Followers

Friday, January 02, 2015

ஆதாம் ஏவாள் - உண்மைப்படுத்துகிறது பிபிசி

ஆதாம் ஏவாள் - பிபிசிலிருந்து......

டி.என்.ஏவை வைத்து பல விஷயங்களை கண்டுபிடிக்க உபயோகிக்கலாம். வரலாற்று நிகழ்ச்சிகளையும், ஏன் சமீபத்தில் நடந்த குற்றங்களின் உண்மையையும் கண்டுபிடிக்க உபயோகிக்கலாம். ஆனால், டி.என்.ஏ வை வைத்து ஆதாம் ஏவாள் பற்றிய உண்மையைக் கண்டறிய முடியுமா ?

டி.என்.ஏ என்பது நமது மூதாதையர்களைப் பற்றி அறிய மிகவும் உபயோகமான கருவி. நமக்கும் நம் மூதாதையர்களுக்கும் இருக்கும் இணைப்பை நமக்கு பொதுவாக இருக்கும் டி.என்.ஏவைக் கொண்டு அறியலாம். பிரச்னை நடுவே பாலுறவு வருவதுதான்.

பாலுறவு நமது ஜீன்களை கலக்கிவிட்டுவிடுகிறது (recombination மூலமாக). ஒவ்வொருவரது ஜீன் அமைப்பும் தனிப்பட்டதாக வரும்படிக்கு, நம் பெற்றோரின் ஜீன்களை கலக்கி தாயின் ஜீனிலிருந்தும், தந்தையின் ஜீனிலிருந்தும் சிலவற்றை உதறி சிலவற்றை எடுத்துக்கொண்டு கலக்கிவிடுகிறது. நம்மிடம் நம் தாயிடமிருந்து பாதி, தந்தையிடமிருந்து பாதி வருகிறது. அது, நம் ஒரு தாத்தாவிடமிருந்து கால் பங்குதான் நமக்கு வருகிறது. ஒவ்வொரு தலைமுறைக்கும் இந்த பங்கு குறைந்து கொண்டே போகிறது.

அதிர்ஷ்டவசமாக, இந்த மேற்கண்ட சட்டத்துக்கு இரண்டு விதிவிலக்குகள் இருக்கின்றன.

மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏ

Y குரோமசோம்.

மிட்டோகாண்டிரியா என்பது நம் செல்களுக்குள் இருக்கும் இன்னொரு குட்டி செல். இது நம் செல்களுக்கு சக்தியைத் தரும் செல். இதற்கென்று தனியே ஒரு டி.என்.ஏ இருக்கிறது. உங்களிடம் இருக்கும் எல்லா மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவும் தாயிடமிருந்தே வருகிறது. அவளும் தன்னுடைய எல்லா மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவையும் தன்னுடைய தாயிடமிருந்தே (உங்களது பாட்டியிடமிருந்து) பெறுகிறாள். இது உடையாத சங்கிலியாக மூத்த மூத்த மூதாதையர் வரைக்கும் செல்கிறது.

மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவும் வம்சாவம்சமாக வழிவழியாக மாறாமலேயே வருவதில்லை. எப்போதாவது ஒருமுறை, இந்த மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவை பிரதி எடுக்கும்போது ஒரு எழுத்து விட்டுப்போய்விடுகிறது. இந்த தவறுகள் ஒரு நிலையான வேகத்தில் நம் மூதாதையர்களின் வம்சத்திலிருந்து இருக்கின்றன. இது ஒருவகை மூலக்கூறு கடிகாரம் போல, அறிவியலறிஞர்களுக்கு உதவுகின்றன.

இவ்வாறு நடக்கும் பிரதிஎடுக்கும் தவறுகளை வைத்து( mutations) இரண்டு பேர்கள் எவ்வளவு காலத்துக்கு முன்னால் ஒரே மூதாதையர் தாயைப் பெற்றிருப்பார் என்று கணக்கிடலாம்.

1980இல் ஆலன் வில்ஸன் என்ற ஒரு அறிவியலாளர் இது போன்றதொரு ஒப்புமை வேலையை செய்தார். உலகம் முழுவதும் இருக்கும் 135 பெண்களிடம் இருக்கும் மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவை எடுத்து, அவைகளில் ஒவ்வொருவரிடமிருந்து இன்னொருவர் எவ்வளவு தூரம் வம்சாவழியில் இருக்கிறார் என்பதை கணக்கிட்டார். அதே போல எல்லா பெண்களுக்கும் ஒரே தாய் இருந்திருந்தால் அவர் எவ்வளவு காலத்துக்கு முன்னால் இருந்திருப்பார் என்பதைக் கணக்கிட்டார்.

தாய்வழி முறையில் நாம் எல்லோரும் ஒரு பொதுவான தாயை சுமார் 150,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணிடம் பார்க்கிறோம்.

இன்னொரு வழியில் சொல்லப்போனால், ஒரு மனிதருடைய 10,000ஆவது முப்பாட்டி, நம் எல்லோருக்கும் 10,000ஆவது முப்பாட்டி.

வளை மிட்டோகாண்டிரியல் ஏவாள் என்று அறிவியலாளர்கள் அழைக்கிறார்கள்.

***

'ஏவாள் ' என்பவள் கறுப்பு முடியோடு, கறுப்பு தோல் நிறத்தோடு, சூடான புல்வெளிப்பாலைவனத்தில் உணவுக்காக அலைந்து கொண்டிருந்திருக்கலாம், பெரும்பாலும். அவள் நிச்சயம் மார்டினா நவரோத்திலோவா போல வலிமையான உடலோடும், விலங்குகளை தன் வெறும் கையாலேயே கிழிக்கக்கூடியவளாகவும் இருந்திருப்பாள் --- நியூஸ்வீக், 11 ஜனவரி 1988

***

இதற்குப் பொருள், அவள் வாழ்ந்தபோது அவள் ஒருபெண் மட்டும்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள் என்று பொருளல்ல. நம்மிடம் ஏராளமான பொதுவான தாய்மார்கள் இருந்தார்கள். அவர்களது ஜீன்கள் நிச்சயம் நம்மிடையே இருக்கின்றன. அவை நம் தந்தையர் வழியில் குழப்படி செய்யப்பட்டு, நம்மிடம் வந்திருக்கின்றன.

ஆதாம் விஷயம் என்ன ?

மிட்டோகாண்டிரியா போலவே, நம் தந்தையர் வழியை அறிய Y குரோமசோம் உதவலாம்.

Y குரோமசோம் தந்தை மூலமாக மகனுக்கு வருகிறது. ஆண்களுக்கு ஒரு X குரோமசோமும், ஒரு Y குரோமசோமும் இருக்கிறது. பெண்களுக்கு இரண்டு X குரோமசோம்கள் இருக்கின்றன. இந்த Y குரோமசோம் இருப்பதோ இல்லாததோதான் நீங்கள் ஆணா பெண்ணா என்பதை நிர்ணயிக்கிறது.

சமீபத்தில் அறிவியலாளர்கள், Y குரோமசோம் பிரதி எடுக்கப்படும்போது நிகழும் டி.என்.ஏ எழுத்துக்கள் தவறுகளைப் பற்றி ஆராய்ந்தார்கள். உலகெங்கும் இருக்கும் சுமார் 1062 ஆண்களது Y குரோமசோம்களை எடுத்து ஒப்பிட்டார்கள். நம் எல்லோருக்கும் பொதுவான மூத்த தாத்தா சுமார் 60,000 வருடங்களுக்கு முன்னால் இருந்தார் என்பதை அறிந்தார்கள். இவரை 'Y குரோமசோம் ஆதாம் ' என்று அழைக்கிறார்கள்.

http://www.bbc.co.uk/science/genes/dna_detectives/adam_and_eve.html
http://news.bbc.co.uk/2/hi/science/nature/2975862.stm

'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.'

-குர்ஆன் 4:1

ஆக அறிவியல் பூர்வமாக பரிணாமவியல் இந்த இடத்திலும் சறுக்கி விடுகிறது. ஒரு செல் உயிரி பின்னர் இருசெல் உயிரியாக பரிணமித்து கடலிலிருந்து தவழ்ந்து பின்னர் கால்கள் முளைத்து குரங்கு வரை வந்து அதன் பிறகு மனிதனாக பரிணமித்துள்ளோம் என்றெல்லாம் இனி கதை அளந்து கொண்டிருக்க முடியாது. டார்வினின் அனைத்து தியரிகளுக்கும் இன்றைய அறிவியல் ஆய்வுகள் வரிசையாக ஆப்பு வைத்துக் கொண்டிருக்கின்றன. இனி கடவுளை மறுக்க நாத்திகர்கள் வேறு ஏதாவது வழியை தேட வேண்டும். :-(

4 comments:

Dr.Anburaj said...

அல்லாஹ்வின் இந்த கவனிப்பு புதிதாக தோன்றியதல்ல. ஆதமிலிருந்தே தொடர்கிறது. அல்லாஹ், ஆதம் என்ற மனிதனையும் அவருக்கு ஒரு பெண் துணையையும் படைத்து சொர்க்கத்தின் சோலைகளில் சுற்றிவரச் செய்து இரசித்துக் கொண்டிருந்தான். அவர்களும் தங்களது தொடைகளுக்கிடையே இருப்பது என்னவென்றே தெரியாமல் இருந்து வந்தனர். அதைப்பற்றி அவர்களும் அல்லாஹ்விடம் எதுவும் கேட்கவில்லை. அல்லாஹ்வின் திருட்டுத்தனத்தை அறிந்த ஷைத்தான், அவர்களுக்கு உண்மையைப் புரியவைப்பதற்காக, அல்லாஹ் ஆதம் ஜோடிக்கு தடைசெய்து வைத்திருந்த பழத்தைப் புசிக்கச் செய்தான்.

குர்ஆன் 20:121
அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.அதாவது பழத்தை சுவைத்து வயிற்றுனுள் இறக்கியதுமே, அவர்களிடம் ஏற்பட்ட முதல் மாற்றம் வெட்கத்தலங்களைப்பற்றி தெரிந்து கொண்டதுதானாம். சுதாரித்த மறுகணமே, தாங்கள் கண்காணிக்கப்படுவதை உணர்ந்து கொண்டிருக்கலாம். ”இதென்ன கண்காட்சியா...? இப்படித் திறந்து கிடக்கிறதே?” என்று எண்ணி, கையில் அகப்பட்ட இலைதழைகளைக் கொண்டு அவசர அவசரமாக தங்களை மறைத்துக் கொள்ள முயன்றிருக்கலாம். இப்படியாக அல்லாஹ்வின் திட்டத்தில் விழுந்தது மண்!

Dr.Anburaj said...

உடைமாற்றுமிடம், கழிப்பறை போன்ற இடங்களில் திருட்டுத்தனமாக Camera வைத்து இரசிப்பவர்களைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆதம் தம்பதியரின் விஷயத்தில் மட்டுமல்ல எல்லா மனிதர்களின் விஷயத்திலும் சற்றேறக்குறைய அல்லாஹ் அப்படித்தான்! ஆதம் தம்பதியர் தங்களை மறைத்துக் கொள்ள முயன்றது அல்லாஹ்வை மிகவும் கடுப்பாக்கிவிட்டது.

’மணி’யை ஆட்டிக் கொண்டு திரிந்தவர்கள் இலைதழைகளுடன் நிற்கிறார்களே என்று வெறுத்துப் போய்விட்டான். மனிதன் சிந்திக்கத் துவங்கிவிட்டான் இனி அவனைக் கட்டுப்படுத்துவது சிரமம் என்று உணர்ந்தான். கோபத்தில் அவர்களை சபித்து சொர்க்கத்திலிருந்து வெளியேறுமாறு கூறினான். ஆயினும் குழப்பம் தீரவில்லை. தனது மிகப்பெரிய திட்டம் மண்ணைக் கவ்வியதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்படி இதை சரி செய்வது?இதில் ஒரு சந்தேகம் எனக்கு இன்றுவரை தீராமலேயே இருக்கிறது. அது அந்த தடுக்கப்பட்ட மரமும் அதன் ’வயாக்ரா’ கனிகளைப் பற்றியதுதான். மனிதன் சாப்பிடக் கூடாது என்றால் அந்த மரத்தை யாருக்காக படைத்து வைத்திருந்தான்? ஒருவேளை அல்லாஹ் தனக்காகப் படைத்திருப்பானோ? நீங்கள் யாரவது ஒரு இறைத்தூதரைச் சந்தித்தால் தயவு செய்து எனக்கொரு பதிலைக் கேட்டுச் சொல்லுங்கள்!


Dr.Anburaj said...

மிருகமாய் வாழ்நத மனிதன் படிப்படியாக சிந்தனை செய்ய ஆரம்பித்தான். அவன் சிருஷ்டியைப்பற்றி சிந்தித்தான். அவனுக்கு ஊகமாக சில கதைகளை கட்டினான். இதுபோன்ற யுகங்கள் பின்னா் உண்மையான சம்பவங்கள் உள்ளன. அவகாட்ரோ ஹபோதீசிஸ் யுகமாக சொல்லப்பட்டது.அற்பதமான விஞ்ஞான உண்மை 22 வருடங்களுக்குப் பின்னா் உண்மை என நிருபிக்கப்பட்டது. ஆதாம் -எவாள் கதை ஒரு கற்பனைக் கதை. நாவல்.இதைப்போய் உண்மையான வரலாற்றுச் சம்பவமாக பாவித்து விவாதங்கள் நடத்திக் கொண்டிருப்பது முட்டாள்தனம். 1.ஆதாம் -ஏவாளும் தொழுகை செய்தாா்களா 2.என்ன மொழியில் தொழுகை செய்தாா்கள் 3.அரபிப்பாடசாலை இருந்ததா ? 4.பேசியள மொழி என்ன 5.எழுத்து என்ன வடிவம் 6. புத்தகங்கள் அதுபோன்று பயன்பட்டது என்ன ? 7.ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இரண்டு மகன் பிறந்தான் 8.ஒருவன் ஒருவனைக் கொன்றான்.9மீதம் இருப்பது ஒரு தாய் -பெண் ஒருஆண் தந்தை மறு ஆண் மகன் 10. ஆபேலுக்கு சந்நியாசம் எழங்கப்பட்டதா ? 11.ஆபேலுக்கு மனைவி யாா் ? பெயா் என்ன 12.அறிவுக்கும் பண்பாட்டிற்கும் பொருத்தமற்ற இப்புராணக்கதையை நீங்கள் ஏன் முன்னிலைப்படுத்துகின்றீா்கள் 13.குப்பை என்று ஏன் கிழித்துப் போடுங்கள்.

Dr.Anburaj said...

உடை உடுக்க வேண்டும் என்ற உணா்வு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதற்கு சாத்தான்தான் காரணம். அல்லாவுக்கு பிடித்தது நிா்வாணம்.சாத்தானுக்கு பிடித்தது உடைஅணிந்து இருப்பது.இன்று உலகமே சாத்தானின் வழியில் ”உடை”
உடுத்தி வாழ்கின்றது. அல்லா வழி என்று பிதற்றுவர்கள் ” சாத்தானுக்கு பிாியமான உடைகளை களைந்து ஆதாம் ஏவாள் போல காட்டிக் கொண்டு வாழ வேண்டும். உடை உடுக்கக் கூடாது. அல்லாவுக்கு பிடிக்காதது. சுவனப்பிாியன் வாழத்தயாரா ?