Followers

Monday, February 16, 2015

சக்தி வாய்ந்த வெடிகுண்டுடன் ரஞ்சித் சர்மா கைது!

சக்தி வாய்ந்த வெடிகுண்டுடன் ரஞ்சித் சர்மா கைது!

உத்தர பிரதேச மாநில ராஜ்பவனில் ஒரு இளைஞன் ஓட்டி வந்த காரை போலீஸார் சோதனையிட்ட போது அதிச்சிகரமாக அந்த காரில் 3 சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் இருந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு வந்தவன் பெயர் ரஞ்சித் ஷர்மா. வெடி குண்டுகளோடு வேறு சில பொருட்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டது இந்துவாக இல்லாமல் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால் இந்நேரம் நமது பத்திரிக்கையில் எப்படி எல்லாம் தங்கள் கற்பனைகளை ஓட விட்டிருக்கும் என்று நினைத்துப் பார்தேன்.

தகவல் உதவி
தி ஹிந்து தினசரி
15-02-2015

--------------------------------------------------



பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஈஸ்வர சந்திர பெஹ்ரா!

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ) ஈஸ்வர சந்திர பெஹரா புகைப்படக்காரராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 10 மாதங்களாக பாகிஸ்தானின் உளவு அமைப்புக்காக இந்தியாவின் ஏவுகணைப் பரிசோதனை மையத்தை உளவு பார்த்துள்ளார்.

இவருடைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தன. இது குறித்து உளவுத் துறையிடமிருந்து வந்த எச்சரிக்கையின் அடிப்படையில் போலீஸார் இவரை கைது செய்து விசாரித்தனர். மேலும் இவரிடமிருந்து இரண்டு கணிண டிஸ்குகள், இரண்டு செல் பேசிகள், வங்கி பாஸ்புக் அகியவற்றை சோதனையிட்டதில் இவர் உளவு பார்த்தது உறுதியானது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேசிய காவல்துறை உயர் அதிகாரி பனிக்ரஹி கூறியதாவது 'பெஹராவின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து உளவுத் துறையிலிருந்து வந்த தகவலின் பேரில் அவரை நாங்கள் கைது செய்து விசாரித்தோம். விசாரணையின் போது அவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்காக வேலை பார்த்ததை ஒப்புக் கொண்டார்'

மாட்டிக் கொண்டவர் இந்து என்பதால் இதனை பெரும்பாலான ஊடகங்கள் மறைத்து விட்டன. இதே மாட்டிக் கொண்டவன் முஸ்லிம் பெயர் தாங்கியாக இருந்திருந்தால் என்னவெல்லாம் கற்பனைகளை கலந்து நமது ஊடகங்கள் அதனை காசாக்கியிருக்கும் என்று நினைத்துப் பார்கிறேன்.

தகவல் உதவி
உணர்வு வார இதழ்
12-02-2015.

No comments: