Followers

Wednesday, October 10, 2018

சமணத் துறவியாக மாறிய இளம் பெண்!

சமணத் துறவியாக மாறிய இளம் பெண்!
இறைவன் என்பவன் எந்த தேவையும் அற்றவன். மனிதனை படைத்து அந்த மனிதன் சுகமாக வாழ இந்த பூமியை படைத்து இங்கு நம்மை வாழ வைத்துள்ளான். அனைத்து சுகங்களையும் தந்து சில கட்டுப்பாடுகளையும் நமக்கு விதித்துள்ளான். ஆணும் பெண்ணும் சேர்ந்து சந்தோஷ வாழ்க்கை வாழுங்கள்: ஆனால் திருமணம் முடித்துக் கொள்ளுங்கள் என்கிறான். அதே போல் பொருளாதாரத்தை நிறைய திரட்டிக் கொள்ளுங்கள். ஆனால் அனைத்தையும் நீங்களே அனுபவிக்காமல் ஏழைகளுக்கும் கொடுத்துதவுங்கள் என்கிறான்.
நேற்று தந்தி டிவியில் சமணத் துறவியாக மாறிய ஒரு பட்டதாரி பெண்ணின் வாழ்க்கையை நேரிடையாக ஒளிபரப்பினார்கள். இங்கு பிகாம் முடித்த இந்த பட்டதாரி பெண் சமணத் துறவியாக மாறியுள்ளார். இனி ஒரு பெண் சந்தோஷத்துக்காக எதை எல்லாம் செய்வாளோ அவற்றை எல்லாம் இனி ஒதுக்கி தள்ளி விட வேண்டும். திருமணம் முடிக்கக் கூடாது. பொருளாதாரத்தை ஈட்ட இனி பணிக்கு செல்ல முடியாது. ஒவ்வொரு வீடாக சென்று பிச்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டும். அதிலும் புலால் உண்ணக் கூடாது: இப்படி அளவுக்கதிகமான மனிதனால் கடை பிடிக்க முடியாத சட்டதிட்டங்களை தாங்களாகவே வகுத்துக் கொண்டு தாங்களும் சிரமப்பட்டு தங்களின் குடும்பத்தவரையும் சிரமத்துக்கு ஆளாக்குகிறார்கள். இந்த பெண்ணின் இளைய தங்கை 'இனி என் சகோதரியோடு சந்தோஷமாக உறவாட முடியாது' என்று கதறி அழுதது நம்மை என்னவோ செய்தது.
சமணத் துறவியாக மாறிய ஒரு பெண்ணின் அனுபவத்தை கேளுங்கள்:
“எனக்கு நீண்ட, அழகான தலைமுடி இருந்தது. நான் மிகவும் இளையவளாக இருந்ததால், எனது கூந்தலைப் பிடுங்குவதற்குப் பதிலாக கத்திரிக்கோல் வைத்து வெட்டி, தலையை சவரம் செய்துகொள்ள எனது குரு அனுமதித்தார். ஆனால், வழக்கமான சம்பிரதாயத்தில், நான் கூந்தலைப் பிடுங்குவதில் பிடிவாதமாக இருந்தேன். அதனால் அவர்களும் நான் விரும்பியதை அனுமதித்தனர். அந்த முழுச் சடங்கும் முடிய கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆனது. மிகுந்த வலிமிக்க அனுபவமாகவும் இருந்தது. நான் அழக் கூடாது என்று நினைத்தாலும், அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் எனது பெற்றோர்களிடம் எனது முடிவைத் தெரிவிக்கவில்லை. அவர்கள் என்னை தடுத்து நிறுத்த முயற்சிப்பார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கு விஷயம் தெரிந்து வந்து சேர்வதற்குள் அந்தச் சடங்கும் முடிந்துவிட்டது.”
அடுத்து பாதைகளில் நடந்து செல்லும் போது தெருவை கூட்டிக் கொண்டே செல்கிறார்கள். தங்களையறியாமல் நடந்து செல்லும் போது சிறு உயிரினங்களுக்கும் தீங்கு வந்து விடக் கூடாது என்பதற்காக இவ்வாறு செல்கிறார்களாம். ஈக்கள், கொசுக்கள், மூட்டைப் பூச்சிகள் போன்றவை நமக்கு தீங்கு தருவதால் அதனை அழிக்கிறோம். இவர்கள் அதனையும் உயிர்ப் பலி என்று அழிக்க மாட்டார்களா? இந்த உலகத்தில் புலால் உண்ணாமல் அனைத்தும் சைவமாக மாறி விட்டால் நாட்டில் ஒரு புல் பூண்டுகள் கூட மிச்சமிருக்காது. மான் இலை தழைகளை சாப்பிட வேண்டும்: அந்த மானை சிறுத்தை போன்ற உயிரினங்கள் அடித்து சாப்பிட வேண்டும் என்பது இறைவனின் ஏற்பாடு: உணவு சுழற்சி முறை இல்லாமல் போனால் உலகில் பசி பட்டினி அதிகரிக்கும் சூழலே உருவாகும்.
மனிதர்கள் உண்ணும் புலால் உணவுகளில் ஆடு, மாடு, கோழி, ஒட்டகம், மீன் போன்றவைகளே பிரதான இடம் பிடிக்கிறது. இந்த உயிரினங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. உலகில் எங்கும் இந்த உயிரினங்கள் அழிந்து வருவதாக கணக்கிடப்படவில்லை. ஆனால் மனிதன் சாப்பிடாத புலி, சிங்கம், காண்டாமிருகம் போன்ற உயிரினங்களே அதிகமாக அழிந்து வருகின்றன. இவற்றை எல்லாம் காக்க அரசாங்கங்கள் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யும் நிலையில்தான் உள்ளன. புலால் உண்ணாதவர்கள் பாலை மட்டும் அருந்துவது எப்படி? மாட்டின் ரத்தத்தின் மாமிசத்தின் ஊடாக அதிலிருந்து பிழிந்து தரப்படுவதுதானே பால். அது மட்டும் கூடுமா?
எனவே துறவறம், புலால் உண்ணாமை என்பதெல்லாம் மனிதனால் கடை பிடிக்க முடியாத தத்துவங்கள். இறைவன் சொல்லாத ஒன்றை நாமாக நமக்கு விதித்துக் கொண்டு நாமும் அல்லல் பட்டு மற்றவர்களையும் அல்லல் படுவதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வோமாக!



