Followers

Monday, January 26, 2015

சிரி(றி)ய சிறுவனை அறைந்த பர்கர் கிங் நிர்வாகம்!

A hungry young Syrian refugee boy has been beaten by a restaurant manager in Turkey's northwestern city of Istanbul for eating a customer's leftovers.

The incident, which occurred at a branch of fast food chain, Burger King, in Istanbul's Sirinevler district on January 21, received a massive angry reaction after shocked witnesses shared details and photos online showing the 11-year-old boy sitting next to blood-stained tissues beside him, AFP reported on Saturday.

-presstv
24-01-2015





துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள ஸ்ரீநெவ்லர் மாவட்டத்தில் சிரிய அகதிகள் கடந்த இரண்டு வருடங்களாக தங்கியுள்ளனர். அங்கு பர்கர் கிங் உணவகமும் உள்ளது. அந்த உணவகத்தில் வாடிக்கையாளர் சாப்பிட்டது போக மீதமுள்ளதை குப்பையில் கொட்ட வைத்துள்ளனர். அந்த வழியே வந்த ஒரு சிரிய நாட்டு அகதி சிறுவன் 11 வயதான ஹலில் பசியினால் அந்த உணவை எடுத்து சாப்பிட்டுள்ளான். இதனை தூரத்திலிருந்து பார்த்த உணவகத்தின் மேனேஜர் அந்த சிறுவனை அடித்து காலாலும் உதைத்துள்ளார். இதனால் அவனுக்கு ரத்தமும் வந்துள்ளது. இதனை புகைப்படம் எடுத்து இணையத்திலும் சிலர் விடவே அது பெரும் பிரச்னையாகி மாணவர்களை போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்துள்ளது. அந்த உணவகத்தை மாணவர்கள் தாக்கினர். எதிர்ப்பு அதிகமாவதைக் கண்ட நிர்வாகம் அந்த மேனேஜரை பணி நீக்கம் செய்துள்ளது.

சுமார் இரண்டு மில்லியன் சிரிய அகதிகளை துருக்கி காப்பாற்றி வருகிறது. மீதமான உணவை சாப்பிட்ட ஒரு ஏழையை தாக்கிய அதிகார வர்க்கத்தின் செயலாகவே போராட்டத்தினர் பார்க்கின்றனர். 'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று சூளுரைத்து முதலாளி வர்க்கத்தை வழிக்கு கொண்டு வந்த மாணர்களை பாராட்டுவோம்.

இந்த குளிரில் சரியான இருப்பிடமின்றி, சரியான உணவின்றி அல்லல்படும் சிரிய அகதிகளுக்கு கூடிய விரைவில் அமைதி திரும்பி தங்கள் நாட்டை சென்றடைய நாமும் பிரார்த்திப்போம்.

No comments: