Followers

Tuesday, September 03, 2019

லாஹூர் கவர்னர் ஹவுஸில் நேற்று இம்ரான்கான் ஆற்றிய உரை!

சீக்கிய சிறுபான்மை மக்கள் முன்னிலையில் லாஹூர் கவர்னர் ஹவுஸில் நேற்று இம்ரான்கான் ஆற்றிய உரை!
'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்....
உலகெங்கிலுமிருந்து வருகை புரிந்துள்ள சீக்கிய சமூகத்தினரை வரவேற்கிறேன். நீங்கள் அனைவரும் பாகிஸ்தான் சுலபமாக வந்து செல்ல மல்டிபிள் விஷாவுக்கு ஏற்பாடு செய்கிறோம்.. அதே போல் பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் இந்தியாவுக்கு சென்று வரவும் மல்டிபிள் விஷா ஏற்பாடு செய்கிறோம். ஒரு சில சிக்கல்கள் தற்போது உள்ளதால் காலதாமதமாகிறது. கூடிய விரைவிலேயே அனைத்தும் சரியாகும். மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் ஏற்படும் வன்மங்களை குறைக்க முயற்சிப்போம்.
எனது தாய் தந்தை இந்தியாவில் பிறந்தவர்கள். நான் பாகிஸ்தானில் பிறந்தேன். நாடு விடுதலை அடைந்தபோது எவ்வளவு கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டது என்பதை சிறு வயதிலிருந்தே சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். நான் பெரியவனாகி கிரிக்கெட் விளையாட இந்தியா சென்ற போது நான் நினைத்த இந்தியாவாக இல்லை. அந்த மக்கள் மிக அன்பாக என்னிடம் பழகினர். அன்பாக எங்கள் டீமை உபசரித்தனர். இந்தியா முழுக்க இந்த நிலையை நான் கண்டேன். ஆனால் தற்போது அரசியல் மாற்றங்களினால் அந்த நிலை இந்தியாவில் இல்லை.
எந்த ஒரு பிர்சனையும் போரினாலோ வன்முறையினாலோ தீர்த்து விட முடியாது. வன்முறையினால் ஒன்று முடிவுக்கு வந்தால் நான்கு பிரச்னைகள் புதிதாக உருவாகும். எனவேதான் நான் பிரதமராக பதவியேற்றவுடன் இந்தியாவோடு நட்பு பாராட்ட விரும்பினேன். ஆனால் இந்தியாவிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை.
இறைவன் உலக மக்கள் அனைவருக்கும் தூதர்களையும் இறை வேதங்களையும் அனுப்பியுள்ளான். அனைத்து தூதர்களும் முதலில் போதித்தது மனிதர்களிடம் இரக்கம் காட்டுதல்: அடுத்து எவருக்கும் வளைந்து கொடுக்காத நீதி. உலகில் உள்ள எல்லா மதங்களும் இதனைத்தான் போதிக்கின்றன. ஒரு முஸ்லிம் மற்ற மதத்தினரை கொடுமை படுத்தினாலோ கட்டாய மத மாற்றம் செய்தாலோ அவன் இஸ்லாத்துக்கு விரோதமாக செயல்படுகிறான். நபிகள் நாயகத்துக்கு எதிராக வேலை செய்கிறான். முஹமது அலி ஜின்னாவும் சுதந்திரத்தின்போது அனைத்து மதத்தினரும் தங்களின் மத கடமைகளை சர்வ சுதந்திரமாக பின்பற்றலாம் என்றுதான் பிரகடனம் செய்தார்.
ஆனால் இன்று அழகிய இந்தியா ஆர்எஸ்எஸ் சிந்தாந்தவாதிகளால் சின்னாபின்னப்படுகிறது. மாட்டுக் கறி வைத்திருப்பதால் கூட உயிர்களை எடுக்கிறார்கள். இந்து மதத்துக்கே இது விரோதமானது என்பதை ஏனோ அவர்கள் உணர்வதில்லை. ஹிட்லரின் பாசிச கொள்கையை கடன் வாங்கி தங்களின் சிந்தாந்தை நிறுவ முயற்சிக்கின்றனர்.
சீக்கியர்களாகிய உங்களுக்கு சர்வ சுதந்திரத்தையும் நாங்கள் தருகிறோம். உங்களின் வழிபாடுகளுக்கு எந்த தடைகளும் இங்கு கிடையாது. உங்களின் கொண்டாட்டங்களில் நாங்களும் பங்கு கொள்கிறோம்' என்ற ரீதியில் தனது பேச்சை தொடர்ந்தார் இம்ரான்கான்....
பல இன மத மக்கள் வாழும் ஒரு நாட்டின் தலைவர் இவ்வாறுதான் அனைத்து மக்களையும் அனைத்து செல்பவராக இருக்க வேண்டும். பாகிஸ்தான் சிறந்த தலைவரை பெற்றுள்ளது. இந்தியாவுடன் உள்ள முறுகல் நிலையை கூடிய விரைவிலேயே முடிவுக்கு கொண்டு வந்து பிராந்தியத்தில் அமைதி நிலவ முயற்சி எடுப்பாராக... இவரது முன் முயற்சிக்கு நமது நாட்டு தலைவர்களும் ஆதரவு கரம் நீட்டுவார்களாக!


3 comments:

vara vijay said...

Suvi what about ahamadias, shias in pakistan.

Dr.Anburaj said...

அமெரிக்காவில்
பாக்கிஸ்தானில் 40000 காடையர்கள் இருக்கின்றார்கள் என்பதை பகீரங்கமாக ஒப்புக் கொண்ட சமாதான புறா இம்ராம்கான். துலுக்கன் துலுக்கன் பாசம் இங்கே பகீரங்கப்படுத்தப்படுகின்றது.இம்ராம்கான் சொன்ன பொய்கள் சுவனப்பரியனுக்கு வேதமாக தோன்றுகிறது.நசீா் சுவனப்பிரியனின் பாசமும் பக்தியும் விசுவாசமும் உறவும் பாக்கிஸ்தானுக்குதான்.ரேசன்கார்டுக்குதான் இந்தியா.
---------------------------------------------------------------------------------------
பொய்
நான் பெரியவனாகி கிரிக்கெட் விளையாட இந்தியா சென்ற போது நான் நினைத்த இந்தியாவாக இல்லை. அந்த மக்கள் மிக அன்பாக என்னிடம் பழகினர். அன்பாக எங்கள் டீமை உபசரித்தனர். இந்தியா முழுக்க இந்த நிலையை நான் கண்டேன். ஆனால் தற்போது அரசியல் மாற்றங்களினால் அந்த நிலை இந்தியாவில் இல்லை.

பதில் பொய் .பச்சைப் பொய்.இந்தியாவிற்கு கிரிக்கெட் விளையாடவந்ததற்கு பின் இவன் வரவேயில்லை.பின் எப்படி ஒரு கருத்தை சொல்ல முடியும்.பாக்கிஸ்தானில் இருந்து பலா் இந்தியாவிற்கு மருத்துவ சிகிக்சை பெற வந்து கொண்டுதான் இருக்கின்றாா்கள். ராபீஸ் நோய்க்கு மருந்து இநதியாவில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.மேலும் உயிா்காக்கும் மருந்துகள் பலவும் இந்தியாவில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
மதவெறி இனவெறி இந்து காபீர் ஒழிப்பு திட்டத்தோடு செயல்படுவது பாக்கிஸ்தானும் அவனது நண்பர்கள் சுவனப்பிரியன் கூட்டமும்தான்.(இன்றும் போலியோ முற்றிலும் ஒழிக்கப்படாத நாடு பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்தான். இரண்டும் அரேபிய மதத்தை பின்பற்றும் கற்கால நாகரீகத்தை பின்பற்றும் மக்கள் வாழும் நாடு.)
-----------------------------------------------------
பொய் - எனவேதான் நான் பிரதமராக பதவியேற்றவுடன் இந்தியாவோடு நட்பு பாராட்ட விரும்பினேன். ஆனால் இந்தியாவிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை.
உண்மை - பச்சை பொய். பொய் என்று தெரிந்தும் அதை ஆதரித்து பதிவு செய்யும் சுவனப்பிரியன் ஒரு தேச துரோகி. பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பி காடைத்தனங்களை செய்ய அனுப்பி வரும் பாக்கிஸ்தானோடு மானம் உள்ள எந்த இந்திய அரசும் உறவு பாராட்ட முடியாது. பேடித்தனங்கள் நிறைந்த தரம் கெட்ட தலைவா்களைக் கொண்ட காங்கிரஸ் அரசு இழிவாக நடந்து கொள்ளும்.ஆனால் இந்து பண்பாட்டில் மலா்ந்த வீர சிவாஜியை சுவாமி விவேகானந்தரை கோல்வல்கரை குருஜியை வழிகாட்டியாக கொண்ட நமது பிரதமா் நாட்டின் சுயமரியாதை கௌரவத்தை பாதிக்கும் எந்த செயலையும் ஏற்றுக் கொள்ள மாட்டாா்.அமெரிக்க ஜனாதிபதி கூட சரிக்கு சமமாக தோள்தட்டி கைபிடித்து வேடிக்கை செய்து விளையாடு்ம் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கலாம். இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு விமானத்தை கடத்தி ஜெயிலில் இருந்து தப்பிய காடையர்களை முதலில் இம்ரான்கான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.பின்னா் இந்திய அரசு பேச்சு வார்த்தைக்கு முன் வரும். இல்லையேல் ஒருபோதும் பாரதிய ஜனதா அரசு அரேபிய மதவெறி கொண்ட மக்களை ஏமாற்றி ஏய்த்து வாழும் பாக்கிஸ்தானை மதிக்காது.
----------------------------------------------------------------------------

Dr.Anburaj said...

ஆனால் இந்தியாவிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை. இறைவன் உலக மக்கள் அனைவருக்கும் தூதர்களையும் இறை வேதங்களையும் அனுப்பியுள்ளான். அனைத்து தூதர்களும் முதலில் போதித்தது மனிதர்களிடம் இரக்கம் காட்டுதல்: அடுத்து எவருக்கும் வளைந்து கொடுக்காத நீதி. உலகில் உள்ள எல்லா மதங்களும் இதனைத்தான் போதிக்கின்றன. ஒரு முஸ்லிம் மற்ற மதத்தினரை கொடுமை படுத்தினாலோ கட்டாய மத மாற்றம் செய்தாலோ அவன் இஸ்லாத்துக்கு விரோதமாக செயல்படுகிறான். நபிகள் நாயகத்துக்கு எதிராக வேலை செய்கிறான். முஹமது அலி ஜின்னாவும் சுதந்திரத்தின்போது அனைத்து மதத்தினரும் தங்களின் மத கடமைகளை சர்வ சுதந்திரமாக பின்பற்றலாம் என்றுதான் பிரகடனம் செய்தார்.
--------------------------------------------------------------------------------------
அபிசீனியா மன்னருக்கு செஞ்சோற்றுக் கடன் யுத்தம் மூலம் திர்க்கப்பட மிரட்டல் மேற்கொள்ளப்பட்டது.உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது இசுலாமிய பண்பாடு.இசுலாமிய நயவஞ்சகம்.