Followers

Monday, September 02, 2019

தாய் மொழியான தமிழின் மேல் உள்ள பற்று!

தாய் மொழியான தமிழின் மேல் உள்ள பற்று!
தாய் மொழியான தமிழ் மொழி மீது எந்த அளவு பற்று இருந்திருந்தால் பர்மா சென்று கட்டிய பள்ளிக்கு ஆங்கிலத்தை பின்னுக்குத் தள்ளி தமிழில் 'சோலியா ஜூம்ஆ பள்ளி' என்று பெயர் வைத்திருப்பார்கள் தமிழ் முஸ்லிம்கள்! தமிழ் மொழி மேல் முஸ்லிம்களுக்கு உள்ள பற்றையே இந்நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
தமிழ் ஆர்வலர்கள் சிலர் தமிழகத்தில் இஸ்லாம் மேலும் வளர்ந்தால் தமிழ் மொழி அழிந்து விடுமோ என்று அஞ்சுகின்றனர். இது தவறான கணிப்பு. எங்கள் வீடுகளில் தமிழில்தான் பேசுகிறோம். வெளி உலகில் தாய் மொழியான தமிழில் பேசுவதைத்தான் அதிகம் விரும்புகிறோம்.
இஸ்லாமிய மார்க்கமானது எந்த மொழியையும் மதத்துக்கான மொழியாக வரையறுக்கவில்லை. தேவ மொழி என்ற கான்செப்ட் இஸ்லாத்தில் இல்லை. உலக மூல மொழிகள் அனைத்தையும் மனிதர்கள் ஒருவரையொருவர் விளங்கிக் கொள்வதற்காக தானே படைத்ததாக இறைவன் குர்ஆனிலே கூறுகிறான். எனவே தாய் மொழியான தமிழை எந்த காலத்திலும் முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. தேவையற்ற பயம் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
முஸ்லிம்கள் தமிழில் பெயர் வைக்காமல் அரபியில் ஏன் வைக்கிறீர்கள் என்று கேட்கலாம். நியாயமான கேள்வி. தமிழில் பெயர் வைப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. அன்பழகன், அறிவழகன், மலர்க்கொடி என்ற அழகிய பெயரோடு ஒருவர் இஸ்லாத்தில் இருக்கலாம். அதற்கு இஸ்லாம் தடை போடவில்லை. ஆனால் ஒருவர் ராமசாமி என்ற பெயரோடு இஸ்லாத்துக்கு வருகிறார் என்று வைத்தக் கொள்வோம். உடனே அவர் எந்த சாதியிலிருந்து வந்துள்ளார் என்று ரிஷி மூலம் பார்க்க ஆரம்பித்து விடுவோம். அந்த அளவு சாதி வெறியானது சமூகத்தில் புரையோடிப் பொயுள்ளது.
உதாரணத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் எந்த சாதி என்று யாருக்காவது தெரியுமா? உலகமே உற்று நோக்கும் அனைவரும் அவரை ஒரு முஸ்லிமாகத்தான் பார்க்கின்றனர். எனவேதான் அரபியில் முஸ்லிம்கள் பெயர் வைக்கின்றனர். சாதி வெறி முற்றாக ஒழிந்து விட்டால் அழகிய தமிழ் பெயர்களை இஸ்லாமியர் தாராளமாக வைத்துக் கொள்வர்.
'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.'
- குர்ஆன் 14 :4
ஆக்கம்: சுவனப்பிரியன்


3 comments:

vara vijay said...

Qurasi, al zabi, al nahyan etc. We can quote caste name from arabic culture.

suvanappiriyan said...

//Qurasi, al zabi, al nahyan etc. We can quote caste name from arabic culture.//

அது இனத்துக்கான பெயர்கள்... ஆரியர், திராவிடர், மங்கோலியர் என்று இருக்கிறதல்லவா. அது பொலதான்.

அரபுகள் யாரையும் தீண்டத்தகாதவர்களாக பாவிப்பதில்லை. பள்ளிக்குள் இந்த சாதிதான் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. சூத்திரன் வேதம் ஓதினால் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று எழுதி வைக்கவில்லை.

vara vijay said...

But Muhammad told only a quraish can rule. Why is it so.