Followers

Thursday, September 05, 2019

மோடியும் அமீத்ஷாவும் காணத் துடிக்கும் இந்து ராஷ்ட்ராவின் ஆரம்பம்.

மோடியும் அமீத்ஷாவும் காணத் துடிக்கும் இந்து ராஷ்ட்ராவின் ஆரம்பம்.
எழுதுகோல் பிடிக்க வேண்டிய கைகளில் வாள்கள் எதற்கு? இந்த நாட்டில் இவர்களுக்கு என்ன குறை? இந்து மதத்தை பின்பற்றுவதற்கோ அதன் கொள்கை படி வாழ்க்கையை ஓட்டுவதற்கோ இந்தியாவில் தடை ஏதும் உள்ளதா?
இவ்வாறு மிரட்டி பணம் பறிக்கும் தொழிலில் இறங்கி விட்டால் இனி இவர்கள் உழைத்து சம்பாதிப்பார்களா? ரௌடிஸம் பண்ணி சேர்க்கும் பொருளாதாரத்தை இனி இவர்கள் சாராயத்திலும், சூதிலும், விபசாரத்திலும் அல்லவா செலவழிப்பார்கள்? இவர்களின் தாய் தந்தையை காக்கும் பொறுப்பாவது இனி இவர்களுக்கு இருக்குமா? இவ்வாறு இந்து இளைஞர்களை குற்ற பரம்பரையாக மாற்றி மோடியும் அமீத்ஷாவும் எதனை இந்த மண்ணில் சாதிக்கப் போகிறார்கள்?
காலில் செருப்பணிந்து செல்லக் கூடாது, பொது குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது, கோவிலுக்குள் நுழையக் கூடாது, சாதி மாறி திருமணம் முடித்தால் கவுரவக் கொலை, இறந்த பிறகும் சாதி பார்த்து மயானத்தில் அடக்க மறுப்பது இதற்காகவெல்லாம் ஆயுதம் தூக்கி இருந்தால் அதனை வரவேற்கலாம்.
அதற்கு மாற்றாக இஸ்லாமியர்களையும், கிருத்தவர்களையும், சீக்கியர்களையும் முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஆயுதங்களை தூக்கியிருந்தால் இந்த இளைஞர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். 2000 வருடங்களுக்கு முன்பு இங்கு இஸ்லாமோ, கிருத்தவமோ, சீக்கியமோ இருக்கவில்லை. பிறகு ஏன் 40 கோடி சிறுபான்மை மதங்களைப் பின்பற்றுவோர் இந்தியாவில் வாழ்கின்றனர்? காரணம் இந்து மதத்தின் குளறுபடிகள். வர்ணாசிரம கொடுமைகளின் தாக்கத்தால் இந்து மதத்திலிருந்து ஓடி வந்தவர்களே இன்றைய இஸ்லாமியர்களும், கிருத்தவர்களும் சீக்கியர்களும். எனவே இந்து மதத்தை சீரமைக்காமல் நீங்கள் எவ்வளவு ஆயுதங்களை தூக்கினாலும் அதனால் இந்து மதம் வளர்ந்து விடாது. உங்களின் வன்முறை போக்கினால் வெறுப்புற்று இந்து மதத்தை துறக்கும் நிகழ்வே அதிகம் நடைபெறும். இது வருங்காலங்களில் அதிகம் நடைபெறத்தான் போகிறது. மோடியும் அமீத்ஷாவும் மீண்டும் தோல்வியையே தழுவப் போகின்றனர்.


1 comment:

Dr.Anburaj said...

அரிவாளை தூக்கிப் பிடித்துக் கொண்டு ஊரவலம் போவது -அனுமதிப்பது அனைத்தும் கலாச்சார வீழ்ச்சியாகும். நாகரீகமான ஒரு சமுதாயத்தில் இப்படி ஒருநாளும் நடக்க முடியாது ? சுவனப்பிரியனையும் நம்ப இயலாது. இரும்பு கொல்லர்கள் ஒருவேளை ஏதேனும் ஒரு விழாவை இப்படி கொண்டாடுவார்களாக இருக்கலாம்.

இந்த ஊர்வலம் நடந்த ஊா் தாலுகா மாவட்டம் மாநிலம்

ஆகிய தகவல்கள் இல்லையே.பதிவு செய்யலாம்.

முறையான இந்து சமய பயிற்சி பெற்ற பிறாமணர்கள் இப்படி ஊரவலம் போக மாட்டார்கள். என்ன செய்வது 1000 ஆண்டுகள் இந்த நாட்டை டச்சு போர்த்துக்கீசிய முகலாள துருக்கி அரேபிய காடையர்கள் கொள்ளையடித்து கொள்ளையடித்து பண்பை கலாச்சாரத்தை பாழ்படுத்தி வரு்ங்கால இளைஞா்களை 23ம் புலிகேசி அடிமைப்பெண் எமஜிஆா் உத்தமபுத்திரன் சிவாஜி அளவிற்கு நாசம் செய்து விட்டார்கள். அதில் இருந்து மீள வழிகாட்டும் சக்தி -ஒளி - சுவாமிவிவேகானந்தருக்கும் ஸ்ரீநாராயணகுருவிற்கும் உ்ள்ளது.அந்த ஒளி யின் தாக்கத்தில்இந்த இளைஞர்களை கொண்டுவந்து விட்டால் அற்புதம் நிகழும். அனைத்து சீலங்ளும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.