5 comments:

Dr.Anburaj said...

எனவே துறவறம், புலால் உண்ணாமை என்பதெல்லாம் மனிதனால் கடை பிடிக்க முடியாத தத்துவங்கள். இறைவன் சொல்லாத ஒன்றை நாமாக நமக்கு விதித்துக் கொண்டு நாமும் அல்லல் பட்டு மற்றவர்களையும் அல்லல் படுவதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வோமாக!
----------------------------------------
இவர்கள் அனுஷ்டிக்கும் சந்நியாசம் மிகக்கொடுமையானது.தலைமுடியை தங்கள் கைளால்பிடுங்கி எறிய வேண்டும். இன்றும் பல கடுமையான நியமங்கள்.ஆகவேதான் முன்பு சமண மதத்தை விட்டு மக்கள் இந்து மதத்திற்கு வந்தாா்கள்.ஆண் சந்நியாசிகள் நிா்வாணமாக இருப்பாார்கள். பொது வெளிகளில் கூட நிா்வாகமாக வருவார்கள். அசிங்கமாக இருக்கின்றதல்லவா .இதற்கு போய் சைவ சமய பெரியோர்களை குற்றம் சொல்வது பிழையானது.
-------------------------------------------------
முகம்மது தனது மனைவிகளைப்பார்த்து ” நீங்கள் அனைவரும் ஜமாத்தின் தாயாா் போன்றவா்கள்.எனவே யாரும் எனது இறப்பிற்குப் பிறகு திருமணம் செய்யக் கூடாது” என்று கட்டளையிட்டது ஏன் ? அவரது மனைவிமார்கள் துறவநெறியை பின்பற்றினார்களா ? இல்லை ஏதேனும் ........ .

நான் அப்படி நினைக்கவில்லை.

துறவு நெறி வைராக்கியம் இருந்தால் எளிமையானதே.

Dr.Anburaj said...

ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் ஸ்ரீசாரதாசமீதி என்ற பெண்துறவிகள் அமைப்பை சேலத்தில் நடத்தி வருகின்றது. பேரூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பெண்கள் பிரிவு செயல்படுகின்றது..இங்கு துறவறம் மிக ஆரோக்கியமாக உள்ளது. இந்து பெண்கள் சேரலாம். கல்வி மருத்துவம் மற்றும்பல சேவை திட்டங்களை நிறைவேற்ற இந்த பெண்களின் பணி பயன்படுத்தப்படுகின்றது.

ASHAK SJ said...

இஸ்லாத்தின் படி ஒரு பெண்ணுக்கு இரண்டாவது கணவன் முந்தைய கணவனைப்போல் அல்லது சிறந்தவன் கிடைப்பான் என்பதே, ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இணையான அல்லது சிறந்த மனிதர் இவ்வுலகில் யாரும் இல்லை, மேலும் முஹம்மதுவின் (ஸல்) மனைவிகளை துன்புறுத்த யாருக்கும் அனுமதி இல்லை, திருமணம் நடந்தால் கோபப்படுவது பேசுவது போன்றவைகள் நிகழலாம் அதனால் தான் அவர்கள் மூமின்களின் தாய்.

ஆனால் இன்று சன்யாசம் என்று போவார்கள் நிலைமை உலகமே அறிந்த ஒன்று

Dr.Anburaj said...

உத்தமமாக வாழும் துறவிகளை உலகம் நன்கு அறியும். போலிகளை முன்னிலைப்படுத்துவது தவறு.
------------------------------------------------
ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இணையான அல்லது சிறந்த மனிதர் இவ்வுலகில் யாரும் இல்லை. - தவறான தகவல்.
இங்குதான் மத வெறி ஆரம்பம்.

குரான் சொல்லும் நபிமாாகள் ஒரு லட்சத்து இருபத்து ஆறாயிரம் பேர்களும் தகுதியற்றவா்களா ?

மனைவியாக வாழ்பவா்கள் அனைவரும் துன்பம் இன்பம் ஆகியவற்றை அனுபவித்து தான் வாழ வேண்டும்.நபிமார்களின் மனைவிமார்களும் இறைவனின் இந்த விதிக்கு விதிவிலக்கல்ல. ஆஷிக்கின் கருத்து தவறு.
முஹம்மது எதற்கு தன்மனைவிகளை மறு மணம் செய்யக் கூடாது என்பதற்கு -பொறாமை தான் காரணம் என்று பலா் கருத்து தெரிவித்துள்ளாா்கள். இதுதான் உண்மையா ?

ASHAK SJ said...

அட மூடனே, எத்தனை நபிமார்கள் இருந்தார்கள் என்பதல்ல இங்கே வாதம், முஹம்மது (ஸல்) காலத்தில் அவரை விட சிறந்தவர் இல்லை, முஹம்மதுவின் (ஸல்) மனைவிகளை துன்புறுத்த யாருக்கும் அனுமதி இல்லை, அவரின் மனைவிகள் அதை ஏற்றுக்கொண்ட போது மற்றவருக்கு என்ன பிரச்சனை