Followers

Saturday, January 03, 2015

குடிசை தொழிலை எதிர்க்கும் அரசை கண்டிக்கிறோம்! :-)



விழுப்புரம்: அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவர் போலி மதுபான ஆலை நடத்தி, அந்த மதுபானங்களை டாஸ்மாக் கடைகளுக்கு வினியோகித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகில் உள்ள அவ்வையார்குப்பம் கிராமத்தில் போலி மதுபான ஆலை இயங்கி வருவது குறித்து மதுவிலக்கு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அந்த கிராமத்தினுள் அதிரடியாக நுழைந்து காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, மாந்தோப்பில் இயங்கிவந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்த காவல்துறையினர், மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த மூன்று பேரை கைது செய்தனர். இந்த போலி மதுபான ஆலையை நடத்தி வந்த அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் மணிகண்டன், காவல்துறையினரிடம் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. மதுபானம் தயாரிக்க வைத்திருந்த எரிசாராயம், எந்திரம், காலி மதுபான பாட்டில் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கவுன்சிலர் மணிகண்டன் தனது மூன்று லாரிகளை டாஸ்மாக் நிறுவனத்திடம் ஒப்பந்த முறையில் இயக்கி வந்துள்ளார். டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபானங்களை ஏற்றி செல்லும் போது மாந்தோப்பில் நிறுத்தி டாஸ்மாக் மதுபானத்தை திருடிவிட்டு போலி மதுபானத்தை லாரியில் ஏற்றி கடைகளுக்கு அனுப்பி வந்ததும் தெரியவந்துள்ளது.

உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன் கடந்த மூன்று வருடங்களாக கவுன்சிலர் மணிகண்டன் இதை செய்துவந்த நிலையில், மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி பாண்டியன் நேரடியாக களத்தில் இறங்கி போலி மதுபான ஆலையை கண்டுபிடித்துள்ளார்.

நன்றி விகடன்
03-01-2015

No comments: