Followers

Sunday, August 04, 2019

மும்பையும் குஜராத்தும் தண்ணீரில் மிதக்கின்றன.

மும்பையும் குஜராத்தும் தண்ணீரில் மிதக்கின்றன. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பல உயிர்கள் பலியாகியுள்ளன. பல கோடி சொத்துக்கள் நாசமாகியுள்ளன. போர்க்கால நடவடிக்கை எடுப்பதை விடுத்து காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதனை மூன்று பகுதிகளாக பிரிப்பதில் மும்முரமாகியுள்ளனர் மோடிக்களும் அமித்ஷாக்களும். இந்நிகழ்வானது ஏற்கெனவே அந்நியப்பட்டு நிற்கும் காஷ்மீரிகளை மேலும் தூரமாக்கும் செயல்.
அகண்ட பாரதத்தை இவர்கள் உருவாக்குவதற்கு பதில் அழகிய இந்தியாவை சோவியத் ரஷ்யாவைப் போல துண்டு துண்டாக்கி விட்டுத்தான் ஓய்வார்கள் போல. மொகலாயர்கள் அகண்ட பாரதத்தை உருவாக்கி விட்டுச் சென்றார்கள். இந்துத்வாக்கள் அதனை துண்டாக்குவதில் முனைந்துள்ளார்கள். இதில் யார் தேச பக்தர்?
போலோ பாரத் மாதா கீ ஜே!


2 comments:

vara vijay said...

Who broke india and pakistan.

Dr.Anburaj said...

அகண்ட பாரதம் தானாக உருவாகும் என்கிறாா் மகான் அரவிந்தா். பிரிந்த பகுதிகள் மீண்டும் இணையும் என்கிறாா் மகான் அரவிந்தா்.

விரைவில் 1947 ல் பாக்கிஸ்தான் பலுசிஸ்தான் காடையர்களை காஷ்மீருக்குள் அனுப்பி இந்துக்களை படுகொலை செய்து கைபற்றிய ஆசாத் காஷமீரை கைபற்ற வேண்டும்.இந்து புமியை மிட்போம். இதுவும் உறுதி.