Followers

Sunday, July 05, 2020

யுவன் சங்கர் ராஜாவின் மாற்றமும் ஒரு அன்பரின் எதிர் வினையும்!

யுவன் சங்கர் ராஜாவின் மாற்றமும் ஒரு அன்பரின் எதிர் வினையும்!
யுவனின் மாற்றத்தைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டு ஒரு இந்து நண்பர் எனக்கு பின்னூட்டம் இட்டிருந்தார். பதில் நீண்டு விட்டதால் அதனை தனி பதிவாக இட்டுள்ளேன். பார்த்து கருத்துக்களை தெரிவியுங்கள்.
//தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்து, தமிழ் கலாச்சாரத்தின் மூலம் செம்மையடைந்து இன்று அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுவது என்பது இவனை போன்ற துரோகி, பரதேசி, அயோகியம், முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது.....//
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'
'யாதும் ஊரே யாவரும் கேளீர்'
இதன் அடிப்படையில்தானே இஸ்லாமே கட்டப்பட்டுள்ளது. இந்த பழமொழிகள் 2000 வருடங்களாக நமது தாயகத்தில் உலவி வருகின்றன. ஆனால் இதனை பின்பற்றும் தமிழ் இந்துக்கள் எத்தனை பேர்?
இதன்படி உங்கள் வாழ்க்கையை அமைத்திருந்தால் யுவனின் இந்த மாற்றம் நடந்தே இருக்காது. தமிழர்களாகிய நீங்கள் உங்கள் வேர்களை மறந்தீர்கள். யுவன் அந்த ஆணி வேரினை தேடி தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.
அவர் இஸ்லாத்தை ஏற்ற ஒரு காரணத்திற்காக இவ்வாறு அவரை திட்டுவதுதான் உங்கள் மதத்தின் கொள்கையா? இன்றும் கூட சிரட்டையில் டீ தரும் தேநீர் கடைகளை மதுரையில் பார்க்கவில்லையா? இன்னும் கூட சில கிராமங்களில் செருப்பை கையில் பிடித்து பரிதாபமாக செல்லும் தாழ்த்தப்பட்ட மக்களை பார்த்ததில்லையா? சாதி மாறி காதலித்த குற்றத்திற்காக இளவரசனை இந்த இள வயதில் கொன்றது இந்த தமிழ் கலாசாரம் இல்லையா? சாமி கும்பிடக் கூட சாதி பார்த்து அனுமதிக்கும் கேவலம் இன்றும் நடைமுறையில் உள்ளதை மறுக்கப் போகிறீர்களா? எந்த முகத்தை வைத்துக் கொண்டு யுவனின் மன மாற்றத்தை குறை காண வந்து விட்டீர்?
//நாம் பிறப்பில் இருந்தே எம் அடையாளங்களை அழிக்க முடியாது .. அழிக்க முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் ..//
இந்த வெற்று மிரட்டல்கள் கதைக்கு ஆகாது நண்பரே! இதனால் மேலும் அழிவுப் பாதைக்குத்தான் உங்களை இட்டுச் செல்கிறீர்கள். யுவன் ஏன் இந்த மாற்றத்தை அடைய வேண்டும்? அதற்கான நிர்பந்தம் என்ன என்பதை சிந்தித்து பாருங்கள்.
//. புலம் பெயர்ந்தாலும் இடம் பெயர்ந்தாலும் .. எங்க குழந்தைகள் இங்கு பிறந்தாலும் அன்னிய மொழி மட்டுமே பேசக்கற்ருக்கொண்டாலும் ...அடையாளம் மாருமா??குணமும் + முகமும் +நிறமும் +முடியும் காட்டிக்கொடுக்கும். அதேபோல் பிறப்பில் இருந்தே தமிழர்கள் நாங்கள் எங்கமொழி தமிழ் எங்க கடவுள்...!!!//
இதை இஸ்லாமும் மறுக்கவில்லையே! தாய் மொழிக்கு உரிய அந்தஸ்தை கொடுக்கச் சொல்கிறது இஸ்லாம். இளையராஜா இந்துவாக இருந்தாலும் அவருக்கு உரிய மரியாதையை யுவன் செய்ய வேண்டும்: அவரை கடைசி வரை காப்பாற்ற வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. இந்த உலகில் தோன்றிய மூல மொழிகள் அனைத்தையும் மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்தது இறைவனே! இதனை குர்ஆனில் அழகாக எடுத்துக்காட்டுகிறான் இறைவன். தொன்மையான மொழியான தமிழ் இறைவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஒரு மொழி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் உங்கள் மதத்தில்தான் சமஸ்கிரதம் தேவ மொழி என்றும், தமிழ் நீச மொழி என்றும் அவமானப்படுத்தப்படுகிறது. அந்த பஞ்சாயத்துதான் இன்னும் சிதம்பரம் கோவிலில் தீர்க்கப்படாமல் இருக்கிறது. தமிழ் ஆர்வலரான நீங்கள் அதற்கு முயற்சிக்கலாமே! அப்படி தமிழை நீச மொழி என்று அவமானப் படுத்துபவர்களைத்தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்.
//இஸ்லாம் என்பது நம்மை அண்டி பிழைக்க வந்த, பிறகு நமது பலவீனத்தை பயன்படுத்தி நம்மையே ஆண்ட, மறைமுகமாக ஆண்டு கொண்டிருக்கும் அரபியர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் ஒரு முறை தான் இஸ்லாம் என்ற மதம்..//
தவறான புரிதல் தோழரே! உலக மொழிகள் அனைத்திற்கும் தூதர்களை அனுப்பி இறை வேதத்தையும் கொடுத்துள்ளதாக குர்ஆன் கூறுகிறது. அதன்படி நமது தாய் மொழியான தமிழ் மொழிக்கும் வேதமும் தூதரும் வந்துள்ளனர்.
//இந்த மதத்திற்கு ஒரு பலமான வரலாறோ, இலக்கியமோ, கலாச்சாரமோ,கல்வி அறிவோ, பண்பாடோ, வளமையோ கிடையாது....//
இலக்கியம் என்று நீங்கள் தமிழில் காட்டும் எந்த ஒன்றும் நமது அறிவை விரிவுபடுத்துவதாக இல்லை. அதிக இலக்கியங்கள் சிலை வழிபாட்டையும், பெண் அடிமையையும், வர்ணாசிரம கோட்பாடுகளையும் தாங்கி நிற்கிறது. இந்த கணிணி யுகத்திலும் தீண்டாமை இந்த அளவு நமது தமிழகத்தில் வேரூன்றியிருக்க மூல காரணமே நீங்கள் குறிப்பிடும் தமிழ் இலக்கியங்கள்தான்.
கலை என்ற பெயரில் பெண்களை கோவில்களில் ஆட விட்டு ரசித்தீர்கள். ஆட்டம் முடிந்தவுடன் அந்த பெண்களை அந்தப்புரத்துக்கு கொண்டு சென்று அனுபவித்தீர்கள். முடிவில் அந்த பெண்களை 'தேவரடியார்கள்' என்ற பெயரையும் சூட்டினீர்கள். கடைசியில் அந்த பெண்கள் வாழ்வை இழந்து விலை மாதுகளாக மாற்றப்பட்ட கொடுமை தெரியுமா உங்களுக்கு? அவர்களையும் ஒரு சாதியாக பாவித்து இன்று வரை அந்த குடும்பத்து வாரிசுகள் கூனி குறுகி நடப்பதை பார்த்திருக்கிறீர்களா? தஞ்சையில் ராஜ ராஜ சோழனுக்கு வைப்புகளாக இருந்தவர்களின் ஒரு தெருவே இன்றும் சாட்சியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இன்றும் நேபாளில் இவ்வாறு கோவிலுக்கு தேவரடியாராக நேர்ந்து விட்டு பெண்களை போகப் பொருளாக்கும் கூத்து நடந்து வருகிறது. இந்த பெருமையைத்தான் தமிழனின் கலாசாரம் என்று சொல்கிறீர்களா?
//மைக்கேல் ஜாக்சன் புகழ்பெற்ற பாடகர் கோடி சொத்து ஆனால் ,, தன் இனத்த்தின் நிறத்தை அவமானமாகக்கருதி வெருத்து வெள்லைத்தோலுக்கு ஆசைப்பட்டு கடைசியில் .. தோல்புற்ருநோயால் அவதிப்பட்டு வேதனையை மறக்க போதைக்கு அடிமையாகி .. மாண்டு போனார் ..//
ஆனால் மைக்கேல் ஜாக்ஸனின் அண்ணன் ஜெராமைக் ஜாக்ஸன் 'அப்துல் அஜீஸ்' ஆக முஸ்லிமாக மாறி அழைப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது வாழ்க்கை இன்றும் சந்தோஷமாகவே சென்று கொண்டுள்ளது. இதை கடைசி காலத்தில் உணர்ந்து மைக்கேல் ஜாக்ஸனும் இஸ்லாத்தை தழுவினார். ஆனால் அதற்குள் அவரது உடல் இறப்பை எட்டியது. தவறு மைக்கேல் ஜாக்ஸனிடம் தான்.
