Followers

Monday, September 02, 2019

உண்மையை உலகுக்கு சொன்ன பத்திரிக்கையாளர் மீது எஃப்ஐஆர்!

உண்மையை உலகுக்கு சொன்ன பத்திரிக்கையாளர் மீது எஃப்ஐஆர்!

உபியின் மிர்ஸாபூரில் ஒரு அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மதிய உணவாக சப்பாத்தி வைக்கப்பட்டது. சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள வெறும் உப்பை வைத்துள்ளது பள்ளி நிர்வாகம். பாவம் குழந்தைகள். வேறு வழியின்றி சப்பாத்தியை சாபபிட்டுள்ளனர். இதனை ஒரு போட்டோ கிராபர் புகைப்படம் எடுத்து இங்கு நடக்கும் கொடுமையை வெளி உலகுக்கு கொண்டு வந்தார். இந்தியாவெங்கும் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.

இதனால் கோபமடைந்த யோகி ஆதித்யநாத் அரசு சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்காமல் புகைப்படம் எடுத்து உலகுக்கு சொன்ன போட்டோ கிராஃபர் மீது வழக்கு பதிவு செய்து எஃப்ஐஆர் போட்டுள்ளது.

மதிய உணவுக்கு அரசு ஒதுக்கும் பல கோடி ரூபாய்கள் எங்கு செல்கின்றன. யார் இதனால் பலனடைகின்றனர் என்று நீங்கள் கேள்வி கேட்டால் சங்கிகளால் தேச துரோகியாக சித்தரிக்கப்படுவீர்கள். :-)




No comments: