Followers

Thursday, February 05, 2015

தொழுகையில் என்னைக் கவர்ந்த துப்புரவு தொழிலாளி!





எனது அலுவலகத்தின் பின்னால் இருக்கும் பள்ளியில் நேற்று மதிய நேர (லுஹர்) தொழுகைக்கு போனபோது எடுத்த புகைப்படம் தான் இது. துப்புரவு தொழிலாளியாக தெருக்களை கூட்டி பெருக்கும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பள்ளியில் அமர்ந்திருப்பதைப்பதைத்தான் நாம் பார்கிறோம். இந்த பள்ளிக்கு தொழ வரக் கூடியவர்கள் பெரும்பாலும் மல்டி மில்லினர்களான சவுதி நாட்டைச் சேர்ந்தவர்கள். விலையுயர்ந்த உடைகளோடு மிக உயர்ந்த வாசனை திரவியங்களோடு மிகவும் சுத்தமாக வந்து தொழுகைக்கு அமர்வர்.

அதே பள்ளியில் கம்பெனி சீருடையான மஞ்சள் நிற அழுக்கு படிந்த உடையோடு அந்த பங்களாதேஷத்து முஸ்லிம் உரிமையோடு பள்ளி வாசலின் மத்தியில் அமர்ந்திருப்பதை பார்கிறோம். இது உலக பள்ளி வாசல்கள் அனைத்திலும் சர்வ சாதாரணமாக பார்கலாம். இது மட்டுமா... தொழுகை ஆரம்பமானவுடன் அந்த பங்காளி எங்கு விரும்புகிறாரோ அங்கு சென்று நின்று கொள்ளலாம். முதல் வரிசையிலும் பல முறை இவர் நின்று பார்துள்ளேன். அதோடு வரிசையில் நிற்கும் போது இவரது அழுக்கு உடையினால் சங்கோஜப்பட்டுக் கொண்டு சற்று விலகி நிற்பார். ஆனால் பக்கத்தில் நிற்கும் மல்டி மில்லினர் சவுதியோ அந்த இளைஞனின் தோள் பக்க துணியை பிடித்து இழுத்து தனது தோளோடு நெருக்கி நிறுத்திக் கொள்வார். ஏனெனில் தொழுகையில் இடைவெளி விட்டு நின்றால் அந்த தொழுகையின் நன்மையில் குறைவு ஏற்படும் என்று நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார். எனவே அந்த சவுதிகளுக்கு விருப்பம் இல்லா விட்டாலும் தொழுகையில் நன்மை குறைந்து விடக் கூடாது என்பதற்காக அந்த பங்காளியை தனது அருகில் இழுத்து நிறுத்திக் கொள்கின்றனர். அதிக நேரம் வெயிலில் அந்த இளைஞர் வேலை செய்வதால் உடையிலிருந்து வியர்வை வாசமும் சில நேரங்களில் வரும். பல நேரங்களில் அதை நானும் உணர்ந்திருக்கிறேன். அதையும் மீறித்தான் அந்த சவுதிகள் அந்த இளைஞனை தனதருகில் இழுத்து நிறுத்திக் கொள்கிறார்கள்.

இது மட்டுமல்லாது 'பள்ளி வாசலில் யாரும் குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து அமர வேண்டாம். யாரையும் தள்ளி விட்டுக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டாம்' என்று கட்டளையிட்டுள்ளதையும் பார்கிறோம். இதற்கு காரணம் அரசு முக்கியஸ்தர்கள், பணம் படைத்த செல்வந்தர்கள் குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கிக் கொள்ளாமல் இருக்கவும் வறியவர்களை பின்னுக்கு தள்ளி முதல் வரிசையை பிடிக்காமல் இருக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கம். இதனால் தான் நமது முன்னால் ஜனாதிபதிகள் டெல்லியில் பெருநாள் தொழுகையில் தாமதமாக வந்ததற்காக ரோட்டிலேயே நின்று தொழுதார்கள். அதிகார வெறியை இறைவனை தொழும் இடத்தில் காட்டக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. இதனை எல்லா நாட்டு முஸ்லிம்களும் இன்று வரை கடைபிடிக்கின்றனர்.

ஐந்து வேளை பள்ளியில் சென்று தொழுவதால் இறைவனுக்கு என்ன நன்மை என்று பலர் கேட்கின்றனர். இறைவனுக்கு இதனால் எந்த நன்மையும் கிடைத்து விடப் போவதில்லை. மாறாக மனித குலத்துக்குத்தான் இதனால் நன்மை. மனிதர்கள் நிறம், இனம், மொழி, பொருளாதார பாகுபாடுகளால் பிரிந்து கிடக்கிறோம். பிரிந்த மனிதர்கள் இறைவனை வணங்கும் போது அனைத்தையும் மறந்து நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்ற உணர்வை ஒவ்வொரு முறையும் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இதனை அனுபவத்தில் நானும் உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை பள்ளியில் சென்று தொழக் கூடியவர்களிடம் மொழி வேறுபாடு, இன வேறுபாடு, நிற வெறுபாடு, பொருளாதார வேறுபாடு இல்லாதிருப்பதைக் காணலாம். எந்த முஸ்லிமாவது மொழி வெறி, சாதி வெறி, தான் பணம் படைத்தவன் என்ற திமிரோடு நடந்தால் அவனிடம் ஐந்து வேளை தொழுகை இல்லாதிருப்பதை நீங்கள் காணலாம். எனவே இஸ்லாமியர்களுக்குள் தீண்டாமை முற்றாக ஒழிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே இந்த தொழுகைதான் என்றால் மிகையாகாது.

இனி நமது தமிழகத்தின் பக்கம் கொஞ்சம் வருவோம்.....

நாம் பிறந்து வளர்ந்த தாய் மண்ணனான தமிழகத்தை நினைத்துப் பார்கிறேன். அங்கும் இதே போன்று சீருடையில் குப்பை கூட்டுபவர்கள் உள்ளனர். அவர்களை நாம் தோட்டி என்று அழைப்போம். அவர்களின் அருகில் கூட நாம் செல்ல மாட்டோம். அதிகம் முகம் கொடுத்துக் கூட பேச மாட்டோம். பலர் அவர்களை தொட்டால் தீட்டு என்று தொடக் கூட மாட்டார்கள்.

இதை விடக் கொடுமையாக அவர்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். அவர்களை தனி சாதியாக பாவித்து திருமண உறவு முறை கூட இந்துக்களில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். பெரும் பான்மை சமூகம் என்று காட்டிக் கொள்வதற்காக இவர்களையும் இந்து மதத்தில் சேர்த்திருப்பர். ஆனால் இந்து மதத்துக்கும் நம் ஊர் தோட்டிகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இதனை நடைமுறையில் நாம் பார்க்கலாம். தோட்டிகளைப் போல் மற்ற கீழ் சாதிகளுக்கும் இதே நிலைதான். இவர்களின் எல்லைகள் கோவிலில் வரையறுக்கப்பட்டிருக்கும். அந்த எல்லையையும் கீழ் சாதிக்காரர்கள் மீற மாட்டார்கள்.

பள்ளிவாசலில் பார்த்த அந்த துப்புரவு தொழிலாளியான பங்காளியையும் நம் நாட்டு துப்புரவு தொழிலாளியான தோட்டிகளையும் ஒப்பிட்டுப் பார்தேன். நம் நாட்டு சகோதரனை நினைத்து வருத்தமே மேலிட்டது.

2 comments:

Anonymous said...

