Followers

Thursday, September 05, 2019

இந்துவை அடித்துக் கொன்ற இந்துத்துவா தீவிரவாதி

இசுலாமியன் என நினைத்து இந்துவை அடித்துக் கொன்ற இந்துத்துவா தீவிரவாதி சந்ராபான்!
டெல்லி ஜஃப்ராபாத் என்கிற பகுதியில் வாழ்ந்து வரும் சங்கீதா மற்றும் சுனில் சிங் தம்பதியரின் மகன் ஷஹில்.
சஹில், அவரது நண்பன் அபிஷேக் மற்றும் சிலர் நிகழ்வன்று சென்று கொண்டிருக்கையில் சந்ராபன் என்கிற இந்துத்துவ தீவிரவாதி வம்புக்கிழுத்து அவர்களை அறைந்துள்ளான். ஒவ்வொரு பெயரையும் கேட்ட தீவிரவாதி சந்ராபன், ஷஹில் என்கிற இந்த இளைஞனின் பெயரை கேட்ட மாத்திரத்தில் கடுமையாக தாக்கியுள்ளான். ஒரு நிலையில் மயக்கம் போட்டவுடன் ஷஹிலை விட்டு விட்டான். ஷஹிலின் நண்பர்கள் ஷஹிலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல, தாய் சங்கீதாவின் மடியிலேயே உயிரை விட்டுள்ளான் சஹில்!
ஷஹிலின் தந்தை சுனில் சிங்கும் அவனது நண்பன் அபிஷேக்கும் “ ஷஹில் முஸ்லிம் என நினைத்துத் தான் சந்ரபான் தாக்கினான்” எனக் கூறுகின்றனர்.
ஆனால், காவல் துறை இதை தெருச் சண்டை எனப் பதிவு செய்துள்ளது.


No comments: