Followers

Wednesday, October 17, 2018

ரியாத் மண்டலம் நடத்தும் - 86 வது இரத்ததான முகாம்

ரியாத் மண்டலம் நடத்தும் - 86 வது இரத்ததான முகாம்
ஒரு மனிதரை வாழ வைத்தவர் ஒட்டு மொத்த மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் - குர்ஆன் 5:32
நேற்று இரவு தொழுகை முடிந்தவுடன் நானும் சகோதரர் ராஜகிரி சர்புதீனும் எங்கள் அலுவலகத்துக்கு எதிரே உள்ள பள்ளி வாசலில் இரத்ததான முகாம் போஸ்டரை பள்ளி நிர்வாக அனுமதியுடன் ஒட்டினோம். நாங்கள் மட்டும் அல்ல. எங்களைப் போல் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ரியாத் முழுக்க வேலை செய்து வருகின்றனர். நாளை ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணியிலிருந்தே தொண்டர்கள் சுறுசுறுப்பாகி விடுவார்கள். ஆட்களை அவர்களின் இருப்பிடத்திலிருந்து அழைத்து வருவதும், ரத்த தானம் முடிந்தவுடன் அவர்களை அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்ப்பதிலும் மாலை ஐந்து மணி வரை பிஸியாக இருப்பார்கள். கிடைக்கும் ஒரு நாளான இந்த ஓய்வு நாளை இறைப் பொருத்தத்தில் செலவிடும் சகோதரர்களுக்கு இறைவன் அதற்கான கூலியை வழங்குவானாக!




No comments: