Followers

Wednesday, October 31, 2018

சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவை கட்டமைத்தாரா?

சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவை கட்டமைத்தாரா?
...........
இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே..

ஒருக்கால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம்.
வரலாற்றை அறிவோம்…
.
முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது.
.
இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை.
.
இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான்.
.
இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.
.
ஒருக்கால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம்.
.
இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை.
.
நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன.
.
முஸ்லிம்கள் படையெடுப்பாளர்களாக போதிக்கப்படுகிறார்கள். எனினும் படையெடுப்பென்பது அன்றைய நியதி என்பதையும்,
.
அப்படி படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் இந்தியாவையே தங்கள் தாய்நாடாக கொண்டார்கள் என்பதையும்,
.
இவர்களில் பலர் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள் என்பதையும்,
.
இவர்கள் எப்பகுதியிலிருந்து வந்தார்களோ அப்பகுதிகளை இவர்களின் எதிரிகள் கைப்பற்றி விட்டதால் அவை இவர்களின் எதிரி நாடுகள் ஆகிவிட்டன என்பதையும்,
.
இவர்கள் அவற்றோடு போரிட்டார்கள் என்பதையும்,
.
இவர்கள் இங்குள்ள செல்வத்தை (ஆங்கிலேயர் போல) தங்கள் மூதாதையர் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை என்பதையும்,
.
இங்குள்ள செல்வத்தை இந்நாட்டின் வளத்திற்கே உபயோகித்தார்கள் என்பதையும்,
.
இவர்கள் இங்கிருந்த பிற மன்னர்களை வென்றது தான் நாட்டின் ஒருங்கிணைப்பை கொண்டு வந்தது என்பதும் சொல்லப்படுவதில்லை.
.
ஆம். கோரி முகம்மது கூர்ஜர – பிரதீஹரர்கள் நாட்டை, கன்னோசி நாட்டை வென்றது படையெடுப்பாக சொல்லப்படுகிறதேயல்லால், அதனால் கூர்ஜர பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு என்பது மறைந்து டெல்லியை தலைநகராகக் கொண்ட அரசோடு அவை இணைந்து இந்தியா என்றொரு நாடு உருவாக அவர் வித்திட்டார் என சொல்லப் படுவதில்லை.
.
அவ்வாறே இல்டுட்மிஷ் ஒரு படையெடுப்பாளனாக சொல்லப் படுகிறாரேயல்லாமல் டெல்லி பேரரசிற்கு அப்பால் இருந்த பகுதிகளை வென்று இந்திய டெல்லி பேரரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர் என்பதும் சொல்லப்படுவதில்லை.
.
அவ்வாறே அலாவுதீன் கில்ஜியும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஆப்கானிஸ்தான் முதல் வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஒவ்வொன்றாக வென்று டெல்லியை தலைநகராகக் கொண்ட இந்திய அரசோடு இணைத்து, தன் ஆட்சியின் கீழ் ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி கொண்ட இந்தியா என்று திகழச் செய்தவர்.
.
எனினும் முஸ்லிம்கள் படையெடுப்பாளர்கள் என்று பாட நூல்கள் கூறுகின்றனவேயல்லால் அவர்கள் தங்கள் ரத்தம் சிந்தி, சிறிதும் பெரிதுமான நாடுகளை வென்று, மத்திய அரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி தங்கள் உதிரத்தால் அது சிந்தாமல் சிதறாமல் கட்டிக்காத்தவர்கள் என்று சொல்லப்படுவதில்லை.
.
ஆனால் உண்மை நீண்ட நாட்களுக்கு உறங்காது. அது விழித்தெழும் போது வீரிட்டு எழும்.
.
எனவே ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் வராமல் இருந்திருந்தால் ஒன்றுபட்ட இந்தியா உருவாகாமல் போயிருக்கக் கூடும்.
.
இந்தியாவை ஒன்று படுத்தியதோடு அதனை மிக நீண்டகாலம், சுமார் 500 ஆண்டுகள், ஒன்றாகவே கட்டிக் காத்தது தான் இந்தியன் என்ற உணர்வு வளர காரணமாயிற்று.
.
இது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய மகத்தான தொண்டு.
.
இந்தியாவை பாதுகாத்தல்: ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அரும் பெரும்தொண்டென்றால், அவ்விந்தியாவை அவர்கள் மங்கோலியர் படையெடுப்பிலிருந்து பாதுகாத்தது இன்னும் சற்று உயரிய தொண்டாகும்.
.
ஆம் 13-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டெல்லியில் முஸ்லிம்கள் தங்கள் பேரரசை உருவாக்கி, இந்தியாவை ஒன்றுபடுத்திக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் மங்கோலியாவிலிருந்து வெகுண்டெழுந்த முரட்டு இனத்திரான மங்கோலியர்கள் தங்கள் மாபெரும் தலைவன் செங்கிஸ்கான் தலைமையில் டெல்லி பேரரசை போன்று பன்மடங்கு விரிந்த, பன்மடங்கு வலிமை பெற்றிருந்த பேரரசுகளான சீனப் பேரரசு, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா பகுதிகளை வென்றுக் கொண்டு இந்தியாவிற்கு அருகில் இருந்த மிக வலிமை பெற்ற குவாரசைம் பேரரசை நெருங்கியபோது அதன் வலிமை பொருந்திய மன்னன் அலாவுதீன் (டெல்லியின் அலாவுதீன் கில்ஜி அல்ல) மங்கோலியர் வலிமைக்கு அஞ்சி காஸ்பியன், பகுதிக்கு ஓடிவிட,
.
குவாரசைம் அரசின் வாரிசு ஜலாலுத்தீன் பஞ்சாப் வந்து டெல்லியின் முஸ்லிம் மன்னன் இல்டுமிஷ்ஷிடம் அடைக்கலம் கோரிய போது, இல்டுமிஷ் மதியூகத்துடன் அதை நிராகரித்துவிட, ஜலாலுத்தீனை துரத்தி வந்த செங்கிஸ்கான் டெல்லியை தாக்காமல் திரும்பிச் சென்றார்.
.
இல்லையேல் இந்தியா மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு ஒரு மங்கோலிய காலனியாகியிருக்கும்.
.
இல்டுமிஷ்ஷின் மதியூகம் இந்தியாவை காத்தது.
.
மங்கோலிய படையெடுப்பு இல்டுமிஷ் காலத்தில் மட்டும் நடைபெறவில்லை.
.
அது டெல்லி சுல்தான்கள் பால்பன், அலாவுதீன் கில்ஜி காலத்திலும் தொடர்ந்தது. மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் எல்லைப்புரத்தில் வலிமையான கோட்டைகளைக் கட்டி அதில் தீரமிக்க படையை நிறுத்தினான்.
.
இவரின் வல்லமை மிக்க ஆளுனன் ஷேர்கான் மங்கோலியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான்.
.
ஷேர்கானின் இறப்பிற்கு பின்மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் தன் மைந்தர்கள் முகம்மது கான் மற்றும் புக்ராகானை எல்லைப்புற கவரனர்களாக நியமித்தான்.
.
வலிமையும் தீரமும்மிக்க முகம்மதுகான் மங்கோலியருடன் நடைபெற்ற யுத்தத்தில் மாண்டான். தன் 80வது வயதில் முதியோனாகிய பால்பனுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது.
.
இந்தியாவை காப்பதில் தன் அன்பு மகனை பறிகொடுத்த பால்பன் தன் பணியில் சற்றும் தளர்ச்சியடையாமல், உடன் மேல் நடவடிக்கை எடுத்து மங்கோலியர்களை வென்று இந்தியாவை காத்தான், ஏனோ இந்திய பாடநூல்கள் இத்தியாகத்தை போற்றுவதில்லை.
.
அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர். ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை. தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான்.
.
மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது. இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான்.
.
அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று.
.
அது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர்
.
இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.
.
இத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும்.
.
அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும் .....
(வாட்ஸ்அப் செய்தி)

17 comments:

Dr.Anburaj said...

இரசாயன விளை நடக்கும் போது முக்கிய வினை துணைவினை என்று இரண்டு நிகழ்வு நடக்கும்.அதுபோல் காபீா்களை அழிக்க வேண்டும் காபீா்களை கொள்ளையடிக்க வேண்டும் காபீா்களின் பெண்களை வைப்பாட்டிகளாக வைக்க வேண்டும் எனபதே இந்தியா மீது படையெடுத்த துருக்கி ஆப்கான் மன்னா்களது ஒரே நோக்கம். முகம்மது கோரியின் நோக்கம் அலாவதீன் கில்ஜயின் நோக்கம் இதுதான். இதுதான் முக்கிய வினை.
ஏற்கனவே கலாச்சாரம் சமயம் பண்பாடு இசை பொருளாதாரம் காசியில் இருப்பவனுக்கு இராமேஸ்வரா் புனிதம் இராமேஸ்வரத்தில் இருப்பவனுக்கு காசி புனிதம் போன்ற பல பல காரணிகள் களத்தில் எற்கனவே 2000-3000 ஆண்டுகளாக மக்களை பண்படுத்தி வந்துள்ளது.தென்னகத்தே தோன்றிய ஸ்ரீசங்கரரும் ஸ்ரீராமானுஜா் போன்றவர்கள் வடபகுதியில் மகத்தான தொண்டு செய்து மக்களை ஆன்மீக வழியில் ஆதிக்க வெறியின்றி ஜனநாய எண்ணத்தோடு தனிமனித ஜனநாயக பண்பாட்டுடன் மக்களை நல்வழிப்படுத்தினாா்கள். ஆகவே 99 சதம் தேசிய ஒருமைப்பாடு ஏற்கனவே வந்திருந்தது.

கஜனி முகம்மது கோரி முகம்மது போன்ற காடையா்கள் அனைவரும் பல மன்னா்களின் ஆட்சியில் இருக்கும் இந்துஸ்தானை ஒருங்கிணைத்து ஒரு அரசியல் நிா்வாகத்தின் கீழ் கொண்டு வரவா படையடுத்தாா்கள் ?அவர்களுக்கு அப்படி ஒரு திட்டம் இருந்ததா? இந்தியாவில் அராஜகம் செய்த முஸ்லீம் காடைத்தனம் மிக்க மன்னா்கள் ஒருவருக்கொருவா் சண்டையிட்டு படுகொலைகளை அரங்கேற்றியது ஏன் ? குடும்பச்சண்டையில் பல உயிா்கள் பறி போன சரித்திரத்தை ஏன் மறைத்து விட்டீர்கள் ?ஔரங்கசீப் என்ன ஜனநாயக முறைப்படி ஒட்டு போட்டா அரியணைஏறினாா் ?
திருக்கோவில்களைக் கொள்ளைியட்டதால் தேசிய ஒருமைப்பாடு ஏற்பட்டதா ?
இந்து பெண்களை கடத்திச் சென்று குமுஸ் பெண்களாக அடிமைச்சந்தையில் விற்றதால் தேசிய ஒருமைப்பாடு ஏற்பட்டதா?
அஹிம்சை அன்பின் உருவமாக வாழ்ந்து வந்த புத்தரின் தொண்டா்கள் உருவாக்கி வைத்த நாலந்தா பல்கலைக்கழகத்தை அழித்த ஹக்மத்தியாா் போன்றவா்களால் தேசிய ஒருமைப்பாடு ஏற்பட்டதா ?
(புத்த மதத்தை அழித்தது முஸ்லீம்கள் என்று பாரத ரத்னா அம்பேத்தாா் தெரிவித்துள்ளாா்.)
தாங்கள் தெரிவித்துள்ள புதிய சரித்திரத்தில் ஒரு இந்துவின் பெயா் கூட இடம் பெறவில்லையே ஏன் ?
இந்த அரேபிய மத காடையா்களோடு போரிட்டு வந்த இந்து மன்னா்களும் வீரா்களும்
என்ன செய்தாா்கள் ?
இந்து வீரா்களால் ஏற்பட்ட பயன் ஏன்ன ?
தண்ணிரில் கலக்காத எண்ணெய் போல் துருக்கி ஆப்கன் நாட்டு காடையா்கள் இந்தியாவை இந்த மண்ணின் மைந்தர்களை இந்த நாட்டின் கலாச்சாரத்தை இந்த மண்ணில் பிறந்த வீரா்களை சமய மேதைகளை இலக்கிய இசை வித்தகா்களை சாதனைகளை ஒருபோதும் அங்கிரிக்கவில்லை.காடைத்தனத்தைத் தவிர கொலையில் கொடியவர்கள் சண்டையில் வல்லவா்கள் -இந்த தகுதி மட்டும் கொண்ட முஸ்லீம் காடையா்கள்-மன்னா்கள் மக்களின் மனதை கொள்ளையடிக்க இயலவில்லை.மக்களின் அன்பை பெறவில்லை. மக்களின் அன்பை பெற்றிருந்ததால்தான் சத்ரபதி சிவாஜி பல சோதனை வேதனை சறுக்கல் தோல்வி வீழ்ச்சிகளின் மத்தியில் பிரமாண்டமாக முகலாய பேரரசை கடும் துன்பத்திற்கு அளாக்கினாா். இரவில் போா் செய்வது இல்லை என்ற பண்பாட்டை பயன் படுத்தி பாபா் இந்திய படைகளை இரவில் தாக்கி வீழ்த்தினாா்.
என்ன பசப்பு வார்த்தைகள்.சுவனப்பிரியன் அண்டப்புளுகு புளுகுகின்றாா்.

முஸ்லீம் மன்னா்கள் கிளித்த கிளிப்புக்குபிறகும் ஆங்கிலேயா்கள் கிளித்த கிளப்புக்குப் பிறகும் 565 சமஸ்தானங்கள் இருந்தது ஏன் ?

Dr.Anburaj said...

ஆம் முகம்மது கோரியை கஜனி முகம்மதை போன்ற காடையா்களை தொண்டா்கள் என்று சித்தரிக்கும் செயல் தேச விரோதமாகும். முஸ்லீம்கள் இப்படித்தான் இருப்பாார்கள் என்பது இந்துக்களுக்கு நன்கு தெரிந்து கொண்டேயிருக்கின்றது. இந்திய மண்ணில் வாழ்ந்தாலும் மனதால் மதத்தால் தங்களின்அன்பு பாக்கிஸ்தானில்தான் இருக்கின்றது என்பதை அனைவரும் அறிவோம். நாய் வால் நிமிரும் என்று நான் நினைக்கவேயில்லை.
----------------------------------------
565 சமஸ்தானத்தை இணைத்து மகத்தான தொண்டு செய்த திரு சர்தாா் வல்லபாய் பட்டேலின் தியாகத்திற்கு சான்றாக ஒரு சம்பவம் கூட தங்களின் கண்ணில் படவில்லையா ?அதைப் பதிவு செய்திருந்தால் சுவனப்பிரியன் யோக்கியன் என்று நினைப்பேன். சுவனப்பிரியனும் பாக்கிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கதலைவா்களுக்கும் எண்ணம் ஒன்றுதான்.
திரு வல்லபாய் பட்டேல் மட்டும் இந்தியாவின் பிரதமா் ஆகியிருந்தால் பாக்கிஸ்தான் என்ற பகை நாடு என்றோ முடிக்கப்பட்டு இருக்கும்.காஷ்மிரும் அமா்கோட்டும் இந்தியாவுடன் முழுமையாக இணைந்திருக்கும். இந்துக்கள் மிக அருமையாக பாதுகாப்புடன் வாழ்ந்து வருவா்கள். சுதந்திர இந்தியாவில் நடந்த பல ஆயிரக்கணக்கான குண்டு வெடிப்பகள் நடந்திருக்காது.நடத்தியவன் வேரோடும் வேரடி மண்ணோடு அழிக்கப்பட்டு இருப்பான். முறையான இந்த சமய கல்வி அனைவருக்கும் கிடைத்திருக்கும். இப்படி ஆயிரக்கணக்கான ஆயிரக்கணக்கான நன்மைகள் ஏற்பட்டிருக்கும்.இந்துக்களின் துரதிஷ்டம் பிரமரானது நேரு என்ற பகட்டுப்பிரியன் .என்ன செய்வது இந்தியாவிற்கு பின்னேற்றம் ஏற்பட்டது நேருவால்தான்.
நேருவால் எற்பட்டுள்ள சீரழிவுகளும் பாதிப்புகளும் திரு நநேர்நதிர மோடிபோன்றவா்கள் குறைந்தது 100 ஆண்டுகள் ஆட்சியில் மக்கள் அமா்த்தினால் இந்தியா முன்னேற்றம் பெரும்.

Dr.Anburaj said...

எட்டாவது நூற்றாண்டில் சிந்து மாகாணப் பகுதியை முஸ்லிம்கள் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். இருப்பினும் கி.பி.1205 வரை டில்லியைத் தலைநகராகக் கொண்டு வட இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி ஏற்படவில்லை. கி.பி.1206-இல் கோரிமுகம்மதுவின் பிரதிநிதியான குத்புதீன் டில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினார். அவர் துருக்கி நாட்டைச் சார்ந்தவர். இந்தியாவில் முகலாயர் களின் ஆட்சியை 1526-இல் பாபர் நிலைநிறுத் தினார். அவரது சந்ததிகள் 1764 வரை இந்தியாவை ஆண்டனர். பெயரளவிற்கு டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள சிறிய பகுதியில் 1857 வரை முகலா யர்கள் ஆண்டனர். பஹாதூர் ஷா கடைசி மன் னர் ஆவார். சிப்பாய்க்கலகம் என்று வெள்ளையர் களால் குறிப்பிடப்பட்ட முதல் சுதந்திரப்போர் 1858-இல் முடிவுக்கு வந்தபோது பஹாதூர் ஷா கைது செய்யப்பட்டு பர்மா நாட்டில் சிறை வைக்கப்பட்டார்.

மத்திய காலத்தில் அக்பர், ஷாஜஹான் அவுரங்கசீப் போன்ற பிரசித்தி பெற்ற மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். கஜினி முகம்மது தோல்விக்கு ஒப்பற்ற உதாரணமாகக் காட்டப்படுகிறார். “அவர் இந்தியாவின் மீது பதினேழு தடவை படையெடுத்தார் என்று கூறப்படுகிறது. அதன் உட்பொருள் அவர் முதல் பதினாறு முயற்சிகளில் தோல்வியைத் தழுவினார், பதினேழாவது முயற் சியில் சோம்நாத் நகரைக் கைப்பற்றினார் என்ப தாகும். ஒரு திருத்தம் என்னவெனில் அவர் பதினா றாவது படையெடுப்பில் சோம்நாத் நகரைக் கைப் பற்றினார். பதினேழாவது படையெடுப்பில் ஜாட் மன்னர்களைத் தோற்கடித்தார். உண்மை நிலை என்னவெனில் உலக சரித்திரத்தில் தலைசிறந்த மாவீரர்களில் ஒருவராக கஜினி முகம்மது குறிப் பிடப்படுகிறார்.

அப்படி என்றால் இந்தப் பதினேழு படை யெடுப்புகள் ஏன்? ஆம். அவர் இந்தியாவின் மீது பதினேழு தடவைகள் போர் தொடுத்தார் என்பது சரித்திர அடிப்படையிலான உண்மைதான். அவ ரது ஒவ்வொரு படையெடுப்பின் போதும் ஒரு நகர் அல்லது ஒரு பகுதியைக் குறிவைத்தார். அந்த மன்னரை வெற்றிகண்டு நகரைக் கைப்பற்றி, கோவில்களில் வைக்கப்பட்டிருந்த தங்கம் - வைர நகைகளைக் கொள்ளையடித்துத் தம் நாட்டிற்குத் திரும்பிவிட்டார். அவரது நோக்கம் கொள்ளை யடிப்பதுதான் - ஆட்சியை நிலைநாட்டுவது அல்ல. அவரது பதினேழு படையெடுப்புகள் பற்றிய விவரம்: 1. இந்தியாவின் எல்லை நகரங்கள் - கைபர் கணவாயை ஒட்டிய பகுதி - கி.பி.1000, 2. பெஷாவர் மற்றும் வால்ஹிந்த் கி.பி.1001, 3. பீரா (பாட்டியா) 1004, 4. மூல்டான் 1006, 5. நவாஸா 1007, 6. நாகர்க்கோட் 1008, 7. நாராயண் 1009, 8. மூல்டான் 1010, 9. நிந்துனா 1013, 10. தாணேசர் 1014, 11.லோஹ் கோட் 1015, 12. மதுரா மற்றும் கன்னோஜி 1018, 13. ராஹிப் 1021, 14. கிராட் லோஹ்கோட் மற்றும் லாஹோர் 1022, 15. க்வாலியர் மற்றும் காளிஞ்ஜார் 1023, 16. சோம்நாத் 1025, 17. ஜாட் மன்னர்கள் 1026.

கஜினி முகம்மதுவின் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் நாம் முன்பே குறிப்பிட்டபடி - நாடு பிளவுபட்டு மன்னர்கள் ஒருவருக்கொருவர் சண்டையில் ஈடுபட்டதுதான். சிந்து நதிக்கரையில் காந்தாரப் பகுதியைப் பிராமண மன்னர்கள் ஆண்டு வந்தனர். டில்லி கன்னோஜி பகுதிகள் கல்தோமரர்கள் வசம் இருந்தது. புத்த மதத்தைத் தழுவிய பாலர்கள் கங்கை நதிப்பகுதியில் மகத நாட்டை ஆண்டு வந்தனர். குப்தப் பேரரசின் சந்ததியினர் மால்வா பகுதியை ஆண்டனர். நர்மதைப் பகுதி காலாச்சூரிகள் வசம் இருந்தது. இவர்கள் மட்டும் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் கஜினி முகம்மது நிஜமாகவே தோற்று ஓடி இருப் பார். ஆனால் இவர்களது ஒற்றுமை இன்மையும் பரஸ்பரப் பூசல்களும் இந்தியாவின் மீது படை எடுப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையை உருவாக்கி இருந்தது.

கஜினி நகரில் முகம்மதுவின் ஆட்சி சிறப் பாகவே இருந்தது. பேரறிஞர்களையும் புலவர் களையும் அவர் ஆதரித்தார். பாரசீக மொழியின் மிகப் பிரசித்தி வாய்ந்த கவிஞர் ஃபிர்தௌசி கஜினியின் தர்பாரில்தான் இருந்தார். அதேபோல் புகழ்பெற்ற வானியல் மற்றும் வர லாற்றுப் பேரறிஞர் அல்பெரூனி கஜினியின் சபையை அலங்கரித்தார். கஜினி ஒரு அழகிய நகரமாகத் திகழ்ந்தது. அவரது ராஜ்ஜியம் கஜினி நகருக்கு மேற்குத் திசையில் மத்திய ஆசியா வரை பரவி இருந்தது.

இந்தியாவை ஆள்வதற்கு அவர் முயற்சிக்கவில்லை.

இருப்பினும் சில குறைகளையும் குற்றங்களையும் நாம் குறிப்பிட்டேயாகவேண்டும். இந்தியாவின் நகரங்களைச் சூறையாடியதையும் கோவில் சொத்துக்களைக் கொள்ளை அடித்ததையும் எப்படி மன்னிக்க முடியும்?

Dr.Anburaj said...

அன்பே வடிவான துக்ளக்-
துக்ளக்கிடம் சில குறைபாடுகள் நிச்சயமாக இருந்தன. அவரது மேதா விலாசத் திற்கு எதிர்மறையாகக் கொடூர குணமும் அவரி டம் இருந்தது. சில பயங்கரமான சம்பவங்களை இபன்பட்டூட்டா குறிப்பிட்டுள்ளார். குற்றவாளி களைத் தண்டிப்பதற்குச் சில யானைகளுக்குப் பயிற்சியளிக்கப்பட்டிருந்தது. அவற்றின் தந்தங் களில் கூர்மையான கத்திகள் பொருத்தப்பட்டிருந் தன. குற்றவாளிகளை முதலில் பந்தாடிய யானை கள் அவர்களைக் கால்களால் மிதித்து துவம்சம் செய்து கத்திகளால் கூறுபோடும். மன்னரும் பிர தானிகளும் இக்காட்சிகளைக் கண்டு ரசிப்பார்கள்.

சுல்த்தானின் சகோதரனும் - சகோதரனின் மகனும் இந்தக் கொடூரத்திற்குத் தப்பவில்லை. மன்னருக்கு எதிராக சதி செய்தார்கள் என்பதற்காகச் சிறைப்பிடிக்கப்பட்ட இருவரும் உயிர் இருக்கும் நிலையிலேயே தோல் உரிக்கப்பட்டு பெரிய கொப்பறைகளில் வறுக்கப்பட்டனர். இவ் வாறு சமைக்கப்பட்ட அவர்களது உடல் பகுதிகள் அவர்களது குடும்பத்தினருக்கு உணவாக வழங்கப் பட்டன.

அந்த மகாமேதை இப்படியும் செய்து வந்தார்! ஒரு வழியாக 1388ஆம் ஆண்டில் மரணம் காரண மாக அவரது ஆட்சி முடிவுக்கு வந்தபோது - அக்காலத்திய சரித்திர ஆசிரியர் கூறியது: “சுல்த்தானிடமிருந்து மக்கள் தப்பினர். மக்களிடமிருந்து சுல்த்தானும் தப்பினார்.”

(உங்கள் நூலகம் நவம்பர் 2011 இதழில் வெளியானது)

Dr.Anburaj said...

கஜினியின் அரசவையில் இருந்த அல் பரூனி எனும் அறிஞர் இந்தியாவின்பல பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து கிதாப் உல் ஹிந்த் எனும் வரலாற்று நூலை எழுதியவர். அவர் இத்தகைய கட்டுக் கதைகள் எதையும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கஜினி பேரரசு
கஜினி பேரரசு
இவை ஒரு புறமிருக்க சன்னி பிரிவு முசுலீமான கஜினி, ஷியா மற்றும் இசுமாயிலி பிரிவு முசுலீம்கள் 50,000 பேரை இசுலாமிய மார்க்கத்துக்கு விரோதமானவர்கள் என்று கூறிக் கொலை செய்தான் என்றும் துருக்கிய – பாரசீக வரலாற்றுக் குறிப்புகள் கூறிகின்றன.

இன்னொரு சம்பவமும் நடதுள்ளது. மூல்தான் நகரிலிருந்த இந்துக் கோயிலொன்றை இசுமாயிலி முசுலீம்கள் தாக்கியிருக்கின்றனர். அதற்குப் பதிலடியாக இசுமாயிலி முஸ்லீம்களைத் தாக்கியது மட்டுமின்றி அவர்களது மசூதியையும் இழுத்து மூடியிருக்கிறான் கஜினி.
நன்றி வினவு

vara vijay said...

Don't lie it's your writing

Dr.Anburaj said...

இங்கேயும் ஒரு அரேபிய அடிமைஅடிக்கடி விநோதமான பதிவுகளைச் செய்து வருகின்றாா்.விஜய் தங்களின் வயது கல்வித்தகுதியை நான் அறிய மாட்டேன். ஆனால் போதிய தகவல்களை தெரிந்து கொள்ளாமல் பதிவுகள் செய்வது முட்டாள்தனம்.

முகலாய பேரரசை இந்துக்கள் தங்களது ராணுவ திறமையினால் அழிக்கவில்லை.இந்துக்கள் பரவலாக தொந்தரவுகள்தாம் செய்து வந்தாா்கள். சத்ரபதி சிவாஜி ஆகட்டும் ராஜபுதனத்து வீரா்களாகட்டும் முகலாய பேரரசின் ராணுவபலம் ஆட்சி செய்யும் பரப்பு ஆகியவற்றைப் பார்க்கும் போது இந்துக்கள் காட்டிய வீரம் தொந்தரவு என்ற அளவிற்குதான் சொல்லமுடியும்.முகலாய பேரரசு வீழ்ந்தது அதன் உள் குடும்பசண்டையிலும் பதவிப்போா் அதிகாரப்போட்டி பொறாமை ஒழுக்கக் கேடு. எல்லாவற்றிற்கும் மேலாக

இந்து தாய்மாா்கள் வடித்த கண்ணீா்

இந்த முகலாய பன்றிகளை அழித்தது. வரலாற்றை சுவனப்பிரியன்தான் அப்பாவி முஸ்லீம்களை ஏமாற்றிட தவறாக பதிவு செய்கின்றாா் என்றால் என்னை பொய் என்று பதிவு செய்ய தங்களது தகுதி என்ன ? வரிக்கு வரி மறுப்பு எழுதேன்.நான் தடுக்கவில்லை.

Dr.Anburaj said...


இவை ஒரு புறமிருக்க சன்னி பிரிவு முசுலீமான கஜினி,

ஷியா மற்றும் இசுமாயிலி பிரிவு

முசுலீம்கள் 50,000 பேரை

இசுலாமிய மார்க்கத்துக்கு விரோதமானவர்கள் என்று கூறிக்

கொலை செய்தான் என்றும் துருக்கிய – பாரசீக வரலாற்றுக் குறிப்புகள் கூறிகின்றன.
------------------------------------------------------------
இந்தியாவை ஒரு குடைக்குள் கொண்டுவர பாடுபட்ட தியாக மூரத்தி கஜனி முகம்மது.கோரி முகம்மது.பாபா் முகம்மது.துக்கள் முகம்மது.மேற்படி

அனைவருக்கம்

பாரத ரத்னா விருது

வழங்க மறுக்கும்

திரு.மோடிஜி அவர்களை நான் வன்மையாகக் கணடிக்கின்றேன்.

Dr.Anburaj said...

இசுலாம் அல்லது முஹம்மது என்ற மனிதரின் ஆளுமை யின் நோக்கம் அரேபிய ஒருங்கிணைப்பு அல்லது அகண்ட அரேபியஸ்தானத்தை உருவாக்கி உலகை வெல்ல வேண்டும் என்று ஒரு ராணுவ தளபதி போல்தான் முஹம்மது ஆசைப்பட்டடாா். கௌதமன் போல் உலகை அன்பினால் அஹிம்சையினால் வெல்ல முடியும் வெல்லலாம் என்று எந்த அரேபியனும் இன்று கூட நினைக்கமாட்டான்.
--------------------------------------------------
முஹமமதின் மரணத்திற்குபிறகு எகிப்து போன்ற அண்டை நாடுகள் அனைத்தையும் அகண்ட அரேபிய படைகள் கைபற்றியது. நிலைத்ததா ?
குரானால் அரேபிய மக்களை ஒரு அரசியல் தலைமையின் கீழ் கொண்டு வர முடிந்ததா ? முஹம்மதுவால் உருவாக்கப்பட்ட கலிபாக்களின் ஆட்சி என்னவானது ? அது மத்திய கிழக்கு நாடுகளை ஒரு குடையின் கீழ் ஆண்டது.ஆனால் அதை பின்வரும் காலத்தில் இழந்து மீண்டும் முஹம்மதின் காலச் சுழ்நிலைக்குச் சென்று விட்டமே. கலிபா -2 உமரால் ஜயிக்கப்பட்ட எகிப்து அகண்ட அரபிஜ்தானில் உள்ளதா ?
குவைத் பஹரைன் அபுதாபி மஸ்கட் ஈரான் ஈராக் ஏமன் .....எதாவது ஒரே தலைமையின் கீழ் உள்ளதா ?
அரேபிய மண்ணில் தோற்றபோன தத்துவம் இசுலாம்.
அரேபிய மண்ணை ஒருங்கிணைத்து ஒரு அரசை தோற்றுவித்து காக்க இசுலாத்தால் முஹமததுவின் சுன்னாவினால் முடியாமல் போயிற்று. முஹம்மது ஒரு சர்வாதிகாரி. குரான் ஒரு சர்வாதிகாரி.ஜனநாயகபண்பு இரண்டிடமும் இல்லை.
குரான் பிறரை அழிக்கச் சொல்கிறது.காபீா்களைக் கொல்லுங்கள்.
காபீா்களைக் கொன்ற பின்
முஸ்லீ்கள் ஒருவா் மற்றவா்களைக் காபீா் என்று பட்டம் கட்டி கொல்லத்துவங்குவாா்கள்.
கலிபா-3 உதுமான் கூட காபீா் பட்டம் கட்டி - முகம்மதுவின் அருமைமனைவி ஆயிசாவால் காபீா் பட்டம் கட்டி சில நாட்களில் கொல்லப்பட்டாா். ஒட்டகப்போரின்போது கூட காபீா் என்ற வார்த்தை மற்றவர்களை இழிவு படுத்த பயன்படுத்தப்பட்டது.வரலாற இதுதான்.
-------------------------------------------------------------------
ஆனால் உலகை புங்காவில் பல மலா்கள் இருந்தால்தான அது மலா்த் தோட்டம். உலகை ஒரு அழகியபிரமாண்டமான மலா்சோலையாக பார்க்கின்றது பகவத்கீதை.இந்தியாவில் பிறந்த அறிஞா்கள் ஞானிகள் அனைவரும். ஆகவே ஜனநாயக பண்பாடு இந்துக்களின் இரத்தததில் ஊறிவிட்டது. ரோஜா தாமைரை என்று இரப்பதுதான் சிறப்ப என்று இந்துக்கள் கருதுகின்றோம். இசுலாம் அரேபிய மலரைத்தவிர மற்ற மலா்கள் அழிக்கப்பட வேண்டும் என்கிறது.

அழிக்கக் கற்றுக்கொடுக்கும் மதம் இசுலாம்.முசுலீமை் நாடுகள் அழிவின் மையமாக உள்ளது.
வளா்க்கக் வாழ கற்றுக்கொடுக்கும் மதம் இந்துமதம். குறைகளோடு வாழ்ந்து வாழவைத்து வளா்ந்து வருகின்றோம். பாக்கிஸ்தான்பிரிவினை கோத்ரா படுகொலை கோ -வ குண்டு வெடிப்ப என்று ஆயிரம் வருத்தங்கள் வேதனைகள் இருந்தாலும் ஒரு முஸ்லீ்மை
விமானப்படை தளபதிபாக அழகுபார்க்கும் பண்பு இந்துவிடம் உள்ளதுஃ
பல முஸ்லீ்களை ஜனாதிபதி ஆக்கி அழகு பார்க்கும் பண்பு இந்துக்களிடம் உள்ளது.இன்றும் இந்தியாவில் உயா்ந்த பதவிக்கு முஸ்லீம்கள் இயல்பான முறையில் வர முடியும்.
-------------------------------------------------------------
பாக்கிஸ்தான் நாடு இசுலாத்தை கற்றுக்கொண்ட நாடு.பின்பற்றும் நாடு.வாசிக்கம் நாடு. பிரதமரின் ஆலேபசகரான பாக்கிஸ்தானனைச்சோந்த பொருளாதார மேதை ஒருவா் நியமிக்கப்படுகின்றாா்.நியமிக்கப்பட்ட பதவியில் சோ்ந்த பின் அவா் ஒரு அஹமதிய பாக்கிஸ்தானி என்று. நாடு எங்கம் எதிா்ப்பு. ஒரு அஹமதிய பாக்கிஸ்தானி எப்படி பிரதமருக்கு ஆலேசகராக இருக்க முடியும் ? ராஜனாமா கடிதம் கேட்டுப் பெற்“ற வீட்டிற்கு அனுப்பி விட்டாா்கள். இந்தியாவில் அது நடக்காது.இந்தக்கள் இந்துக்கள்தாம்.இந்துக்களின் பண்பாட்டு ஒழுக்கம் முன் முஸ்லீம்கள் மின்மினிச்புச்சி.

Dr.Anburaj said...

திரு.வல்லபாய் பட்டேலுக்கு ஆதரவு அளிக்காமல் புறக்கணித்த தவறைச் செய்த என்னை நான் ஒருநாளும் மன்னிக்க மாட்டேன் என்கிறாா்.திரு.அபுல் கலாம் ஆசாத் அவர்கள்.
-------------------------------------------------------------------------------------------
திரு.அபுல் கலாம் ஆசாத் அவர்கள் எழுதிய India wins freedom என்ற புத்தகத்தின் பக்கம் 162 ல் கீழ்கண்டவாறு உள்ளது.
My second mistake was that whe I decided not to stand myself I did not support Sardar Patel.We differed on many issues but I am convinced that if he had succeeded me as Congress President he would have seen that the Cabinet Mission Plan was successfully implemented,He would have never committed the mistake of Jawaharlal which gave Mr.Jinnah the opportunity of sabotaging the plan.I can never forgive myself when I think that I had not committed these mistakes,perhaps the history of the last ten years would have been different.
ஜவஹா்லால் நேரு செய்த தவறால் ஜின்னா வெற்றி அடைந்தாா்.
திரு.பட்டேல் தலைவா் பதவியில் இருந்திருந்தால் ஜின்னாவின் திட்டங்கள் தோல்வி அடைந்திருக்கும்.
திரு.பட்டேல் அவர்களை நான் ஆதரித்து இருந்தால் ஜின்னாவின் திட்டம் தோற்றிருக்கும். 10 வருட இந்திய சரித்திரம் மாறியிருக்கும்.
------------------------------------------------------------------------------------------

திரு.வல்லவாய் பட்டேல் அவர்களின் சிறப்பிற்கு தகுதிக்கு திறமைக்கு ஆளுமைக்கு ...திரு.அபுல் கலாம் ஆசாத் அவர்களின் மேற்படி பதிவு நல்ல சான்று.ஒ்வ்வொரு இந்தியனும் திரு.பட்டேல் அவர்களின் மாண்புகள் தியாகம் தொண்டு திட்டம் ஆகியவற்றை அறிய வேண்டும்.நேரு ஒரு அலங்கார பொம்மை.நாட்டில் நடந்த சில பயங்கர சம்பவங்களுக்கு நேருவின் பிடிவாதம் தவறான நடவடிக்கைகள் காரணம்.

அதனால்தான்

”இவ்வளவு பெரிய சாதனையாளருக்கு அவ்வளவு பெரிய சிலை”

எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் இதர வருவாய் மூலம் செலவு செய்யப்பட்ட தொகை பல மடங்காக

வசுலாகி விடும். தெரியமா சுவனப்பிரியன் அவர்களே.திரு.மோடி அரசு கஜானாவிற்கு பணத்தைக் கொண்டு சோ்ப்பதில் படு கில்லாடி.

Dr.Anburaj said...

முஸ்லீம் மன்னா்கள் கிழித்த கிழிப்புக்கு

பிறகும்

ஆங்கிலேயா்கள் கிழித்த கிழிப்புக்குப் பிறகும்

565 சமஸ்தானங்கள் இருந்தது ஏன் ?

Dr.Anburaj said...


இன்று இந்திய ராணுவத்தின் தரைப்படையில் Lt.General லெப்டினன்ட் ஜெனரல் -( தலைமை தளபதிக்கு அடுத்த வரிசை) தகுதி பெற்ற அதிகாரிகளில் ஒரு முஸ்லீம் ஒருவா் இருக்கின்றாா் என்று கேள்விப்பட்டேன். விசாரித்து என்னால் உறுதி செய்ய முடியவில்லை.தங்களால் முடிந்தால் விசாரணை செய்து பாருங்கள். கிடைக்கும் தகவலை பதிவு செய்யுங்கள்.
---------------------------------------------------------
ஒரு பொருளாதார மேதையை பாக்கிஸ்தான் அரசு அவர் பாக்கிஸ்தானிய பிரஜை என்ற தகுதியை கவனிக்காது அவர் அஹமதியா பிரிவைச் சோ்ந்தவா் என்ற காரணத்திற்காக கட்டாய ராஜினாமா பிரதமாின் ஆலோசனை குழுவில் இருந்து பெற்று அவமரியாதை செய்து அனுப்பி விட்டது.

குரான் முட்டாள்களையும் மனிதாபிமானம் அற்ற காடையா்களையும் உருவாக்கி வருகின்றது.

vara vijay said...

I told its suvanPriyan view he is hiding as some other view. First try to have control on yourself

ASHAK SJ said...

ஜின்னா ஒன்றும் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதி அல்ல, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தால் உலகில் மிகப்பெரும் சக்தியாக மாறிவிடும் என்று இந்து முஸ்லீம் பிரிவினை மூலம் இந்தியாவை ஆங்கிலேயன் பிரித்தான் என்பதை கூட அறியாததால் தான் நீ சூத்திரன்

ASHAK SJ said...

நீ ஓரிறையை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உன்னை தோளோடு தோள்சேர்த்து கொள்ள இஸ்லாம் தயாராக இருக்கிறது, காரணம் இஸ்லாம் எல்லா மனிதர்களையும் மனிதர்களாக பார்க்கிறது, ஆனால் உன் பார்ப்பன மதம் உன்னை தீண்டத்தகாதவர் என்றும் சூத்திரன் என்றும் நாயை விட கேவலமாக நடத்துகிறது, இதிலிருந்தே விளங்கலாம் இஸ்லாம் குரான் எப்படிப்பட்டது என்று

Dr.Anburaj said...

நீ ஓரிறையை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உன்னை தோளோடு தோள்சேர்த்து கொள்ள இஸ்லாம் தயாராக இருக்கிறது,
---------------------------
வேண்டாம்.
அரேபிய குப்பைக்கு நான் அடிமையாக மாட்டேன். நான் இந்து.முறையான சமய கல்வி பெற்ற ஒரு இந்து.

ASHAK SJ said...

அராபிய குப்பைதான் உன்னை மனிதனாக மதிக்கிறேன் என்கிறது , ஆனால் நீயோ சூத்திரன் என்பதில் பெருமிதம் கொள்கிறாய், இதைத்தான் நான் பலமுறை சொன்னேன், சாக்கடையில் சந்தனமா வரும் நீ என்ன சமயக்கல்வி பெற்றாலும் சூத்திரன் தான், மடத்துக்குள் அனுமதி இல்லை , அனுமதித்தலும் சமமாக உட்க்காரமுடியாது