Followers

Monday, December 28, 2015

விபத்தில் இறந்தவருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டது!

மேலப்பாளையம் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் காலுடன் நுழைந்து அப்பாவிகள் மீது பள்ளிவாசலுக்குள் தடியடி நடத்திய காவல் துறையினரைக் ...

Posted by Nazeer Ahamed on Monday, December 28, 2015

மேலப்பாளையம் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் காலுடன் நுழைந்து அப்பாவிகள் மீது பள்ளிவாசலுக்குள் தடியடி நடத்திய காவல் துறையினரைக் கண்டித்து சென்னையிலும் மதுரையிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

இப்போராட்டத்தில் பங்கேற்க வந்த திருப்பூரைச் சேர்ந்த நசீர் அவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரான நசீர் அவர்களின் குடும்பம் அவருக்குப் பின் சிரமப்படக் கூடாது என்பதற்காக கொள்கைச் சகோதரர்களிடம் தவ்ஹீத் ஜமாஅத் நிதி திரட்டியது.

அவருக்கு சொந்த வீடு இல்லாதைக் கவனத்தில் கொண்டு அவரது குடும்பம் சொந்த வீட்டில் குடியிருக்க ஒரு வீடும், வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தவும் உதவும் வகையில் மூன்று வீடுகள் கட்டி ஓரிரு வாரங்களில் நசீரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

அந்த வீட்டின் வீடியோவைத் தான் நீங்கள் காண்கிறீர்கள்.

இதன் மதிப்பு சுமார் பத்து லட்சம் ரூபாய்களாகும்.

அடையாளத்துக்காக சில ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து விட்டு ஓயாமல் தூர நோக்குடன் சிந்தித்து நல்ல ஏற்பாட்டைச் செய்திருப்பது இந்த ஜமாஅத்தின் பொறுப்பான செயல்பாட்டுக்கு ஆதாரமாகும்.

போராட்டத்துக்கு அழைத்த உடன் அறிக்கை மூலம் அனுதாபம் தெரிவித்து உயிரிழந்தவரை மறந்து விடாமல் அவரது குடும்பத்தாருக்கு வாழ்வாதார ஏற்பாடு செய்துள்ளது பாராட்டுக்கு உரியது....

No comments: