Followers

Sunday, January 25, 2015

பிரியாணியின் மகிமையை உணர்ந்தவர்கள்! :-)



பிரியாணியின் சுவையை தேடிச் சென்று

விருந்தில் ஓசியில் கிடைக்கிறதே என்று

ஏகத்துக்கும் உள்ளே தள்ளி விட்டு மேலே

செரிக்க இரண்டு மாத்திரைகளையும் தள்ளி

மருத்துவருக்கு கணக்கின்றி வாரி வழங்கும்

வள்ளலாகித்தான் போனோம் நாமெல்லாம்!

வயிற்றை மூன்றாக்கி ஒன்றை உணவாகவும்

மற்றதை தண்ணீராகவும் மூன்றாவதை காற்றுமாக

வைக்கச் சொல்லி நமது நபிகள் நாயகம்

நமக்கு அறிவுறுத்தியதை மறந்ததும் ஏனோ?

உலகத்து வியாதிகளையும் தெரிந்தே சுமக்கும்

சில மனிதர்களைப் பார்தால் குணங்குடி மஸ்தான்

சாகிபின் பாடல் ஒன்றுதான் ஞாபகம் வருகிறது.

'வேட்டை பெரிதென்றே

வெறி நாயைக் கைப்பிடித்தே...

காட்டில் புகலாமோ....

கண்னே... ரகுமானே....."

------------------------------------------

ஹஜ்ரத் மிக்தாம் இப்னு மஃதீ கரிப் அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். ஆதமுடைய மக்களின் நிரம்பக் கூடிய பைகளில் மிகவும் கெட்டது அவர்களின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நேராக்கிக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்.
(நூல் : திர்மிதி)

ஹஜ்ரத் உமர் அவர்கள் ஒருமுறை தங்களது குத்பாவில் “நீங்கள் வயிறு நிரம்ப உண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். அப்படி வயிறு நிரம்ப உண்ணுவதால் தொழுகையில் சோம்பலும் உடலுக்கு நோவினையும் உண்டாகிறது. எனவே உணவில் நடுநிலையைக் கையாளுங்கள். அது உங்களின் பெருமையை தூரமாக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும். வணக்கம் புரிய சக்தி தரும். அறிந்து கொள்ளுங்கள்! மனிதன் தனது மார்க்கத்தை விட மனோ இச்சையை தேர்ந்தெடுக்காதவரை அவன் அழியமாட்டான்” என்று கூறியுள்ளார்.

விஞ்ஞானம் : பிரபல மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பார்ட் என்பவர் மிக நீண்ட ஆய்விற்கு பிறகு எப்போதும் தேவையை விட அதிகம் சாப்பிடும் மனிதர்களுக்கு கீழ்க்கண்ட நோய்கள் துளிர்விடுவதாக கூறியுள்ளார்.
1. Brain Diseases (மூளை சம்பந்தப்பட்ட நோய்கள்)
2. Eyes Diseases (கண் சம்பந்தப்பட்ட நோய்கள்)
3. E.N.T. Diseases (காது. மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள்)
4. Chest & Loung Diseases (தோள் புஷம், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள்)
5. Heart & Volves Diseases (இதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்)
6. Gall Bladder Diseases (பித்தப்பை சம்பந்தப்பட்ட நோய்கள்)
7. Diabetese (நீரழிவு நோய்)
8. High Blood Pressure (அதிக இரத்த அழுத்தம்)
9. Depression (மன அழுத்தம்)

8 comments:

Dr.Anburaj said...

நாம் வயிற்றில் 60சதம் உணவருந்தலாம். சாப்பிடும்போதும் சாப்பிட்ட உடனேயும் நீா் அருந்தக் கூடாது.விக்கல் எடுத்தால் மிக மிக சிறிய அளவில் தண்ணீா் அருந்த வேண்டும்.சாப்பிட்டு 1.15 மணி நேரம் கழித்து இரண்டு தம்ளா் தண்ணிீர்் அருந்த வேண்டும்.தொடா்ந்து தண்ணீா் தேவையான அளவு அருந்த வேண்டும்.பிாியாணியில் டால்டா நெய் இறைச்சி போன்ற அதிக கொழுப்புச் சத்துள்ள பொருட்கள் உள்ளன.சீரழிவிற்கு அதுதான் காரணம்.பல குடும்பங்களில் முஸ்லீம்கள் அரேபிய பண்பாட்டின் அடிப்படையில் -விவசாயம் அதிகமில்லாத அரேபியா - 3 வேளையும் அசைவ உணவு உண்கின்றனா். இதுவும் நல்லதல்ல.

Dr.Anburaj said...

குணங்குடி மஸ்தான்

சாகிபின் பாடல் ஒன்றுதான் ஞாபகம் வருகிறது. வாகாபியான தங்களுக்கு இவருடைய பாடல்கள் எப்படி நினைவுக்கு வரும் ? இந்து மதத்தின் அதவைதம் பேசும் குணங்குடி மஸ்தானை இசுலாமிய சமூகம் புறம் தள்ளி விட்டது.

Dr.Anburaj said...

குணங்குடி மஸ்தான்

சாகிபின் பாடல் ஒன்றுதான் ஞாபகம் வருகிறது. வாகாபியான தங்களுக்கு இவருடைய பாடல்கள் எப்படி நினைவுக்கு வரும் ? இந்து மதத்தின் அதவைதம் பேசும் குணங்குடி மஸ்தானை இசுலாமிய சமூகம் புறம் தள்ளி விட்டது.

Dr.Anburaj said...

குணங்குடி மஸ்தான்

சாகிபின் பாடல் ஒன்றுதான் ஞாபகம் வருகிறது. வாகாபியான தங்களுக்கு இவருடைய பாடல்கள் எப்படி நினைவுக்கு வரும் ? இந்து மதத்தின் அதவைதம் பேசும் குணங்குடி மஸ்தானை இசுலாமிய சமூகம் புறம் தள்ளி விட்டது.

Dr.Anburaj said...

இறைச்சிக் கடைகள் இருக்கும் வரை யுத்தக்களங்கள் இருந்தே தீரும் என்று ரஷ்ய பேரறிஞா் லியோ டாலஸ்டாய் கூறியிருப்பது நினைவுபடுத்தப் பொருத்தமானது. மனிதனுக்கு அசைவ உணவு அவசியம் இல்லை. நாக்கு ருசிக்கு அடிமையான மனிதன் அசைவ உணவு உண்டு தன் உடலைக் கெடுத்துக் கொள்கிறான். சைவஉணவு உண்டு மிகச்சிறந்த ஆரோக்கியம் பெற்று வாழும் ஜெனா்கள் பிறாமணா்கள் நிறைய பாா்க்கலாம்.ஐரோப்பிய நாடுகளில் சைவ உணவு பிரபல்யப்படுத்த பெரும் மக்கள் இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அசைவ உணவு குறைக்கும் அளவிற்கு ஆரோக்கியம் மே்படும் என்பது உறுதி. கண்மனி பொனமணி அரேபிய மணி முகம்மது இறைச்சியை சப்பு சப்பு என்று சப்பினாா் என்பதற்காக அரேபிய அடிமைகள் அசைவ உணவை விரும்பி உண்கின்றனா். அசைவ உணவை உண்ணாத முஸ்லீம்கள் பெரும் கொடுமைக்கு ஆளாகி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்த்தில் உள்ள ஒரு ஊாில் பத்ருதீன் எனற முஸலீம் நணப்ா் அசை உணவை மறுத்து வந்தத்றகாக அவரிடம் பல பொியவா்கள் நீ முகம்மதுவை அவமாியாதை செய்து விட்டாய் என்று திட்டியிருக்கின்றாா்கள். மனம் நொற்து என்னிடம் பிரச்சனையைச் சொன்னாா்.நான் என்ன செய்வது ? தங்கள் விருப்பம் என்று கூறவிட்டேன்.தற்சமயம் ஜோா்டான் நாட்டில் பணியாற்றி வருகின்றாா் என அறிந்தேன். திருச்செந்தூா் ஆதித்தனாா்கல்லூாியில் படித்தாா் பத்ருதீன்.

Unknown said...

Asaivam saapravangalukku thaana dr varuththam.saivam saapravangalukkum athe alavu varuththam irukku.

Unknown said...

Noiy yellaaraiyum thakkum.yenthe neram wenum yentraalum thaakkalaam.

Dr.Anburaj said...

NHM writer என்ற மென்பொருள் வலைதளத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்தால் கணினியின் கீழ்பகுதியில் மணியின் உருவத்திலி ஒரு சுட்டி தோன்றும்.சுட்டியை கிளிக் செய்து பாமினி யை கிளிக் செய்து அழகு தமிழில் அனைவருக்கும்
புாியம் வண்ணம் எழுதுங்களேன் நண்பா்களே!அரேபிய மதவாதநண்பா்களே!