Followers

Tuesday, January 06, 2015

கண் கலங்கினேன் - சென்னை விமான நிலையத்தில்!

கண் கலங்கினேன் - சென்னை விமான நிலையத்தில்!



கண் கலங்கினேன் - சென்னை விமான நிலையத்தில் கண்ட அனுபவம்.
கடந்த 01.12.2014 அன்று நானும் ஜமாத்தின் துணை தலைவர் சகோதரர் பர்சான் அவர்களும் சென்னையில் இருந்து இலங்கை வரும் வழியில், சென்னை விமான நிலையத்தில் சோதனை பகுதியில் விசாரனைக்காக நான் தடுத்து நிறுத்தப்பட்டேன்.

நமது ஜமாத் (SLTJ) வக்கீல் சகோ. ஷிராஸ் நூர்தீன் அவர்களுக்குத் தேவையான சில மருந்துகள் வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். அதன் மொத்தப் பெருமதி 25,000ம் இந்திய ரூபாய்கள். இதற்காகவே நான் சோதனை பகுதியில் தமிழ் பேசும் ஓர் அதிகாரியினால் நிறுத்தப்பட்டு விசாரிக்கப் பட்டேன்.

அப்போது, மேலதிக விசாரணைக்காக உயர் அதிகாரி ஒருவர் வந்து என்னை அழைத்து சென்றார். மாலை 4.00 மணி ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை வர வேண்டும். சரியாக 2.00 மணிக்கெல்லாம் என்னை விசாரிக்க குறித்த உயர் அதிகாரி அழைத்து சென்றார்.

நான் வாங்கிய மருந்துகளுக்கான அனைத்து ரிசிப்ட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் கையில் இருந்ததினால் பிரச்சினைகள் ஏதும் இல்லை. ஆனால் அது எனக்கு கிடைத்த சிறந்த சந்தர்ப்பம் என்றே நினைக்கின்றேன். - அல்ஹம்து லில்லாஹ் (எல்லா புகழும் இறைவனுக்கே!). ஆம் குறித்த அதிகாரி என்னை விசாரிக்க அழைத்து சில அடிப்படையான கேள்விகளை முன்வைத்தார்.

# எதற்காக தமிழகம் வந்தீர்கள்?

# யாரை சந்தித்தீர்கள்?

# எங்கு தங்கினீர்கள்?

# இலங்கையில் என்ன செய்கின்றீர்கள்?

இப்படி பல விதமான அடிப்படையான கேள்விகளை அவர் கேட்கும் போது யாரை சந்தித்தீர்கள்? எங்கு தங்கினீர்கள்? என்ற இரண்டு கேள்விகளுக்குமான எனது பதில் அவருடைய விசாரனையை நட்பு ரீதியிலான சந்திப்பாக மாற்றியது.

அதிகாரி : ‪#‎யாரை‬ சந்தித்தீர்கள்?

நான் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரை சந்தித்தேன்.

அதிகாரி : எங்கு தங்கினீர்கள்?

நான் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையகத்தில் தங்கினேன்.

அதிகாரி : அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?

நான் குறித்த அதிகாரிக்கு விபரமாக தெளிவு படுத்த ஆரம்பித்தேன். அப்போது குறுக்கிட்ட அவர், தவ்ஹீத் ஜமாத் தொடர்பில் நான் கடந்த ஒரு மாதமாகவே நன்றாகவே படித்துக் கொண்டேன், அந்த அமைப்பின் தலைவரின் உரைகளை பார்த்திருக்கின்றேன். தமிழகத்தில் நான் மரியாதை வைக்கும் அரசியல் தலைவர்களில் முதலிடம் அவருக்குத்தான் என்று ஜமாத்தை பற்றி பேசலானார்.
நான் வாயடைத்து மௌனமாக அமைதி காத்தேன். நான் அவருக்கு ஜமாத்தைப் பற்றி என்னவெல்லாம் சொல்ல நினைத்தேனோ அதைவிட அதிகமாகவே அவர் என்னிடம் சொல்லிவிட்டார். - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

தொடர்ந்து பேசிய அவர் சொன்ன ஒரு செய்தி கண் கலங்க வைத்தது. “தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கடந்த மாதம் நடத்திய தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தை 10 வருடங்களுக்கு முன் நடத்தியிருந்தால் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற சிறு எண்ணம் கூட இந்திய அளவில் ஏற்பட்டிருக்காது. - இந்தப் பிரச்சாரத்தை தமிழகத்தினை தாண்டி இந்திய அளவில் அவர்கள் செய்ய வேண்டும் அதுதான் எனது ஆசை.

"நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன்" என்று கூறி தான் வணங்கி வரும் ஒரு நபரின் புகைப்படத்தை காண்பித்தவர் - "தற்போது இவர் விஷயத்தில் சந்தேகம் எனக்குள் உண்டு. நான் இணையதளங்களில் இஸ்லாம் பற்றி படித்து வருகின்றேன். இங்கு கடமையில் இருக்கும் போது நிறைய பாதிரியார்களை சந்தித்திருக்கின்றேன். கிருத்தவம் தொடர்பில் கேட்டிருக்கின்றேன். இன்று தான் இஸ்லாம் மார்க்கம் தொடர்பில் நேரடியாக கேள்வி கேட்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு சில கேள்விகள் கேட்கலாமா?" என்று அவருக்கே உரிய பணிவுடன் வினவினார். தாராளமாக கேளுங்கள் என்ற போது, சில கேள்விகளை அடுக்கினார்.

‪"‎ISIS‬ , அல்காயிதா போன்ற இயக்கங்கள் சுவர்க்கம் செல்வார்களா?"

‪"ஜுப்பா‬ அணிந்து கொள்வது ஏன்?"

‪"மார்க்கம்‬ பேசும் நீங்கள் ஜுப்பா அணியவில்லையே அது ஏன்?"

‪"நான்‬ குர்ஆன் படிக்க அனுமதியுண்டா?"

‪"LTTE‬ யினர் இலங்கையில் செய்த யுத்தம் ஜிஹாதாகாதா?"

போன்ற பல கேள்விகளை முன்வைத்தார்.

இவற்றுக்கு நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது.... விமானத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு அதிகாரி உள்ளே வந்து விமானத்திற்கு இவரை அனுப்ப முடியுமா? என்று கேட்டார்.

"நான் இவரை அழைத்து வருகின்றேன். நீங்கள் போகலாம்" என்று பதில் அளித்து குறித்த அதிகாரியை அனுப்பியவர். தொடர்ந்து கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். இரத்த தானத்தில் தொடர்ச்சியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 08 வருடங்களாக முதல் இடம் பிடித்துள்ளது என்ற தகவலை சொன்ன போது ஆச்சரியப் பட்டவர் - சிறந்த காரியம், சிறந்த காரியம் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். ‪#‎சற்று‬ நேரத்தில் “கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள்” என்று கூறிவிட்டு வெளியில் சென்றவர். இன்னொரு அதிகாரியை அழைத்து வந்தார். அவரை என்னிடம் இவ்வாறு அறிமுகம் செய்தார்.

“இவர் எனது நண்பர், இவர் தான் எனக்கு தவ்ஹீத் ஜமாத் பற்றிய வீடியோக்களை அறிமுகம் செய்தார். அறிஞர் ஜெய்னுலாப்தீன் உரைகளை அடிக்கடி எனக்கு அனுப்பித் தருவார்" என்றார். அப்போது “ஹாய்” என்று கூறி என்னிடம் பேசிய குறித்த அதிகாரி “நாங்கள் உங்களுக்கு ஸலாம் சொல்லலாம் தானே?” என்று கேட்டார். - அப்போது தான் அவரும் ஒரு மாற்று மத சகோதரர் என்று புரிந்தது. - “தாராளமாக நீங்கள் சொல்லலாம், நாங்கள் பதில் சொல்வோம்” என்ற போது, என்னிடம் கை நீட்டி முஸாபஹா செய்து கொண்டார். பின்னர் பேசிய அவர், “எனது நண்பர் ஒருவர் எனக்கு இந்த வீடியோக்களை அனுப்பித் தருகின்றார். நான் நினைக்கின்றேன் அவர் தவ்ஹீ்த் ஜமாத் உறுப்பினர்", என்று கூறினார்.

சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின் பின் எனது தொலை பேசி இலக்கங்களை பெற்றுக் கொண்ட குறித்த மேலதிகாரி அவர்கள் "மீண்டும் நீங்கள் சென்னை வரும் போது கண்டிப்பாக என்னை சந்திக்க வேண்டும்". என்று அன்பாய் கோரிக்கை வைத்தவர்.

"வாருங்கள் உங்களை கொண்டு போய் விடுகின்றேன்" என்றார். "வேண்டாம் நான் போகின்றேன்" என்று அவரிடம் கூறிய போது "இல்லை, நானும் கூட வருகின்றேன்" என்று கடைசி செக்கிங் முடிக்கும் வரை கூடவே வந்தார். எந்தவொரு அதிகாரியும் அவரைத் தாண்டி நான் கையில் எடுத்து வந்த மருந்துகளை பற்றி விசாரிக்காத வண்ணம் கடைசி வரை என்னை அழைத்து வந்து விட்டார். மிக அருமையாக நடந்து கொண்ட அந்த அதிகாரிக்கு அல்லாஹ் நேர் வழியைக் காட்ட வேண்டும் என்று பிரார்த்தித்தேன்.

தவ்ஹீத் ஜமாத்தின் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் யார் காதுகளில் எல்லாம் எட்ட வேண்டும் என்று நினைத்தோமோ அவர்களின் காதுகளில் எல்லாம் தாராளமாக எட்டியுள்ளது. அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

- Rasmin Misc. Sltj Rakwana

1 comment:

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் இந்துக்களை கொன்று குவித்தால் அதற்கு பெயா் ஜகாத் என்று சொல்லப்படும். கலிபா யாா் என்ற சண்டையில் கலிபா உஸ்மானை முகம்மதுநபியின் அருகை குழந்தை மனைவி ஆயிசா ”காபீா்” என்று திட்டினாா். முதலாம் கலிபா அபுபக்காின் மகன் அபுபக்கா் உஸ்மானைக் கொன்றாா்.கலிபா பதவிக்காக முகம்மது நபியின் மருமகன் அலியும் மனைவி ஆயிசாவும் மோதினாா்கள். ஒட்டகப்போா் நடைபெற்றது. இதுவும் ஜகாத் என்று யாரும் சொல்வதில்லை