முகமது நபி ஒரு அரேபியர். அதிலும் இங்கு பார்பனர்களைப் போல அங்கு குரைஷிகள் உயர்ந்த குலம். அந்த குலத்தில் வந்த முகமது நபி 'குலப் பெருமையை எனது காலடியில் போட்டு மிதிக்கிறேன். அரபியன் அரபி அல்லாதவனை விட சிறந்தவன் இல்லை. ஒரு கருப்பு அடிமை உங்களுக்கு தலைவராக்கப்பட்டாலும் அவரை பின்பற்றி செல்வதுதான் உண்மை முஸ்லிமுக்கு அழகு' என்று சொன்ன அந்த வார்த்தை இன்றும் உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறதே! கருப்புத் தோலுக்கும் வெள்ளைத் தோளுக்கும் இஸ்லாத்தில் இடமில்லை. தூய இறை பக்தி ஒன்றுதான் இறைவனிடம் உங்களை நெருக்கமாக்கும் என்று சொல்லி அதனை நடைமுறைபடுத்திக் காட்டியும் வருகிறது இஸ்லாம்.
//எம்மதமும் நல்வழியைத்தானே போதிக்கிது அப்புறம் சைவத்தில் இல்லாது இஷ்லாத்தில் என்ன இருக்கிது?? ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்யலாம் .//
இஸ்லாத்துக்கும் சைவத்துக்கும் என்ன வித்தியாசம் என்பதை மேலே பட்டியலிட்டுள்ளேன். அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அடுத்து உங்கள் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவிகள். கிருஷ்ணனுக்கு இரண்டு மனைவிகள். ராமனின் தந்தை தசரதனுக்கு 60000 மனைவிகள் இருந்ததாக ராமாயணம் சொல்கிறது. நமது முன்னால் முதலமைச்சர் எம் ஜி ஆர் பலதார மணம் செய்தவர். அதே போல் தற்போது வாழ்ந்து வரும் கலைஞர் பல திருமணம் செய்து அனைத்து மனைவிகளோடும் சந்தோஷமாகவே வாழ்ந்து வருகிறார். எனவே பலதார மணம் செய்ய இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்கு இந்து மதத்திலேயே இருந்திருக்கலாம். தான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன் என்பதை யுவனே தனது பேட்டியில் கூறியுள்ளார். நானும் அதனை பதிவாக்கியுள்ளேன். படித்து தெளிவு பெறுங்கள்.
//இஸ்லாத்தில் சொல்லப்படும் அணைத்தும் அரேபியர்களை குறித்ததுதான், இதில் இந்தியாவையோ குறிப்பாக தமிழகத்தையோ, இந்திய முஸ்லிம்களை பற்றியோ அல்லது தமிழக முஸ்லிம்களை பற்றியோ எங்கும் ஒரு சிறு குறிப்பும் கிடையாது.//
'இந்த குர்ஆன் மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையைப் பிரித்துக் காட்டும்'
-குர்ஆன் 2:185
இங்கு மனிதர்கள் என்று உலக மக்களைப் பார்த்து குர்ஆன் பேசுகிறது. இது போன்று அனேக இடங்களில் 'மனிதர்களே!' என்று இந்த மனித குலத்தில் உள்ள தமிழர்களாகிய நம்மையும் பார்த்துதான் பேசுகிறது. எனவே தான் தமிழனாகிய யுவனின் மனதை இந்த குர்ஆன் மாற்றியது. கடவுள் மறுப்பை வாழ்நாள் முழுக்க சொன்ன தந்தை பெரியாரும் 'இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்த வழி' என்றார். நாத்திகனின் மனதையும் புரட்டிப் போடும் சக்தி இந்த குர்ஆனுக்கு உண்டு.
பார்பனியத்தை நமது நாட்டிலிருந்து விரட்ட பெரியார் எவ்வளவு முயன்றும் தோல்வியையே கண்டார். அவரது தம்பிகளும் கடைசியில் பார்பனியத்தின் கால்களிலேயே வீழ்ந்து விட்டனர். சுய மரியாதையை கொடுத்து உலக அரங்கில் தமிழனை தலை நிமிரச் செய்யும் ஆற்றல் இஸ்லாத்துக்கு உண்டு. அதனை சரியாக தேர்வு செய்த முஹம்மது ஹாலிக் யுவனை வாழ்த்தா விட்டாலும் தூற்றாமலாவது இருப்போம்.
Aashiq Ahamed, Nisar Marakkayar மற்றும் 3 பேர்

1 comment:

Dr.Anburaj said...

நிச்சயம் இறைவன் மனிதனை சமமான மன பரி பக்குவத்தில் படைக்கவில்லை. ஒருவரால் முஹம்மதுவால் உருவாக்கப்பட்ட இசுலாத்திற்குள் இன்று ஆயிரம் கோஷடிகள் 5000 பிரிவுகள்.
இந்த லட்சணத்தில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை முஸ்லீம்கள் கடைபிடிக்கின்றார்கள் என்பது சிரிப்பாக உள்ளது.பச்சைப் பொய்.