புத்த மதத்தை தோற்றுவித்த புத்தர் இந்தியாவில்
பிறந்து இந்திய கலாச்சாரமுறைப்படி வாழ்த்திருந்தாலும்
.
சீனா, மலேசியா, சிங்கபூர், ஜப்பான், இலங்கை, பர்மா,
தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில்
வாழும் புத்த மதத்தினர்,
.
புத்தரின் கொள்கைகளை மட்டுமே பின்பற்றுகிறார்களே தவிர யாரும் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றவில்லை
.
அவரவர்கள் வாழும் அவரவர் நாட்டின் கலாச்சாரத்தையே
விரும்பி அதன்படி வாழ்கின்றனர்..
.
அவரவர் நாட்டு மொழி வழக்கப்படியே பெயர்
வைத்துகொள்கின்றனர்
.
இதே ... நபிகள் நாயகம் இந்தியாவில் பிறந்து இசுலாம்
மதத்தை பரவ செய்து இருந்திருந்தால் ...
.
அரேபியர்கள் இசுலாம் மதத்தை பின்பற்றி இருப்பார்களா
என்பது சந்தேகமே ...
.
அப்படியே பின்பற்றி இருந்தாலும் ...இந்திய கலாச்சார
முறைப்படி கண்டிப்பாக வாழ்ந்திருக்கமாட்டார்கள்
.
அப்படி இருக்கையில், இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள்
அரேபிய கலாச்சார முறைப்படி ஏன் வாழவேண்டும்
.
அப்படியென்றால் உங்கள் கணக்குப்படி, மனிதனின் நாகரீகம்
அரேபிய பாலைவனத்தில் இருந்து தோன்றியதா ...
.
நாங்களும் தமிழர்கள்தான் என்று சொல்லிக்கொள்ள
ஆசைப்படும் நீங்கள் ...
.
ஏன் தமிழில் பெயர் வைத்துக்கொள்ள தயங்குகிறீர்கள்
.
மதமாற்றம் செய்யப்படுபவரின் தமிழ் பெயரை, முதலில்
அரேபிய மொழியில் பெயர் மாற்றம் செய்கிறீர்களே
.
ஏன் ....உங்களுக்கும், அல்லாவுக்கும் தமிழை பிடிக்காதா
.
தமிழில் பெயர் இருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்காதா
.
உங்கள் பாரம்பரியம், பண்பாடு என்பது மதம் சம்பந்தப்பட்டதா?
.
அல்லது மொழி இனம் சம்பந்தப்பட்டதா?
.
நீங்கள் அரேபியரா இல்லை தமிழரா?
.
முதலில் நீங்கள் தெளிவான நிலைக்கு வாருங்கள்.
.
வளைகுடா நாடுகளின் செல்வ செழிப்பால் தற்பொழுது இசுலாம் மறுமலர்ச்சி பெற்று மறுவடிவம் பெற்று இருக்கிறது
என்றே சொல்லலாம் ...
.
இதன் விளைவால் உலகத்தில் எல்லா இடங்களிலும்
இசுலாமியர்கள் மற்ற மத்தத்தினர்களுடன் தேவையில்லாமல் சண்டையிடுகின்றனர்
.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில இசுலாமிய பெண்கள் மட்டுமே சாதாரண துப்பட்டாவால் முகத்தில் முக்காடு மட்டுமே போட்டு இருப்பார்கள்
.
ஆனால் இப்பொழுதோ ...பள்ளியில் படிக்கும் சிறுமிகள் உட்பட
கருப்பு நிற அங்கி -பர்தா- அணித்து அருவருக்கத்தக்க அளவில் காட்சியளிக்கின்றனர்
.
கேட்டால் ...பர்தா பெண்களின் உடல் முழுவதும் மூடி
பாதுகாப்பு அளிக்கிறது என்கிறீர்கள் ...
.
அப்படி உடல்முழுவதும் கருப்புநிற உடையால் மூடி பேய் மாதிரி தோற்றமளித்து அப்படி என்னத்தை சாதிக்கபோகிறீர்கள்
.
இப்படி பேய் போல தோற்றத்துடன் நடமாடினால்தான்
சொர்க்கத்தில் இடம் கிடைக்குமா ...
.
முன்பெல்லாம் இல்லாமல், சமீபகாலமாக, இப்படி பேய்போல உடையனிய சொல்லி யார் உங்களை தூண்டுகிறார்கள்
.
உங்களுக்கு கட்டளைகள் எங்கிருந்து வருகின்றன
.
சமீப காலங்களில் பல நாடுகளில் இசுலாமிய தீவிரவாதிகள் புது புது பெயர்களில் உற்பத்தியாகி இருக்கிறார்கள்
.
உங்களுக்கு கட்டளை இடுபவர்கள்தான் அவர்களுக்கும்
கட்டளை இடுகிறார்களா ?
.
சமீபகாலமாக உங்களை பார்த்தாலே மனதில் ஒரு இனம்
புரியாத அச்சம் தோன்றுகிறது
.
ஏன் உங்களுக்கு மற்ற சமூகத்தினரோடு ஒன்றி வாழ
தெரியாதா ... ?
.
அல்லது ...மற்ற சமூகத்தினரோடு ஒன்றிவாழ கூடாதா..?
.
உங்களின் இந்த நடவடிக்கைகள், உங்களுடைய அடுத்த
தலைமுறையை தீவிரவாதத்துக்கு பலியாக்கி விடுமோ
என்ற அச்சம் எழுகிறது
.
குரான் படிங்க, அல்லாவை கும்பிடுங்க உங்களை யாரும்
தடுக்கவில்லை... குறை சொல்லவில்லை
.
அதுக்குன்னு ஏன் உங்களை நீங்களே வேறுபடுத்திக்கொண்டு அருவருக்கத்தக்க வகையில் இப்படி தனியா திரியிரிங்க
.
பிறகு எப்படி உங்களை மற்றவர்களுக்கு பிடிக்கும் ...
.
நீங்கள் மற்ற சமூகத்தினரோடு ஒன்றி வாழாமல், உங்களை நீங்களே வேறுபடுத்திகொண்டு வாழும்வரை
.
.
யாருக்குமே உங்களை பிடிக்காது ...

www.fb.com

Anonymous said...

அய்யா, அரபு தேசம்தாங்க உலகிலேயே சிறந்தது, அதனால தான் சொல்றோம் துலுக்கனுங்க எல்லாம் எங்க நாட்ட விட்டு போங்கன்னு