Followers

Sunday, February 22, 2015

தலித்தின் உடலை சுமந்து சென்ற இஸ்லாமியம்!



எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக காட்டிக் கொள்ள மட்டும் தலித்களை இந்துவாக காட்டுகிறது இந்துத்வம்.

மசூதிகளை இடிக்கவும் சர்ச்களை கொளுத்தவும் இதே தலித்களை பயன்படுத்திக் கொள்கிறது இந்துத்வம்.

கலவரங்களை உண்டு பண்ணி முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் கொன்று அவர்களின் சொத்துக்களை கொள்ளயைடிக்க தலித்களை பயனபடுத்திக் கொள்கிறது இந்துத்வம்.

அப்போ நானும் இந்துதானே என்று சாமி கும்பிட கோவிலுக்கு வந்தால் 'உள்ளே வராதே! சாமி குத்தமாயிடும்' என்று அவனை ஒதுக்குகிறது அதே இந்துத்வம்.

தலித்களும் இந்து மதம்தான் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பார்பனர் இதே தலித் உடலை இந்த முஸ்லிம் சுமந்து செல்வது போல் சுமந்து செல்வாரா?

அந்த பார்பனர் பின்பற்றும் இந்து மத வர்ணாசிரம சட்டங்கள்தான் அதற்கு உதவிடுமா? இந்துத்வாவிற்கு கொடி பிடிக்கும் சில இந்து நண்பர்களிடம் இதற்கு பதில் இருக்கிறதா?

ஆனால் அந்த தலித் இந்து மதமாக இருந்தாலும் அவனும் ஆதமுடைய வழி தோன்றல்தான் என்று குர்ஆன் கூறுகிறது. எனவே தான் இறந்த அந்த தலித் சகோதரனின் உடலை தனது சகோதரனாக பாவித்து தோளில் சுமந்து செல்கிறார் அந்த இஸ்லாமியர். இந்த சகோதரத்துவத்தைத்தான் இஸ்லாமும் விரும்புகிறது.

'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்'
-குர்ஆன் 4;1

1000 வருடங்களாக பல திட்டங்கள் போட்டும் ஒழிக்காத தீண்டாமையை இந்த ஒரு வசனம் உலக முஸ்லிம்களிடம் தீண்டாமையை ஒழித்துக் கட்டியது. இந்த வசனத்தின் உண்மையை உள் வாங்கிய ஒருவன் மனிதர்களை பேதப்படுத்தி பார்க்க மாட்டான். நான்கு வர்ணங்களாக பிரித்து மனிதர்களிடம் தீண்டாமையை கடைபிடிக்க மாட்டான்.

No comments: