Followers

Thursday, December 31, 2015

ஜெருஸலத்திலும் தூய இஸ்லாத்தை எத்தி வைக்கும் பணி!











இன்று உலக அளவில் இஸ்லாமியருக்கு பெருத்த சேதங்களை விளைவிப்பவர்கள் யூதர்களே.... அதிலும் குறிப்பாக இஸ்ரேலைப் பற்றி சொல்லவே வேண்டாம். எப்படி ஒருவர் பார்பனராக மாற முடியாதோ அது போல் யூதனாகவும் ஒருவன் மாற முடியாது. ஆனால் இஸ்லாம் நாள் தோறும் வளர்ந்து கொண்டுள்ளது. இது யூதர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளவர்களுக்கு பெருத்த தலைவலியாக இருக்கிறது. அனைவரும் இஸ்லாமியராக மாறி விட்டால் நமக்கு மதிப்பு போய் விடுமே என்ற அச்சத்தில் இஸ்லாமியரின் மேல் பொய்க் குற்றச்சாட்டுக்கள். குண்டு வெடிப்புகள் நிகழ்த்தி இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள்.

அதே அளவுகோல்தான் இந்தியாவிலும். இந்து மக்களை தங்களுக்கு கீழ்படிய வைத்து இத்தனை காலம் சுகமாக வாழ்ந்து விட்டது மேல்சாதி வர்க்கம். தற்போது பல இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் இன விடுதலை வேண்டி இஸ்லாத்தை நோக்கி அலை அலையாக வந்து கொண்டிருக்கின்றனர். இது மேல் சாதி வர்க்கத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இஸ்லாத்தின் மேல் எப்படியாவது பழி சுமத்த எந்த நேரமும் சிந்தனையுடனேயே உள்ளனர். வன்முறையை இஸ்லாமிய பெயர்களில் அரங்கேற்றுகின்றனர். பல குண்டு வெடிப்புகளை நிகழ்த்துகின்றனர். 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் வரை' என்பது போல் அனைத்தும் இந்துத்வாவாதிகள் செய்ததாக நிரூபிக்கப்பட்டது. இந்த மாதம் வந்த மழை வெள்ளம் இஸ்லாமியர் எப்படிப்பட்டவர்கள் என்பதை பலரும் உணர்ந்து கொண்டனர்.

அதே போல் இஸ்ரேலிய யூதர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் பணியை நமது சகோதரர்கள் செய்து வருகின்றனர். அவர்கள் இஸ்லாத்தை ஏற்கிறார்களோ இல்லையோ இஸ்லாம் பற்றிய தவறான பிம்பத்தை துடைத்தெறிய இது போன்ற அழைப்புப் பணி நமக்கு மிக உதவிகரமாக இருக்கும்.

No comments: