆணா அல்லது பெண்ணா? ஆண்கள் எப்போதும் நேர்மையாகவே இருப்பார்கள், பெண்கள் நேர்மை தவறுவார்கள் என்றுச் சொல்லி, இவைகளுக்கு ஒரு இனத்தை(Sex) கொடுத்த பெருமை இஸ்லாமையேச் சாரும்.

பெண்களை தலைவர்களாக நியமித்தால், அந்த நாடு அல்லது நிறுவனம் முன்னேறாது என்று முஹம்மது சொல்லியிருப்பது இப்போதுள்ள மனிதனுக்குத் தெரிந்தால், அவன் எவ்வித கஷ்டத்தில் இருந்தாலும், ஒரு நிமிடம் தன்னை மறந்து சிரித்துவிடுவான் அல்லா!....

Dr.Anburaj said...

புகாரி 4425. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்

ஜமல் போர் சமயத்தில், அதில் ஈடுபட்டவர்களுடன் நானும் சேர்ந்துகொண்டு (ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஆதரவாகப்) போரிட முனைந்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் எனக்குப் பயனளித்தது.

பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது,
அவர்கள்

'தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது" என்று கூறினார்கள்.

(இதுதான் எனக்குப் பயனளித்த நபி(ஸல்) அவர்களின் சொல்.) Volume :5 Book :64"

Dr.Anburaj said...

இதோ உலகத்தின் சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த சில பெண் முத்துக்கள்:

1. 1901 லிருந்து இன்றுவரை 33 பெண்கள் நோபல் பரிசுகள் பெற்றுயிருக்கின்றனர்.

2. மேரி கியுரி இரண்டு முறை நோபல் பரிசு வென்றவர் (1903, 1911)பொலோனியம் மற்றும் ரேடியம் கண்டுபிடித்ததற்காக (உலகத்தின் பெண் தலைவர்களின் பட்டியல் புகைப்படத்துடன் - WORLDWIDE GUIDE TO WOMEN IN LEADERSHIP)

3. சரோஜினி நாயுடு, அன்னை தெரேசா, இந்திய பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி, இலங்கை பிரதமர் பண்டாரநாயகே, தமிழ்நாட்டின் முன்னால் உயர்நிதீ மன்றத்தின் நீதிபதி பாத்திமா பீவி அவர்கள், இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ் கிரன் பேடி அவர்கள், இமயமலை சிகரத்தை அடைந்த முதல் ஜப்பானிய பெண் "ஜுன்கோ டெபை - ஆண்டு 1975" இன்னும் பலர்.

4. உம்முடைய சட்டம் நடைபெறும் சவுதி அரேபியாவில் பெண்கள், கார் ஓட்டுவதற்கு முன்பாகவே , காபிர் நாடாகிய (என் அருமை தாய் நாடு) இந்தியாவின் அருமை புதல்வி "கல்பனா சாவ்லா" வின்னிற்கு ராக்கெட்டில் சென்று விட்டாள். உம்முடைய சட்டம் நடைபெறும் நாட்டின் பெண்கள் தேர்தலில் ஓட்டுரிமை பெறுவதற்குள், காபிர் நாடுகளில் பெண்கள் முதலமைச்சர்கள், பிரதமமந்திரிகள் ஆகிவிடுகின்றனர்.

இவர்களின் அறிவு குறைபாடுள்ளதா? அல்லது நீங்கள் சொன்னது இஸ்லாமிய பெண்களுக்கு மட்டும் தானா? அல்லா, இஸ்லாமிய பெண்களையும் படிக்க வையுங்கள், "ஷீரின் எபாடி" போன்ற பல பெண்கள் நொபல் பரிசுகளை வெல்வார்கள்.

5. சரித்திரத்தில் முதன்முறையாக ஒரு இஸ்லாமிய பெண்ணிற்கு "2003 அமைதி நோபல் பரிசு" கிடைத்தது. அவர் தான் "ஷீரின் எபாடி". நான் ஒன்று சொல்லட்டுமா அல்லா? இந்த பரிசு இப்பெண்மனிக்கு எதற்காகத் கிடைத்தது தெரியுமா? இவர் ஈரானில் உள்ள பெண்களுக்கு எதிராக நடக்கும் இழி செயல்களிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும் காப்பாற்றும்படியாக அதிகமாக உழைத்ததால் தான்.

இவர் வழக்கறிஞராக பல ஆண்டுகள் பெண்களுக்கு சேவைசெய்தார். இவருக்கு நீதிபதியாக பதவி உயர்வு கிடைக்கும்போது, ஈரானின் இமாமகள்,

இது இஸ்லாமிற்கு எதிரானது, ஒரு பெண்ணின் அறிவுரையை ஆண்கள் கேட்கக்கூடாது

என்றும், பெண்களை ஆளுகை செய்கிறவர்களாக நியமிக்கக்கூடாது

என்றும் ஹதீஸில் முஹம்மது சொல்லியிருக்கிறார்,

எனவே இது செல்லாது என்றுச் சொல்லி, இவரை நீதிபதி பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

இவர் தன் முயற்சியை விடாது போராடிக்கொண்டிருந்தார். 15 ஆண்டுகளுக்கு பிறகு இதே இமாம்கள், இதே இஸ்லாம், இது செல்லும் என்றுச் சொல்லி மறுபடியும், இவரை நீதிபதி செய்தார்கள்.இவருடைய 15 ஆண்டுகளின் சேவை இஸ்லாம் சட்டத்தால் வீணாக்கப்பட்டது. எத்தனை பெண்களின் வாழ்க்கை மலர்ந்திருக்குமோ, தெரியாது. இதற்கெல்லாம் நீர் தான் காரணம். உம்முடைய பதில் என்ன அல்லா?

Because of this, we all spent a lot of time investigating whether this was really true. We read, researched, and wrote articles about it. Finally, after 15 years, I'm happy to say that they have accepted that women can be judges. At the moment, we have two female judges in the Appeal Courts. So you see, when they said women couldn't be judges, they said it was because Islam had said so. But now they say Islam allows female judges, so my point is that with time, interpretations differ. Source: Shirin Ebadi Interview

Dr.Anburaj said...

பாகிஸ்தானில் "ஹுதூத் சட்டம்" என்று ஒரு இஸ்லாமிய சட்டம் இருந்தது. குர்-ஆன் படியும், ஹதிஸ்படியும் தண்டனை (ஷரியா) கொடுப்பது தான் இதன் நோக்கம். இது 1979ல் கொண்டுவரப்பட்டது, 2006ல் ரத்துசெய்யப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் இன்னும் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதன்படி,ஒரு பெண்ணை ஒருவன் கற்பழித்துவிட்டால்,

அந்தப் பெண், நான்கு ஆண்களை சாட்சியாக் கொண்டுவர வேண்டும், கொண்டுவரமுடியவில்லையானால் அவளுக்கு வேசி என்று பெயர் சூட்டி, தண்டனை அளிக்கப்படும், சில நேரங்களில் கல்லெரிந்தும், ஊரின் நடுவில் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்படுவாள். இப்படி பல பெண்கள், ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டிலும் அழிந்துக்கொண்டுவருகிறார்கள்.

மூலம்:Wikipedia

In Pakistan, rape is dealt with under Islamic laws known as the Hudood Ordinances. These criminalise all sex outside marriage. So, under Hudood, if a rape victim fails to present four male witnesses to the crime, she herself could face punishment. This has made it almost impossible to prosecute rape cases. According to the country's independent Human Rights Commission, a woman is raped every two hours and gang-raped every eight hours in Pakistan. These figures are probably an under-estimation as many rapes are not reported. மூலம்: BBC

[19 வயது ஈரானின் நாஜினைன், நிலையை இங்கு படிக்கவும்]

அல்லாஹ், இதற்கு பதில் சொல்லும்

1. எந்த ஒரு சண்டாளனாவது, நான்கு சாட்சிகளை வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட காரியத்தைச் செய்வானா?

