Followers

Wednesday, February 04, 2015

ஜப்பானையும் அமெரிக்காவையும் பீதிக்குள்ளாக்கும் புயல்!



ஜப்பானை பனிப் பொழிவு வாட்டியெடுக்கிறது. ஆறு அடி (1.8 மீட்டர்) பனிப் பொழிவு நேற்று அந்நாட்டை நிலை குலையச் செய்துள்ளது. ஹொகைடோ தீவில் மூடிய வழிகளை திறக்க ராணுவத்தினர் மிகுந்த சிரமத்தினை மேற்கொண்டனர். இனியும் இதே போன்ற ஒரு பனிப் பயல் வீசும் அபாயம் உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

'வீட்டிலேயே அமர்ந்திருங்கள். வெளியில் செல்வது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்' என்று அரசு அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் போஸ்டன் மாகாணத்திலும் பனிப் பொழிவு மிக அதிகமாக உள்ளதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

என்டிடிவி
03-02-2015

No comments: