Followers

Wednesday, January 07, 2015

பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டு 12 பேர் இறப்பு!



சார்லி ஹிபோடோ என்ற ஃப்ரெஞ்ச் பத்திரிக்கை அலுவலகத்தை தீவிரவாதிகள் தாக்கி அங்கு வேலை செய்து கொண்டிருந்த 12 பேரை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். கொன்றது யாரென்று தெரியவில்லை. எவ்வளவு பெரிய தவறை யார் செய்திருந்தாலும் அதற்கு தனி மனிதன் பழி தீர்ப்பதை இஸ்லாம் கண்டிக்கிறது. துப்பாக்கியால் சுடும் போது 'அல்லாஹூ அக்பர்' என்று சொன்னார்களாம். யூதர்கள் திறம்பட ஆட்களைத் தயாரித்துள்ளார்கள். ஏனெனில் முகமது நபியின் மீது உண்மையான பாசம் உள்ளவன் இவ்வாறு அப்பாவி மக்களை கொல்ல மாட்டான். இஸ்லாத்தை விளங்காத மூடன்தான் இந்த காட்டுமிராண்டி செயலை செய்வான். ஒரு சில மூட முஸ்லிம்களும் யூதர்களின் வலையில் வீழ்ந்திருக்கலாம்.

டென்மார்க்கில் முஹம்மத் நபி அவர்களை உருவப்படம் வரைந்து பிரச்சனை உருவாகிய பொழுது ஷார்லி ஹெப்தோ (Charlie Hebdo) பத்திரிக்கையினரும் மிகவும் தவறாக எழுதினார்கள்.... இன்று அந்த கேஸ் தீர்ப்புநாள் . அதன் தீர்ப்பு வெளியாவதற்குள் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. அத்தனையையும் செய்தது மூன்று தீவிரவாதிகள் தானாம். அனைவரும் தப்பி விட்டதாகவும் செய்தி வருகிறது. மக்களிடம் அனுதாபத்தைப் பெற அந்த பத்திரிக்கையே நடத்திய நாடகமாகக் கூட இருக்கலாம்.

ஃபிரான்ஸ் பாலஸ்தீனத்தை ஆதரித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். 'எங்கள் எதிரியான பாலஸ்தீனியர்களை ஆதரிக்கும் எவரையும் நிம்மதியாக விட மாட்டோம். அமைதியை குலைக்க இஸ்லாத்தையே காரணமாக்குவோம்' என்று மொஸாத் சிந்தித்திருக்கலாம். யூத மூளை அல்லவா? உண்மையை இறைவனே அறிந்தவன்.

ஃப்ரான்ஸில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்கும் யுக்தியாகவும் இதனை பார்க்கிறேன். மாறாக எந்த இஸ்லாமியனாவது இந்த கிறுக்குத் தனத்தை செய்திருந்தால் பொதுமக்கள் முன்னிலையில் அவனை தூக்கில் ஏற்ற வேண்டும். இந்த துப்பாக்கிச் சூட்டை வன்மையாக நான் கண்டிக்கிறேன்.

பத்திரிக்கைகளுக்கும் சில பொறுப்புகள் உண்டு. பல கோடி மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் ஒரு ஒப்பற்ற தலைவரை வியாபார நோக்கத்துக்காக இவ்வாறு கீழ்த்தரமாக காட்டுவதுதான் பத்திரிக்கை தர்மமா? சார்லி ஹிபோடோஸ் என்ற பத்திரிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே இஸ்லாத்தின் மேல் பல அவதூறுகளை சுமத்தி வருகிறது. நபிகள் நாயகத்தைப் பற்றிய கார்டூன்களை பல தடவை பிரசுரித்துள்ளது. இஸ்லாமியர்கள் இந்த பத்திரிக்கையை பல முறை கண்டித்துள்ளனர். 2011 ல் இந்த அலுவலகத்தில் பாம் வெடித்தது. நபிகள் நாயகத்தைப் பற்றிய கார்ட்டூன் வெளியிட்டதே அதற்கு காரணமாக சொல்லப்பட்டது. பத்திரிக்கையின் எடிட்டர் ஸ்டீஃபன் கார்போனியர் பல முறை எச்சரிக்கப்பட்டார். ஒரு பெண் இஸ்லாமியனை முத்தமிடுவது போல் கார்ட்டூனை வெளியிட்டும் விளம்பரம் தேடிக் கொண்டனர். அதன் பிறகும் தொடர்ந்து முகமது நபியை கேலிச் சித்திரமாக வரைவதையே தனது தொழிலாக இந்த பத்திரிக்கை கொண்டிருந்தது. இவர்களின் அராஜகத்தைக் கண்ட பிரான்ஸ் வெளியுறவு மந்திரி லாரன்ஸ் ஃபேப்யூஸ் பத்திரிக்கையைக் கண்டித்து காட்டமான அறிக்கையையும் வெளியிட்டார். 'எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் உள்ளது உங்கள் செயல். இது போன்ற கீழ்த்தரமான செயல்களை நிறுத்திக் கொள்ளுங்கள்' என்று சொல்லிப் பார்த்தார். அந்த பத்திரிக்கை எதையும் கேட்கும் நிலையில் இல்லை. பத்திரிக்கையின் சீஃப் எடிட்டர் கெரார் பியர்ட் அதற்கு பதிலளிக்கும் போது 'ஒரு பத்திரிக்கையாளனாக எவ்வாறு பிரான்ஸ் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். சட்டத்தை காபூலுக்காகவும், ரியாத்துக்காகவும் வளைத்தால் அதனை நாங்கள் மதிக்க வேண்டியதில்லை' என்று திமிராக பதிலளித்தார்.

எல்லோரும் ஒரே மாதிரியான மன நிலையில் இருந்து விடுவதில்லை. உடன் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் எல்லா மதத்திலும் ஒரு சிலர் உண்டு. 12 அப்பாவி மக்கள் இறந்ததற்கு இந்த பத்திரிக்கையின் எடிட்டரும் ஒரு காரணமாகியுள்ளார். திமிராக பதிலளித்த அந்த எடிட்டரை முதலில் கைது செய்ய வேண்டும். அப்பாவிகளைக் கொன்ற மனித குல விரோதிகள் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் கடுமையான தண்டனையைக் கொடுக்க வேண்டும்.

தகவல் உதவி
கார்டியன்
07-01-2015



1 comment:

Anonymous said...

//'ஒரு பத்திரிக்கையாளனாக எவ்வாறு பிரான்ஸ் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். சட்டத்தை காபூலுக்காகவும், ரியாத்துக்காகவும் வளைத்தால் அதனை நாங்கள் மதிக்க வேண்டியதில்லை' என்று திமிராக பதிலளித்தார்.//

சிறப்பான பதில்.. துலுக்கதுவம் எத்தனை ஆபத்தானது என்பதை மிக சரியாக புரிந்து வைத்துள்ளார். துலுக்கதுவதிற்கு ஆதரவு கொடுத்தால் கடைசியில் அது சவுதிக்கு சேவகம் செய்வதில் தான் போய் முடியும்.



//பத்திரிக்கைகளுக்கும் சில பொறுப்புகள் உண்டு. பல கோடி மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் ஒரு ஒப்பற்ற தலைவரை வியாபார நோக்கத்துக்காக இவ்வாறு கீழ்த்தரமாக காட்டுவதுதான் பத்திரிக்கை தர்மமா? //



அப்டிங்களா. நீங்க உங்க இறை தூதரை மதிக்கிற மாதிரி தானே மற்றவர்களுக்கு அவர்களின் நம்பிக்கைகளும் இருக்கும். எந்த உரிமையை வைத்து துலுக்க இனம் பிற மதத்தவரை, அவர்களின் கடவுள்களை வணக்க வழிபாடுகளை கிண்டல் செய்யும்\

வேலையை செய்து வருகிறது. இதெல்லாம் உங்கள் இனம் தவறாமல் செய்யும் போது உங்க தூதர் என்ன பெரிய இவரா முதல்ல நீங்க திருந்துங்க சரியா?