Followers

Thursday, October 04, 2018

அர்னப் கோஸ்வாமி பேட்டி எடுக்கிறார் ஏ ஆர் ரஹ்மானை!

அர்னப் கோஸ்வாமி பேட்டி எடுக்கிறார் ஏ ஆர் ரஹ்மானை!
அர்னப் பேட்டிகளை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்குத் தெரியும். ஹிந்தியாக இருந்தாலும் ஆங்கிலமாக இருந்தாலும் எதிராளியை தாளித்து எடுத்து விடுவார். இவரிடம் பேட்டி கொடுக்க வருபவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள்.
இங்கு ஏ ஆர் ரஹ்மானிடம் மிகவும் பவ்யமாக பேட்டி எடுக்கிறார். அவரது இசையில் மயங்கியதால் கூட இருக்கலாம்.  பேட்டியின் நடுவே 'சூஃபி இசையில் எனக்கு பிடித்த ராக் ஸ்டார் பாடலை எனக்காக பாடுங்கள்' என்று கேட்கிறார். 'குன்ஃபய குன்' என்ற பாடலை பாடுவதற்கு முன்னால் 'இப்பாடலில் குர்ஆனின் வரிகள் வருகிறது. எனவே எனது காலணிகளை கழட்டி விட்டு பாடுகிறேன் என்று அந்த பாடலை பாடுகிறார். புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ரஹ்மானை குர்ஆன் எந்த அளவு ஆட்கொண்டுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
'குன்பயகூன்' என்ற வார்த்தையை இறைவன் ஏன் பயன்படுத்தினான்? அதன் அறிவியல் உண்மை என்ன என்பதெல்லாம் ரஹ்மானின் இசையோடு கூடிய பாடலில் நமமால் உணர முடியாது. ரஹ்மானின் இசையும் அப்பாடலின் ராகமும் தான் நம் மனதில் நிற்கும்.
//ஓ துறவிகளின் அரசரே;
வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே;
உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள்
எல்லைகளைத் தாண்டி வாருங்கள்
உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள் //
இது போன்ற வார்த்தைகள் தர்ஹாவில் அடங்கியிருப்பவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்: நாம் கேட்கும் பல பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறார் என்று நம்பி கேட்பதாக அமைக்கப்பட்டுள்ளது.
தர்ஹாவில் அடங்கியிருப்பவரின் சுய ரூபம் உங்களுக்கோ எனக்கோ தெரியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம். நித்தியானந்தாவைப் போல் மக்களுக்காக வெளிவேஷம் போட்டவராகவும் இருக்கலாம் உண்மை நிலை இறைவனுக்கே தெரியும்.
குர்ஆனில் வரக் கூடிய இந்த சொற்றொடரை தழுவி இந்த பாடல் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த பாடலை இறைவனை நோக்கி பாடுவதாக சொன்னாலும் ஓரளவு அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் படத்தில் இந்த பாடல் ஒரு தர்ஹாவுக்கு முன்னால் அமர்ந்து பாடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட்டது.
'உங்களின் இடத்திலே வந்து எனது தலையை வைக்கிறேன்' என்று மற்றொரு பாடலில் ரஹ்மான் பாடுகிறார். இறைவனைத் தவிர வேறு எவருக்கும் நமது தலையை கீழே வைக்கலாகாது என்பதை என்று ரஹ்மான் உணருவாரோ தெரியவில்லை.
எனவே ரஹ்மான் அவர்களே! நீங்கள் சினிமாவுக்கு இசை அமைத்து பல பாராட்டுக்களை பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களின் தனிப்பட்ட விஸயம். ஆனால் இஸ்லாமிய கருத்தை இசை மூலம் கொடுக்க முயற்சிக்கும் இந்த பாணியை விட்டு விடுங்கள். இதற்கு இஸ்லாமியரிடத்திலும் மற்ற மதத்தவரிடத்திலும் எந்த வரவேற்பும் கிடைக்காது. சில கைத்தட்டல்கள் வேண்டுமானால் கிடைக்கலாம். மனதை மாற்றி விடும் சக்தி உங்கள் இசைக்கு இல்லை. இஸ்லாத்தை ஏற்ற 90 சதமான பேர் அதன் கருத்துக்களை விளங்கித்தான் வந்தார்களேயொழிய சூஃபித்துவ இசையினால் அல்ல என்ற உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள்.
இறைவன் உங்களுக்கு குர்ஆனின் உண்மையான ஞானத்தை மேலும் அதிகப்படுத்துவானாக!


8 comments:

vara vijay said...

Instead of nithi you can quote pj

Dr.Anburaj said...

ஹிந்து மதமும் புத்த மதமும் வலியுறுத்தும் அற்புதமான ஒரு உண்மை : யத் பாவம் தத் பவதி

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய்!

புத்தரின் நேரடி உபதேசங்கள் தொகுக்கப்பட்ட அதிகாரபூர்வமான புத்த மத நூல் தம்ம பதம்.

அதில் யமகவக்கோ என்ற பகுதியில் வரும் உண்மை இது:

All that we are is the result of what we have thought it is founded on our thoughts, it is made up of our thoughts. If a man speaks or acts with an evil thought, pain follows him, as the wheel follows the foot of the ox that draws the carriage.

“நாம் எதுவாக இருக்கிறோமோ அது நாம் நினைத்ததன் படியே தான்! அது நமது எண்ணங்களின் அடிப்படையில் அமைகிறது; அது எண்ணங்களால் உருவாக்கப்படுகிறது. ஒரு மனிதன் தீய எண்ணங்களைப் பேசினாலோ அல்லது அதன் படி நடந்தாலோ வண்டி எப்படி அதை இழுக்கும் காளைமாடுகளைத் தொடர்கிறதோ அது போல அவனைத் துன்பம் தொடர்கிறது.
எண்ணியர எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)

என்பது வள்ளுவர் வாக்கு.

யோக வாசிஷ்டம் பல ஸ்லோகங்களில் இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. எடுத்துக்காட்டாக முக்கிய ஸ்லோகம் ஒன்றின் கருத்தை இங்கு பார்க்கலாம்:

The thought that one entertains repeatedly issues forth in the branches of impulses and actions. (IV – 21 -20)
ஒரு மனிதன் திருப்பித் திருப்பி எண்ணும் எண்ணங்கள் அவனைத் தூண்டி விட்டு அவனைச் செயல்பட வைக்கிறது.

மனதையும் எண்ணங்களையும் பற்றி யோக வாசிஷ்டம் நன்கு விளக்குவதோடு அதன் விளைவையும் கூட அற்புதமாகச் சொல்கிறது.

புத்த மத உரைகளில் இடம் பெறும் நகைச்சுவை கதை ஒன்று உண்டு.

ஒரு இளம் புத்த பிக்ஷு மடாலய வாழ்க்கை பிடிக்காமல் அதிலிருந்து விடுபட்டு உலகியல் வாழ்க்கையைத் தொடர விரும்பினார்.அடுத்த மாதத்திலிருந்து நான் உலக வாழ்க்கைக்குத் திரும்பி விடுவேன் என்று அவர் எண்ணலானார்.அந்தச் சமயம் பார்த்து தலைமை பிக்ஷு அவரை அழைத்தார்.

“அப்பா! எனக்குத் தலைவலியாயிருக்கிறது. கொஞ்சம் எண்ணெய் தேய்த்து தலையை மசாஜ் பண்ணி விடேன்” என்றார்.

கையில் எண்ணெயை எடுத்துக் கொண்ட இளம் பிக்ஷு தலைமை பிக்ஷுவின் தலையில் தடவினார். பின்னர் மசாஜ் செய்ய ஆரம்பித்தார். அவரது எண்ணங்கள் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தன.

“முதலில் இங்கிருந்து வெளியேறி விடுவேன். வெளியேறியவுடன் இந்தக் காவி உடையைத் தூக்கி எறிந்து விடுவேன். பின்னர் நல்ல ஒரு வேலையைப் பார்த்து அதில் அமர்வேன். அதன் மூலம் நிறைய பணம் சம்பாதிப்பேன். பணம் வந்தவுடன் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்வேன். ஆனால் இந்தப் பெண்களை நம்பவே முடியாது. நாம் சொன்னபடி கேட்க மாட்டார்கள். அப்படிச் சொன்னபடி கேட்காவிட்டால் அடிக்க வேண்டியது தான்! எப்படி அடிப்பேன்? இதோ இப்படி அடிப்பேன்!” இவ்வாறு நினைத்த அவர் தலைமை பிக்ஷுவின் தலையில் மடேர் மடேர் என்று அடித்தார்.

Dr.Anburaj said...

வலி தாங்க முடியாத தலைமை பிக்ஷு எழுந்து ஓடினார்.

பின்னர் என்ன நடந்தது என்று நாம் சொல்லத் தேவையில்லை!

நகைச்சுவை கதையாக இருந்தாலும் இது தான் நமது வாழ்க்கையில் உண்மையில் ஏற்படுகிறது.
எண்ணங்கள் சாதாரணமாக சிறிய அளவில் முளை விட்டு ஆரம்பித்து பெரிய மரமாக ஆகும் போது விளைவு பெரிதாகிறது.ஆகவே தான் எண்ணத்தைக் கவனி என்கின்றன நமது அறநூல்கள்.
இதையே புத்த மதமும் ஜைன மதமும் கூறுகிறது!

எண்ணத்தைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்காகவே பல்வேறு சடங்குகளை ஹிந்து மதம் உருவாக்கியுள்ளது. இவை மனதைப் பண்படுத்தி ஒரு லயத்தை உருவாக்கி அதன் மூலம் பண்பட்ட மனிதனாக வாழ வழி வகுக்கிறது.

தம்மபதமோ, திருக்குறளோ, யோக வாசிஷ்டமோ எதுவாக இருந்தாலும் அறநூல்கள் வலியுறுத்துவது ஒரே உண்மையைத் தான் : யத் பாவம் தத் பவதி

நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய்

***

Dr.Anburaj said...

பைத்தியத்துக்கும் லிதியம்; பாட்டரிக்கும் லிதியம்! (Post No.5494)

லிதியம் (Lithium)என்னும் உலோகம் மூன்று இடங்களில் மிகவும் பயன்படுகிறது.

மன நோய் உள்ளவர்களுக்கான மருந்தில்;

ஹைட்ரஜன் குண்டுகளில் (Hydrogen Bombs);

நாம் உபயோகிக்கும் கைக் கடிகாரம் முதலிய கருவிகளில் பாட்டரிகளாக (Lithium Battery).

லிதியம் பற்றிய சுவையான விஷயங்களை முதலில் பதிவ செய்கின்றேன்.
ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் 1817ல் இதை ஒரு விஞ்ஞானி johan August Arfvedson கண்டு பிடித்தார்.

லிதியம் கார்பனேட் (Lithium Carbonate) என்னும் உப்பு மன நோயாளிகளுக்கு மிகவும் சொற்ப அளவில் கொடுக்கப்படுகிறது. இதைக் கண்டுபிடித்த கதை சுவையான கதை.

ஒரு காலத்தில் கீல்வாத நோய்க்கு இதை மருந்தாகப் பயன்படுத்தினர். இப்பொழுது மனநோய் மருந்துகளில் பயன்படுகிறது. யூரிக் அமிலம் (Uric Acid) உடலில் அதிகமாகும் போது மூட்டு வலியை உண்டாக்கும் நோய் வருகிறது. ஆஸ்திரேலிய டாக்டர் ஜான் கேட் (John Cade) என்பவருக்கு திடீறென்று ஒரு ஐடியா தோன்றியது மன நோயும் ஒரு மனிதனின் ரத்தத்திலுள்ள அதிக இரசாயனப் பொருள்களால்தான் உண்டாக வேண்டும் என்று நம்பினார். கடுமையான மன நோயுள்ளவர்களின் சிறு நீரை கினி பிக் (Ginea Pigs) எனப்படும் பிராணிகளுக்குக் கொடுத்தார். அவை இறந்துவிட்டன. பிறகு லிதியம் உப்பு கலந்த கரைசலை அவைகளுக்குக் கொடுத்தபோது அவை மந்த (lethargic) கதியில் செயல்பட்டன. ஆனால் பின்னர் நல்ல நிலைக்கு வந்து துள்ளி ஓடின. இதையே லிதியம் கார்பனேட் என்ற உப்பாக மன நோயாளிகளுக்குக் கொடுத்தபோது பலன் கிடைத்தது.

ஐந்தாண்டுகளுக்கு மன நோயாளி என்று அடைத்து வைக்கப்பட்ட ஒரு நோயாளிக்குக் கொடுத்தபோது அந்தப் பைத்தியத்தின் ஆட்ட பாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து போயின. இரண்டே மாதங்களில் சாதாரண ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். பின்னர் வீடு திரும்பி ஒரு வேலையில் சேர்ந்தார். அது முதல் உலகம் முழுதும் லிதியம் மருந்து உபயோகத்தில் வந்தது.

ஆனால் எந்த ஒரு மருந்துக்கும் பக்க விளைவுகள் உண்டு. மக்களை மந்த கதியில் இயங்க வைக்கும் . மேலூம் ஆளுக்கு ஏற்ற, நோய்க்கு ஏற்ற அளவு இதை உடலில் ஏற்ற வேண்டும். மன நோய் மருத்துவர்களைக் கலந்தாலோசித்தே இதைப் பயன்படுத்தலாம்.

Dr.Anburaj said...



இதைவிட சுவையான விஷயம் ஹை ட் ரஜன் குண்டுகளில் லிதியம் ஹைட்ரைட் (Lithium Hydride) பயன்படுவதாகும். அணுகுண்டுகளை விட பல்லாயிரம் மடங்கு வலிமை வாய்ந்தது ஹைட்ரஜன் குண்டு. அணு குண்டு என்பது அணுவைப் பிளப்பதால்(fission) ஏற்படும் ஆற்றல். ஹை ட் ரஜன் குண்டு என்பது அணுவை இணைப்பதால் (fusion) உண்டாகும் ஆற்றல். நாம் தினமும் பார்க்கும் சூரியனில் ஒவ்வொரு வினாடியும் பல்லாயிரம் கோடி ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் உண்டாகும் போது கிடைக்கும் ஆற்றலே சூரிய சக்தி.

செயற்கை முறையில் ஹை ட்ரஜன் அணுக்களை இணைக்க ஹை ட்ரஜன் குண்டுகளில் லிதியம் ஐஸடோப் (Isotope) பயன்படுகிறது.
கீழேயுள்ள பாரா (paragraph) வை இரசாயன மாணவர்கள் மட்டும் படிக்கவும்:-

ஹைட்ரஜன் குண்டுகளில் லிதியம்-6 ஐஸடோப் பயன்படுகிறது ஹைட் ரஜனின் மற்ற ஒரு ஐஸடோப் டெடூரியம் (Deuterium) . மேற்கண்ட இரண்டும் சேர்ந்து டெடூரியம் ஹைட்ரைட்

ஆகிறது. இது பயங்கரமான சக்தியை வெளிப்படுத்த வல்லது.

எப்போது?
இதை ஒரு அணுகுண்டைச் சுற்றிவைத்துவிட்டால், அதை வெடிக்கும்போது அணுகுண்டில் பயன்படுத்தப்படும் யுரேனியம்-235 ஐஸடோப் பிரம்மாண்டமான வெப்பத்தை வெளிப்படுத்தும். உடனே அதை லிதியம்-6 உள்ளே வாங்கி ஹைட் ர ஜநை ஹீலியம் என்னும் மூலகமாக மாற்றி மேலும் நியூட்ரான்களை வெளிவிடும் . அவை வெளிக்கூ ட்டில் வைக்கப்பட்ட யுரேனியம்-235ஐத் தாக்கி ப்லூடோனியம்-239 (Uranium, Plutonium) ஆக மாற்றும் -- இப்போது மூன்றாவது வெடிப்பு நிகழும் இவ்வாறு நடக்கையில் கோடி கோடி டன் வெடி மருந்தை ஒரே நேரத்தில் வெடித்தால் என்ன சக்தி கிடைக்குமோ அவ்வளவு சக்தி கிட்டும்.இது ஹைட்ரஜன் குண்டு --- லிதியம் பாட்டரி

மூலகம் என்பது திட, திரவ, வாயு நிலையில் உள்ளன. லிதியம் ஒரு உலோகம் (alkali metal) - திட நிலையில் இருந்தாலும் இரும்பு போல கனமாக இல்லாமல் மிக லேசான , எடை குறைந்த நிலையில் உள்ளது ஆகையால் இதைக் கலந்து உருவாக்கும் கலப்பு உலோகங்களும் (alloys) லேஸாக இருக்கும். இதை அலுமினியத்தோடு கலந்து விமானம் கட்டுகிறார்கள். ஆனால் எடை குறைந்தாலும் வலு அதிகம்.

காமெரா, கால்குலேட்டர், கை கடிகாரங்களில் மூன்று வோல்ட் (3 volt lithium batteries) லிதியம் பாட்டரிகளைப் பயன்படுத்துவதன் காரணமும் இந்த எடைக் குறைவுதான். செயற்கை இருதயக் கருவிகளிலும் இவை பத்து ஆண்டு வரை இயங்குகின்றன.

லிதியத்துடன் ஒரு இரும்பு உப்பைச் சேர்த்து பொம்மைகள், ஸ்டீரியோ, காஸெட், சி டி ப்ளேயர்களையும் இயக்குகிறார்கள்.

வானவியலில் லிதியம்இந்த பிரபஞ்சம் மாபெரும் (Big Bang) வெடிப்பிற்குப் பின்னர் உருவானது அப்பொழுது ஹைட்ரஜன், ஹீலியத்துடன் லிதியமும் உருவானது. அதாவது முதல் மூவர் - மூன்று முதல் ஆழ்வார்கள்--என்றும் சொல்லலாம. ஆகையால் சூரியனுக்கும் தம்பியான -- ஜூனியர் ஆன-- பழுப்புக் குள்ளன், சிவப்புக் குள்ள நட்சத்திரம் (Brown and Red Dwarfs) , ஆரஞ்சு வண்ண நட்சத்திரங்களை (Orange Stars) இதன் அளவை வைத்து இனம் காணுகிறார்கள்.

ஒவ்வொருவர் உடலிலிலும் 7 மில்லி கிராம் லிதியம் இருக்கிறது. பல வெப்ப நீரூற்றுகளில் இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜிம்பாப்வேயில் அதிகம் கிடைக்கிறது. கண்ணாடித் தொழிற்சாலைகளிலும் லிதியம் பயன்படுகிறது ஹைட்ரஜன் வாயுவைச் சேமித்து வைக்க லிதியம் ஹை ட்ரைட் பயன்படுகிறது

மனிதனுடைய சிறு நீரில் லிதியம் இருக்கிறது. திராட்சை, புகையிலை, பால், கடல் பாசியில் இருக்கிறது. ஒரு லிட்டர் ரத்ததில் பத்து மில்லி கிராம் லிதியம் இருந்தால் அது விஷம். 15 மில்லி இருந்தால் கெடுதி; 20 மில்லி இருந்தால் நாக்கு குளறும்; மரணமும் சம்பவிக்கும்.

வைத்தியத்தில் உதவும் லிதியம்; பைத்தியத்தில் உதவும் லிதியம் வாழ்க .

Dr.Anburaj said...

இசை மனிதனுக்கு மிக அவசியம்.முஸ்லீம்கள் இசையை வெறுத்து பெரும் தவறு செய்கின்றாா்கள். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் முஸ்லீம் பெண்கள் பரதம் மற்றும் வாத்தியங்களை இசைக்க கற்று வருகின்றாா்கள். நானே நேரில் பார்த்திருக்கின்றேன். இசை மனித மனதை வருடிக் கொடுக்கும் அற்புத சக்தி மிக்கது.

ASHAK SJ said...

நகைச்சுவைக்காக சொல்லப்பட்ட கற்பனை கதை அளவுதான் புத்தமதம் என்பதை தெளிவுபடுத்திய சூத்திரனுக்கு நன்றி

ASHAK SJ said...

இவ்வுலக வாழ்க்கைக்கு இசை தேவை, ஆனால் இஸ்லாம் விரும்புவது மறு உலக வாழ்க்கை,