Followers

Monday, December 21, 2015

பெண் ஓவியர் ஹேமா உபாத்யாய் - கொலை செய்தது கணவர்!



மும்பையில் பெண் ஓவியர் ஹேமா உபாத்யாய், அவரது வழக்கறிஞர் ஹரீஷ் பம்பானி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹேமாவின் கணவர் சிந்தன் உபாத்யாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5-வது நபர் சிந்தன். கண்டிவலி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு முதல் விடிய விடிய சிந்தனிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு அவர் கைது செய்யப்பட்டார்.

ஹேமா உபாத்யாய்(43) புகைப்படங்கள், சிறு சிற்பங்களை தனி பாணியில் கட்டமைப்பதன் மூலம் ஓவியங்களை உருவாக்குவதில் புகழ்பெற்றவர். குஜராத் லலித் கலா அகாடமி உட்பட பல விருதுகளை வென்றவர். அவரின் வழக்கறிஞர் ஹரீஷ் பம்பானி(65).

கடந்த 12-ம் தேதி இரவு அவர் வீடு திரும்பாததையடுத்து, ஹேமாவின் வீட்டு பணியாளர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில் ஹேமா மற்றும் ஹரீஷின் சடலம் சாக்கடை அருகே அட்டைப்பெட்டிக்குள் திணிக்கப்பட்டு வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக 4 பேரை பிடித்து மும்பை போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஹேமாவின் கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
22-12-2015

No comments: