
பொது மக்களுக்கு தூய்மையின் அவசியத்தை உணர்த்தி நகரத்தை சுத்தமாக வைத்திருக்க 50 பேர் அடங்கிய தன்னார்வ குழு தனது பங்களிப்பை அளித்தது. 'சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்: ஏனெனில் நாம் இந்த மண்ணை நேசிக்கிறோம்' என்ற எழுதிய பலகைகளை சுமந்த வண்ணம் சிறுவர்கள் மக்களுக்கு மத்தியில் தூய்மையின் அவசியத்தை பிரசாரம் செய்தனர். குப்பைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
ஜெத்தாவானது எப்போதும் பிஸியாக உள்ள இடம். மக்கா மதினா வரும் வெளிநாட்டவர் அனைவரும் முதலில் ஜெத்தாவிலேயே இறக்கப்படுவர். அங்கிருந்துதான் உம்ரா, ஹஜ் போன்ற காரியங்களுக்காக பிரித்து விடப்படுவர். எப்போதும் வெளி நாட்டவரின் ஆதிக்கம் உள்ள ஊராக இருப்பதால் குப்பைகளும் மலை போல் குவிந்து விடுகிறது.
இந்த செய்தி பிஜேபியின் சவுண்ட் சரோஜாவுக்கு தெரிந்தால் "மோடி அவர்களின் ஆலோசனையின் பேரிலேயே ஜெத்தாவிலும் தூய்மைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்று சொன்னாலும் சொல்வார். :-) எனவே நாம் கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்.
தகவல் உதவி
சவுதிகெஜட்
22-01-2014
No comments:
Post a Comment