
Chechnya holds huge rally over Charlie Hebdo cartoons
இத்தனை பிரச்னைகளுக்குப் பிறகும் திரும்பவும் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனை வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து செசன்யாவில் ஆயிரக்கணக்கான மக்கள் அமைதி பேரணியில் கலந்து கொண்டனர். செசன்யாவின் மத்திய பகுதியான க்ரோஷ்னியில் உள்ள மிகப் பெரும் பள்ளி வாசலில் இருந்து இந்த பேரணி புறப்பட்டது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு நாள் முன்னதாக பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் 'ஆயிரக்கணக்கில் மக்கள் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேரணியின் காட்சிகளை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார். அமெரிக்க எதிர்ப்பு நிலையை தற்காலங்களில் ரஷ்யா மேற்கொள்வதால் இஸ்லாமியர்களை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு புடின் தள்ளப்பட்டுள்ளதாக இதனை நாம் எண்ணலாம்.
தகவல் உதவி
அல்அரபியா
19-01-2015
No comments:
Post a Comment