Followers

Thursday, October 18, 2018

துபாயில் உணவின்றி தவித்து வரும் தமிழக தொழிலாளர்கள்

துபாயில் உணவின்றி தவித்து வரும் தமிழக தொழிலாளர்கள் 


துபாய் : துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வரை பணத்தை ஏஜெண்டுகளிடம் கட்டி வேலைக்கு வந்தனர். 
இவர்கள் பெயர் விபரம் வருமாறு : 

மாரிமுத்து த/பெ காத்தமுத்து - பட்டுக்கோட்டை அருகில் உள்ள புதுப்பட்டிணம் 
ஆதம் பாவா த/பெ கிருது ஒலி - திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை 

இருவரும் தாங்கள் பார்த்து வந்த நிறுவனத்தில் சம்பளம் சரிவர வழங்காததால் அந்த நிறுவனத்தை விட்டு வெளியில் வந்து விட்டனர். 

தற்போது தங்க இடமும், உணவும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.  இதனால் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தங்களது பொழுதை போக்கி வருகின்றனர். 

இவர்களுக்கு உதவிட விரும்புவோர் 058  990 3314 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவிடலாம் 




No comments: