Followers

Sunday, October 07, 2018

மோடி மற்றும் பாசிசவாதிகளின் உண்மை முகம்

மோடி மற்றும் பாசிசவாதிகளின் உண்மை முகத்தை தோழர் மிக அழகாக தோலுரித்துக் காட்டியுள்ளார்.


9 comments:

Dr.Anburaj said...

பார்ப்பனன் மகன் வள்ளுவன் – அரங்கநாத முதலியார் தகவல்
ள்ளுவர் பற்றி சுமார் 200 ஆண்டுகளாக வழங்கி வரும் கதைகள் சுமார் 50 ஆண்டுகள் வரை எல்லாப் புஸ்தகங்களிலும் இடம்பெற்றன. அவற்றை எல்லோரும் அறிவது அவஸியம்.

1933ஆம் ஆண்டில் சென்னையில் ஆ.அரங்கநாத முதலியார் வள்ளுவர் குறளை ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 1949-ல் வெளியானது. அவர் சொல்லுவதாவது:
திருக்குறளாசிரியராகிய தெய்வப் புலமைத் திருவள்ளுவர் பற்றிக் கர்ண பரம்பரையாக வழங்கும் சரித்திரங்கள் பலவுண்டு. அவற்றையும் , மற்றும் பல அறிஞர்கள் ஆராய்சியில் கண்ட செய்திகளையும் ஆதாரமாகக்கொண்டு வள்ளுவர் பிறப்பு முதலிய வரலாறுகள் ஈண்டு தொகுத்துக் கூறப்படும்.
பிறப்பு

இவர் பகவன் என்ற வேதியர்க்கும் ஆதி என்பவளுக்கும் பிறந்தவரென்பதும், அவ் ஆதி என்பவள் நீச குலப் பெண் என்பதும், இவருடன் பிறந்தவர்- கபிலர், அதிகமான், ஔவை முதலிய அறுவரென்பதும் கர்ண பரம்பரையாக வழங்கிவரும் பழங்கதையாகும். இவ்வரலாற்றிற்கு கபிலர் அகவல் முதலியன ஆதாரமாம்.

ஆயினும்,எழுநூறு, எண்ணூறு வருடங்களுக்கு முற்பட்ட ஞானாமிர்தமென்னும் சைவ சமய நூல் யாளி தத்தன் என்னும் பார்ப்பனனுக்குப் புலைச்சி யொருத்தியிடம் கபிலர் அதிகமான் அறுவருடன் இவர் பிறந்தவரென்று கூறும். இவ்வெழுவருடைய ஊர்,குலம் முதலியவற்றின் வரலாறுகள் பழைய நூல்களில் வேறாகக் காணப்படுவதலால், மேற்குறித்த கர்ணபரம்பரையின் உண்மை தெளியக் கூடவில்லை என்பது அறிஞர் கருத்து.

குலம்

இவர் பிறந்த குடி, வள்ளுவக்குலம் என்பது பலர் கொள்கை. வள்ளுவராவார் யானை மீது முரசறைந்துஅரசனாணை சாற்றுவோர் ஆவர். இவர்கள் மன்னருக்கு உள்படு கருமத்தலைவராக விளங்கியவரென்பதும், திருநாள், படையெடுப்பு நாள், மணநாள் என்ற இப்பெருநாட்கல்லது பிறநாட்கு அறையாத முரசுடையோரென்பதும் பழைய நூலால் வெளியாகின்றன (பெருங்கதை).இவர் தாழ்ந்த குடியினரென்று சிவ ஞான முனிவரும் குறிப்பிடுவர் (சோமேசமுது மொழிவெண்பா). இவர் நான்முகன் அவதாரமென்பது திருவள்ளுவ மாலை பாடல்கள் பலவற்றால் (4, 28) வெளியாவதால், பார்ப்பன மரபினர் இவர் என்பதும், அரசாங்கத்தில் மன்னரைச் சார்ந்தொழுகி இராஜகாரிய துரந்தரராய் விளங்கினவரென்பதும் ஒரு சிலர் கொள்கை. இக்கொள்கைப்படி வள்ளுவர் என்பது கருமாத்யக்ஷர் என்னும் பொருளுடைய வல்லபர் என்னும் வடமொழியின் சிதைவாகும்.

‘இராஜசேகரரான வள்ளுவரும் கூடிச் செய்த கச்சம்’ (SII VOL.No.775) பாண்டியன் ஸ்ரீவல்லுவன் (E P REPORT 46 0F 1907) என்னும் சாஸனத் தொடர்களில் வல்லபர் என்பது வல்லுவர், வள்ளுவர் என்று திரிந்து வரும் முறையையும், சேரன் படைத்தலைவனொருவனுக்கு நாஞ்சில் வள்ளுவன் என்ற பெயர் வழக்குள்ளதையும் இதற்கு ஆதாரமாகக் காட்டுவர் ( VIDE தமிழர் நேசன் VOL.10 P.6-10).

எவ்வாறாயினும் அரசாங்க விஷயங்களில் ஆழந்தவறிவும் அனுபவமும் பெற்றுத் தாம் பிறந்த குலத்துள் அரசர் யாவருமுச்சிமேற்கொண்டு போற்றர்க்குரிய உயர் குடியிலவதரித்தவர் நம்புலவர் பெருமான் என்பதிற் சிறிதும் ஐயமில்லை.

Dr.Anburaj said...

பெயர்

திருவள்ளுவர் என்னும் பிரசித்தமான பெயரேயன்றித் தேவர், முதற் பாவலர், பொய்யில் புலவர், தெய்வப் புலவர், செந்நாப்போதார், பெருநாவலர் என்னும் பல பெயர்களும் இவர்க்கு வழங்கி வந்தன வென்பது திருவள்ளுவ மாலை முதலியவற்றால் விளங்குகிறது.

மனைவியார்

திருவள்ளுவர்க்குக் கற்புடை மனைவியாக விளங்கிய மனைவியின் பெயர் வாசுகி என்று கூறுவர். இவள் பெயர் மாதாநுபங்கி என்பது திருவள்ளுவமாலைப் பாடலினின்றும் ஊகிக்கலாகும். மாதாநுபங்கி என்பது தாயை நிகராகக்கொண்டு நடக்கின்ற ஒழுங்கினள் என்னும் பொருளுடையதாம். (திருக்குறள், மு.இராகவையங்கார் பதிப்பு, முகவுரை பக்கம் 4-5 கீழ்க்குறிப்பு)

(இதைத் தொடர்ந்து வள்ளுவரின் ஊர், மதம், காலம், குறளின் அமைப்பு பற்றி அரங்கநாத முதலியார் விளக்குகிறார்).

வள்ளுவரின் முதல் குறளிலேயே ஆதி பகவன் என்று தாய் தந்தை பெயரைக் குறிப்பிடுகிறார்.

ஜி.யூ. போப், பாப்ளி போன்றோரு வள்ளவரின் ஜாதி கீழ் ஜாதி என்று குறிப்பிடுகின்றனர்.

மனைவியின் பெயர் வாசுகி , மாதாநுபங்கி என்பன சம்ஸ்க்ருதப் பெயர்களே.

குறளின் பழைய சம்ஸ்க்ருத மொழி பெயர்ப்பில் அவர் பெயர் வல்லபாசார்யார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

Dr.Anburaj said...

இப்படியும் இருக்கின்றதே.தம்பி இசுலாம் ஒரு அரேபிய வல்லாதிக்க இயக்கம் என்றேனே உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

Arab women cannot marry non-Arab men (

because Allah has chosen the Arabs above others) (m4.2(1), p.523).

Dr.Anburaj said...


ஏழை தந்தையின் திருமணத்திற்கு பணஉதவியை மகன் செய்ய வேண்டும்.


A son is obliged to finance his poor father’s marriage (m12.5, p.549).

ஆருமையிலு் அருமை. அயிசாவை ஏன் திருமணம் செய்யக் கூடாது என்றாா் நம்ம அண்ணாச்சி அவர்கள்.

Dr.Anburaj said...

uslims cannot eat meat slaughtered by Zoroastrians, apostates, idol worshippers, and the Christians of the desert Arab tribe (j17.2, p.364).

முஸ்லீம் அல்லாதவா்களால் கொல்லப்பட்ட மிருகங்களைக் முஸ்லீம்கள் சாப்பிடக் கூடாது.

தொளுகை செய்யதாவனை தூக்கில் போட வேண்டும்

Not praying is unbelief; penalty is execution (f1.3, p.109).

ASHAK SJ said...

வள்ளுவர் பற்றி தகவல் பலது தவறானவை , பொய்யானது, உதாரணமாக மயிலாப்பூரில் பிறந்தது, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் மயிலாப்போர் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை, அவரின் உருவமும் பொய்யனதே, இன்னும் சொல்லப்போனால் அவரின் குறள் பலது இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது, உதாரணம் பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும், இது பார்ப்பன ஹிந்து மதத்துக்கு எதிரானது, அன்புராஜ் பாட்டிக்கு மேலாடை வழங்காதது இதற்க்கு எதிரானது, அன்புராஜின் சக மனிதர்களின் மூதாதையர்கள் தேவர்களுக்கு அடியார் ஆனது இதற்க்கு எதிரானது.

ASHAK SJ said...

எத்தனையோ அராபிய பெண்கள் அராபியர் அல்லாத ஆண்களை திருமணம் செய்துள்ளனர், இன்றும் ஏமனில் இது சாத்தியம்

ASHAK SJ said...

முஸ்லீம் அல்லாதவர்கள் அல்ல, முஸ்லிம்களே ஆனாலும் கொன்றால் சாப்பிடுவது தடை, முறையாக இறைவனின் பெயரை சொல்லி சரியாக அறுத்ததே ஹலால்

ASHAK SJ said...

தொளுகை செய்யதாவனை தூக்கில் போட வேண்டும்

இந்த கட்டுக்கதை எங்கே உள்ளது ?