Followers

Tuesday, September 03, 2019

யார் இந்த போராக்கள்?

யார் இந்த போராக்கள்?

போராக்கள் எனப்படுவோர் ஷீஆக்களின் கேடுகெட்ட ஒரு பிரிவான இஸ்மாயீலிய்யா எனும் பிரிவைச் சார்ந்தவர்கள். 

ஷீஆக்களின் இமாம்களின் ஒருவரான ஜஃபர் ஸாதிக் மரணித்த பின் ஷீஆக்களில் சிலர் மூஸா என்ற அவரின் மகனே இமாம் என்பதாகவும் மற்றொரு சாரார் அவரின் மகன் இஸ்மாயீல் என்பவர்தான் இமாம் எனவும் கருத்துவேறுபாடு கொண்டனர். இஸ்மாயீலை ஏற்றுக்கொண்டோர்தான் இஸ்மாயீலிய்யா என அழைக்கப்பட்டனர்.

இவர்களில் மூன்று பிரிவினர் உண்டு.

1- தரூஸ்
2- போரா
3- ஆகானிய்யா அல்லது நிஸாரிய்யா

இம்மூன்று பிரிவுகளுமே தமது தவைருக்கு தெய்வீகத்தன்மையுண்டு என நம்புவோராகும்.

இந்த இஸ்மாயீலிய்யாக்களைப் பற்றி இமாம் இப்னு தைமிய்யா குறிப்பிடும் போது,

அல்லாஹ், அவனது தூதர், அல்குர்ஆன், ஏவல், விலக்கல், நற்கூலி, தண்டனை, சுவனம், நரகம், நபிமார்கள் முன்சென்ற மதங்கள் என எவற்றையும் யதார்த்தத்தில் இவர்கள் நம்புவதில்லை. எனக் கூறியுள்ளார்கள்.

இந்த போராக்கள் என்போர் ஹிஜ்ரி 5ம் நூற்றாண்டில் இஸ்மாயீலிய்யாக்களின் தலைவரான முஸ்தன்ஸிர் என்பவர் மரணித்த பின் அவரது புதல்வரான முஸ்தஃலீ என்பவரினால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் தனது சகோதரர் நிஸார் என்பரைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார்.

போரா என்பதன் கருத்து என்ன?

போரா என்றால் வியாபாரிகள் என்பதாகும்.

இவர்களின் ஆரம்பப் பெயர் முஸ்தஃலியா அல்லது தைபிய்யா என்றே காணப்பட்டது. இவர்களின் முன்னோர்கள் யமனில் வியாபாரிகளாகக் காணப்பட்டனர். இவர்கள் இந்தியாவுக்குச் சென்று அங்குள்ள முஸ்லிமல்லாதவர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட தருணத்தில் அவர்களில் சிலர் இவர்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டனர். அவர்களனைவரும் வியாபாரிகளாக இருந்ததனால் போரா என்ற பெயரினால் பிற்காலத்தில் அழைக்கப்பட்டனர்.

இவர்களின் இரு பிரிவினர் உண்டு.

1- தாவூதி போராக்கள். இவர்களின் தலைமையகம் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உண்டு. இவர்களின் தலைவர் மும்பாயில் வாழ்ந்துவருகிறார்.

2- ஸுலைமானி போராக்கள். இவர்களின் தலைமையகம் யமனின் தெற்குப் பகுதியில் உண்டு.

இவர்களின் முதலாவது பிரிவினரே இன்று இலங்கையில் மாநாடு நடத்துகின்றனர்.

அப்துல்லாஹ் உவைஸ் மீசானி


3 comments:

vara vijay said...

What about
Pj ?

Dr.Anburaj said...

சன்னி வாஹாபிய கடும் போக்காளரான அரேபிய பாக்கிஸ்தானிய மதவெறி பிடித்த சுவனப்பரியன் வழக்கம்போல் ஷியா முஸ்லீம்கள் மக்கள் மீது வெறுப்பை மத துவேசத்தை கொட்டியிருக்கின்றாா். அதிக கூட்டம் கூடிமாநாடு நடத்திவிட்டாா்கள். பொறாமையில் வெந்து அந்த எரிச்சலில் இந்த பதிவை செய்துள்ளாா். ஷியா முஸ்லீம்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக எந்த தகவலும் இல்லை.உலக அரங்கில் சன்னி வாஹாபி பயங்கரவாத காடையர்களால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் மக்கள் இந்த ஷியாக்கள். முஹம்மது இறந்த உடனே தலைமை சக்கரவர்த்தி பதவி யாருக்கு என்ன கேள்வி எழுந்தது. ஒரு சாராா் முஹம்மதுவின் மகள் பாத்திமாவை திருமணம் செய்த அலி என்பார்தான் தகுதியானவா் என்று அவரை முன் மொழிந்தார்கள்.ஆனால் பிறர கூடி மஹம்மதுவின் மனைவியின் அப்பா -மாமனாா் ஆன அபுபக்கா் என்பரை கலிபாவாக - மன்னா் ஆக தோ்வு செய்தனா். இந்ததோ்வுக்கு பாத்திமா ஆதரவு தெரிவிக்கவில்லை. பாத்திமா வசம் இருந்த யுதர்கிடமிருந்து கைப்றிறய பதக் நிலங்களை அபுபக்கா் பிடுங்கிக் கொண்டாா்.பாத்திமா சாகும் வரை அபுபக்கரிடம் பேசவில்லை. அபுபக்கா் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து இயற்கையாக இறந்தாா்.பின் உமா் பொறுப்பேற்றாா்.அப்போதும் அலியின் பெயா் முன்மொழியப்பட்டது. உமரும் முஹம்மதுவிற்கு பெண்கொடுத்த மாமனாா்தான். உமா் ஒரு முஸ்லீமால் கொலை செய்யப்பட்டாா். பின் முஹம்மதுவின் இரண்டு பெண்களை திருமணம் செய்த உதுமான் என்பவா் கலிபா ஆனாா். அவரும் கொலை செய்யப்பட்டாா். பின் அலி வழக்கம் போல் முன்மொழியப்பட்டாா். ஆயிசா -முஹம்மதுவின் மனைவி - அலியின் சின்ன மாமி - அதை எதிர்த்து மூவாய்யா என்ற தனது உறவினரை கலிபா பதவிக்கு முன் மொழிந்தாா். முடிவு பாஸ்ரா போா். வரலாற்றில் முதல் முதலில் முஸ்லீம்கள் இரண்டு அணியாகப் பிரிந்து யுத்தம் செய்தார்கள். 5000-10000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். அலி வெற்றி பெற்றாா். அலியின் போா் வீரா்கள் பாஸ்ரா நகரை கொள்ளையிடவும் பெண்களை கைபற்றி அடிமைப்பெண்களாக்கவும் முயன்றபோது அலி அதற்கு அனுமதி தரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த வீரா்கள் அலியின் ராணுவத்தை விட்டு விலகினார்கள்.படைபலம் குன்றிய காரணத்தால் அலியின் உத்தரவுகளை யாரும் மதிக்கவில்லை. அலியின் குடும்பம் படுகொலை செய்யப்பட்டது. நீதி நோ்மை சகோதரத்துவம் ..... இதுபோன்ற சீலங்கள் அரேபிய மண்ணில் என்றும் வளா்ந்தது கிடையாது. முஹம்மதுவை விட அதிக பண்பு நலன் கொண்டவா் அலி என்பது எனது முடிவு. காலப்போக்கில் அலி ஆதரவாளா்கள் தனியே பிரித்து விடப்பாட்டாா்கள். அதுபோ ஷியா முஸ்லீம ஆனது.அதுவும் பல ஜமாத்ஆக பிரிந்து பிரிந்து போய் புதிய பிிரிவுகள் தோன்றிக்கொண்டேயிருக்கின்றது.
சரிதானே சுவனப்பியன் .
பாத்திமா இறககும் வரை அண்ணன் அலியாா் ஏகபத்தினி விரதன். பாத்திமா செத்த பிறகு ஏகப்பட்ட பத்தினி விரதன். பலதாரங்கள் வீடு நிறைய அடிமை பெண்கள் -வைப்பாட்டிகள் என்று காமரசம் பருகி பெரிதும் மகிழ்ந்த அலிக்கு 33 குழந்தைகள்.மனிதருக்கு எவா் சிலவரில் .............. அலிக்கும பாத்திமாவிற்கும் பிறந்த ஹசன் ஹாசன் என்ற 3 பேர்களும் கொல்லப்பட்டாா்கள். மற்ற குழந்தைகள் என்ன அனார்கள் என்ற விபரம் நான் இன்னும்படிக்கவில்லை.

இரத்த ஆறு ஓடும் கதைகளை படிக்க எனக்கு பிரியம் இல்லை.

Dr.Anburaj said...



வீடியோவில் தோன்றும் சில பெண்கள் நெற்றியில் ”திலகம்” வைத்திருக்கின்றார்களே!

எப்படி.

இலங்கை ஷியா முஸ்லீம் பெண்கள் நெற்றிக்கு திலகம் வைப்பார்களா ?