Followers

Tuesday, December 29, 2015

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ரஞ்சித் கைது!



பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் விமானப்படை அதிகாரியான ரஞ்சித் என்பவரை டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான ரஞ்சித், ஐஎஸ்ஐ அமைப்புடன், இ-மெயில், வாட்ஸ்அப் அழைப்புகள், ஸ்கைப் அழைப்புகள் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். ஒரு பெண் மூலமாக முதலில் தொடர்பு ஏற்பட்டு அது பின்னர் தொடர்கதையாகியுள்ளது.

ரஞ்சித்தின் பூர்வீகம் கேரளா. சென்ற ஞாயிறன்று கைது செய்யப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்டுள்ளார். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
29-12-2015

நம் தமிழக பத்திரிக்கைகள் நாளை 'ஒரு இளைஞர் கைது' என்று செய்தி வெளியிடுவார்கள். :-)

No comments: