Followers

Tuesday, January 27, 2015

10 முஸ்லிம்களின் உயிரைக் காத்த ஷாயில் தேவி!



சென்ற ஞாயிற்றுக் கிழமை பீஹாரின் அஜீஸ் பூர் நகரைச் சுற்றி இந்து முஸ்லிம் கலவரம் நடைபெற்றது. அஜீஸ்பூர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு கிராமம். இந்துத்வ தொண்டர்கள் வெறியோடு இந்த கிராமத்தில் புகுந்து முஸ்லிம்கள் நான்கு பேரை வெட்டிக் கொன்றனர். 25 முஸ்லிம் வீடுகளுக்கு மேல் தீ வைத்து நாசப்படுத்தினர். இதைப் பற்றி அக்கிராமத்தில் வாழும் ஷாயில் தேவி கூறுகிறார்.

'அந்த வெறி பிடித்த கூட்டம் ஆக்ரோஷமாக எங்கள் கிராமத்துக்குள் புகுந்தது. கொல்வதற்கு முஸ்லிம்களாக தேடினர். உடன் எனது பக்கத்து வீட்டு முஸ்லிம்கள் 10 பேரையும் எனது வீட்டுக்குள் மறைத்து வைத்தேன். எனது வீட்டுக்குள் புகுந்த அந்த கூட்டம் 'முஸ்லிம்கள் இங்கு இருக்கிறார்களா?' என்று அதட்டிக் கேட்டனர்.

'இங்கு யாரும் முஸ்லிம்கள் இல்லை' என்று பொய் சொன்னேன். வீட்டுக்குள் நுழைய முயற்சித்தனர். நான் சத்தம் போட்டு அவர்களை வெளியில் அனுப்பினேன். 10 உயிர்களை காப்பாற்றிய நிம்மதி கிடைத்தது' என்கிறார் ஷாயில் தேவி.

கலவரத்தில் தப்பி பிழைத்த 60 வயது ஆஷ் முஹம்மது கூறுகிறார் 'எங்கள் உயிரைக் காப்பாற்ற இறைவன் எங்களுக்கு ஷாயில் தேவியை அனுப்பியதாகவே உணருகிறோம். இவர் இல்லை என்றால் இன்று நாங்கள் உயிருடன் இல்லை' என்று நன்றி பெருக்கோடு கூறுகிறார்.

ஷாயில் தேவி மேலும் கூறும் போது 'முஸ்லிம்களை காப்பாற்றியது சிலருக்கு என் மேல் கோபத்தை உண்டு பண்ணியுள்ளது. சிலர் எனக்கு மிரட்டலும் விடுத்தனர். எனவே பயந்து போய் அருகில் உள்ள முஹம்மதின் வீட்டில் எனது இரண்டு பெண் குழந்தைகளோடு தஞ்சம் புகுந்து சில நாட்கள் வாழ்ந்தேன். மாவட்ட அரசு அதிகாரிகள் எனது உயிருக்கு உத்தரவாதம் கொடுத்ததால் இன்று எனது வீட்டுக்கு திரும்பியுள்ளேன்' என்கிறார்.

பீஹார் முதல்வர் ராம் மன்ஸ்ஹி 51000 ரூபாய் அன்பளிப்பாக ஷாயில் தேவிக்கு வழங்கியுள்ளார். போலீஸ் இந்துத்வாவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இவரைப் பாராட்டி காங்கிரஸ் கட்சி தனது கட்சி அலுவலகத்தில் குடியரசு தினத்தன்று கொடியேற்ற வைத்து கௌரவித்தது.
பிஹார் காங்கிரஸ் தலைவர் அசோக் சவுத்ரி, முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் ஷாயில் தேவி அழைக்கப்பட்டு தேசியக் கொடியை ஏற்றுமாறு கவுரவிக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறுகையில், "மிகவும் சாதாரணமானவளான என்னை, காங்கிரஸ் கட்சி அழைத்துக் கொடியேற்ற வைத்ததை மிகவும் பெருமையாக உணர்கிறேன்" என்றார். ஷாயில் தேவிக்கு புதிய வெள்ளை காட்டன் புடவையையும், சால்வையையும் பரிசாகத் தந்துள்ளனர் காங்கிரஸார். காங்கிரஸ் இதிலும் அரசியல் பார்கிறது. இவர்கள் முன்பு ஒழுங்காக ஆட்சி செய்திருந்தால் இந்த நாடு இவ்வளவு கீழ்த்தரமான ஆட்சியாளர்களை பெற்றிருக்கிறாது. இன்று புண்ணுக்கு மருந்திடுகின்றனர்.

தகவல் உதவி
என்டிடிவி

பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகள் இது போன்ற நாட்டுப் பற்றுடைய சக மனிதர்களை மதம் கடந்து நேசிக்கும் பண்புடைய ஷாயில் தேவி போன்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். கொலைகாரர்களெல்லாம் ஆட்சிக் கட்டிலும் இது போன்ற நல்ல உள்ளங்கள் கிராமங்களில் ஏழ்மையில் வாழ்ந்து வருவது இந்தியாவுக்கே உள்ள முரண்பாடுகள். நாட்கள் இப்படியே சென்று விடாது. தெய்வம் நின்று கொல்லும். அந்த நாட்களில் ஷாயில் தேவி போன்ற நல்ல உள்ளங்களை இந்த நாடு தலைவர்களாக பெறும். அதற்காக பிரார்த்தனை புரிவோம்.

தகவல் உதவி
என்டிடிவி

http://www.ndtv.com/article/india/how-a-hindu-widow-saved-10-muslims-in-bihar-riots-651837

1 comment:

Feroz said...

5021. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), "ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?" என்று கேட்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை" என்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
மேலும் "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை" என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

assalamu alaikum. sako intha hadhees neenga potathu than. intha hadees englishla venum. i tried hardly and unable to find. plz send to my mail id ferozhkhan09@gmail.com wait panren.