2. இப்படிப்பட்ட சட்டம் நாட்டில் இருந்தால், சில விஷமிகளுக்கு இப்படிப்பட்ட் வேலைகளைச் செய்ய அதிக தைரியம் வருமல்லவா?

3. இப்படிப்பட்ட வழக்குகள் பகிஸ்தானில் 2,10,000 நிலுவையில் உள்ளதே!, இந்த பெண்களின் நிலை என்ன?

4. இதற்கெல்லாம் காரணம் நீரல்லவோ அல்லா?

5. பெண்களின் அறிவு குறைவு என்று தெரிந்த உமக்கு, ஆண்களின் எண்ணங்கள் எப்படியிருக்கும் என்று தெரியாமல் போனதென்ன?

முடிவாக அல்லா, என் கேள்விகளை எல்லாம், உமக்கு தெரிவித்துள்ளேன். இன்னும் பல கேள்விகள் உள்ளது. அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன். ஒன்று மட்டும் நிச்சயம், "எந்த சமுதாயத்தில் பெண்கள் முன்னேறவில்லையோ, அந்த சமுதாயம் முன்னேறமுடியாது.".

இப்படிக்கு

ஆயிஷா

இந்தியா
ஈசாகுரான் என்ற வலைதளம். நன்றி.

Dr.Anburaj said...


இப்படியும் கோமாளித்தனமான உபதேசங்கள்.கருத்துக்கள் அரேபியாவில் உள்ளது

[5] ஸஹீஹ் புகாரி எண் 1144.

1144 அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்' என்று விடையளித்தார்கள். Volume :1 Book :19

[6] ஸஹீஹ் புகாரி எண் 1231.

1231 'தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி 'இதை இதையெல்லாம் நினைத்துப்பார்' எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடிக்கிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்களில் மூன்றா அல்லது நான்கா என்று தெரியவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தாச் செய்து கொள்ளட்டும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Volume :2 Book :22

[7] ஸஹீஹ் புகாரி எண் 3210.

3210. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஓட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள். என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Volume :3 Book :59

[8] குர்-ஆன் 2:106 & 16:101

Dr.Anburaj said...

அழகிய முன் உதாரணம் - அரேபியா15.

கர்த்தர் அறுவறுக்கும் நூதன மறுமணத்தை

முஹம்மதுவின் போதனையின் படி, ஒரு முஸ்லிம் தன் மனைவியை மூன்றாவது முறை தலாக் என்று சொல்லிவிட்டால் விவாகரத்து நடந்துவிட்டது போலாகும். அதன் பிறகு அப்பெண்ணை மறுபடியும் திருமணம் செய்ய விரும்பினால்,

அந்தப்பெண் வேறு ஒரு ஆணை திருமணம் செய்யவேண்டும், அவனோடு உடலுறவு கொள்ளவேண்டும்.

இதன் பிறகு இந்த மனிதன் அவளை விவாகரத்து செய்தால் தான் முதல் கணவன் அவளை மறுமணம் செய்யமுடியும். இந்த செயல் அறுவறுப்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட கொடிய தீய போதனைகளைச் செய்த முஹம்மதுவை ஒரு தீர்க்கதரிசி என்று விசுவாசிப்பார்கள்?[15]இந்துக்கள்

Dr.Anburaj said...


தாங்கள் மேற்படி பதிவுகளை வெளியிடுவீா்கள் என்று நம்புகின்றேன்

Dr.Anburaj said...



அரேபிய சாக்கடை எவ்வளவு அழுகிப் போய் முடை நாற்றம் வீசிக் கொண்டு இருக்கின்றது என்பதை எடுத்துக் காட்ட உதவியமைக்கு நன்றி.தங்களின் குறிப்பு ஏதும் வெளியாகவில்லையே ஏன் ?