Followers

Wednesday, January 07, 2015

தமிழக இஸ்லாமிய இயக்கத்தினர் கவனத்திற்கு!

'ரிஹாப் இந்தியா பவுண்டேஷன்' என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் அதன் தலைவர் இ.அபூபக்கரும் பொதுச் செயலாளர் அப்ஸலும் அஸ்ஸாமில் குடி நீர் திட்டத்தினை தொடங்கி வைத்தனர். வறிய இஸ்லாமிய கிராமங்களைத் தேர்ந்தெடுத்து பல நலத்திட்ட பணிகளை இந்த அமைப்பு தொடர்ந்து செய்து வருகிறது.

நடக்கும் இந்துத்வா அரசு இஸ்லாமியர்களுக்கு நன்மை செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே இது போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் செல்வந்தர்களும் முன் வந்து வறிய மக்களுக்கு உதவ முன் வர வேண்டும். இறப்புக்கு பிறகும் இந்த நன்மை உங்களை சென்றடையும்.

தமிழகத்தில் 26 க்கு மேல் இஸ்லாமிய அமைப்புகள் இருப்பதாக கேள்விப் படுகிறோம். ஒவ்வொரு இயக்கத்தினரும் ஒரு பொதுநலப் பணியைக் கையிலெடுத்தால் மிகப் பெரும் மாற்றம் உண்டாகி விடாதா? இது போன்ற ஆக்கபூர்வ பணிகளை உங்கள் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி நன்மைகளை அதிகமதிகம் பெற்றுக் கொள்ள முன் வருவீர்களா?.

செய்வீர்களா..........? நீங்கள் செய்வீர்களா.........?





No comments: