Followers

Wednesday, December 30, 2015

நிஜமான ஹீரோக்களை பார்க்க வேண்டுமா?

சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய இஸ்ரேலிய வீரர்கள். கொஞ்சம் கூட அசராது தங்களின் இறை வணக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கும் பாலஸ...

Posted by Nazeer Ahamed on Wednesday, December 30, 2015


சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய இஸ்ரேலிய வீரர்கள். கொஞ்சம் கூட அசராது தங்களின் இறை வணக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கும் பாலஸ்தீன முஸ்லிம்கள். துப்பாக்கி வைத்திருக்கும் இஸ்ரேலியர்கள் மனதில் இனம் புரியாத ஒரு திகில் இருக்கிறது. நிராயுதபாணிகளாக நிற்கும் முஸ்லிம்கள் மனதில் எந்த பயமும் இல்லை.

உண்மையாளர்களுக்கு வீரர்களுக்கு ஒரு முறைதான் சாவு. கோழைகளுக்கு தினமும் சாவு. தினம் தினம் அவன் செத்து பிழைப்பான். இஸ்லாமியன் என்ற காரணத்துக்காக வெட்டுப்பட்டோ குண்டடிப் பட்டோ இறந்தால் அந்த இளைஞனுக்கு நேரடியான சொர்க்கம். எனவே எந்த பயமுமின்றி யாருக்கும் தலை வணங்காமல் செல்கின்றனர் முஸ்லிம்கள். அரசும், ராணுவமும் காவல் துறையும் அமெரிக்காவும் கை வசம் இருப்பதால் இன்று வரை தாக்கு பிடிக்கிறது இஸ்ரேல். நிராயுதபாணிகளாக பாலஸ்தினர்களை சந்திக்கச் சொல்லுங்கள் பார்போம். ஒரே நாளில் இஸ்ரேல் காணாமல் போய் விடும்.

இஸரேலின் கைப்பாவைகளாக செயல்படும் நம் நாட்டு இந்துத்வாவாதிகளுக்கும் இது பொருந்தும். 10 பேர் சேர்ந்து கொண்டு திருட்டுத்தனமாக சென்று ஒரு முஸ்லிமைக் கொல்வார்கள். குஜராத்திலிருந்து நேற்று நடந்த ஏர்வாடி ஹாஜா கொலை வரை இந்த கோழைத்தனத்தைத்தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள்.

ஆட்டோ டிரைவரான ஹாஜாவை 'சவாரிக்கு வா' என்று சொல்லி அழைத்துச் சென்று ஐந்து பேர் கொண்ட இந்துத்வ கும்பல் வெட்டி சாய்த்திருக்கிறது. வீர முள்ள ஆண் மகன்களாக இருந்திருந்தால் நேருக்கு நேர் சந்தித்திருப்பார்கள். ஆனால் இவர்கள்தான் கோழைகள் ஆயிற்றே. குஜராத்திலும் 100 மற்றும் 200 பேராக சென்றுதான் பெண்களையும் வயோதிகர்களையும் கொன்றிருக்கிறார்கள் பேடிகள். இறைவன் இவர்கள் மனத்திலே நம்மைப் பற்றிய ஒரு பயத்தை உண்டு பண்ணி விடுகிறான். எனவேதான் நேருக்கு நேர் சந்திக்க பயந்து கோழைத்தனமாக நடந்து கொள்கின்றனர்.

'ஏக இறைவனை மறுப்போரே! உங்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதும் அது உங்களுக்குச சிறிதளவும் உதவாது. நம்பிக்கைக் கொண்டோருடன் இறைவன் இருக்கிறான்'

-குர்ஆன் 8:19

No comments: