Followers

Thursday, June 09, 2016

மூன்று லட்சம் பசுக்கள் யாருக்கும் உபயோகமில்லாமல் இறந்துள்ளதாம்!



மூன்று லட்சம் பசுக்கள் யாருக்கும் உபயோகமில்லாமல் இறந்துள்ளதாம்!

'உத்தர பிரதேசத்திலும் மத்திய பிரதேசத்திலும் உள்ள 13 மாவட்டங்களில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பசுக்கள் இறந்துள்ளன. பசுக்களை காட்டி ஓட்டு வாங்கும் பிஜேபி அதனை முறையாக பராமரிக்கத் தெரியவில்லை.' என்கிறார் சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ்.

இது பற்றி பிஜேபியின் சந்திர மோகன் கூறும் போது 'இதற்கு காரணம் முலாயம் சிங் யாதவ் சர்க்காரின் அலட்சிய போக்கே' என்கிறார். இவ்வாறு ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டு ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார்கள். பசுக்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் மனிதர்களை பலி கொடுக்கிறது இந்துத்வா.

இந்துத்வா எடுக்கும் ஒவ்வொரு அஜண்டாவும் அதற்கு எதிராகவே கிளம்பத் தொடங்கியுள்ளன. இது தொடக்கம்தான். போகப் போக இது போன்ற தமாஷாக்களை நிறைய பார்க்கலாம்.

தகவல் உதவி
இந்தியா டுடே
02-06-2016

http://indiatoday.intoday.in/story/ten-thousand-cattle-die-daily-in-bundelkhand-ngo/1/683138.html

1 comment:

Dr.Anburaj said...

விவசாயம் அதிக அளவில் செய்யும் நாட்டில் கால்நடைச் செல்வங்கள் பகடு செல்வங்கள் நிறைய தேவை என்பதை சுருக்கமாக ஒப்புக் கொள்ளுங்கள்.

சவுதி அரேபியாவில் விளை நிலங்கள் குறைவு. நீா் வளம் குறைவு.ஜனத் தொகை மிகக் குறைவு.
அங்குள்ள கலாச்சாரம் படி இந்தியாவை மதிப்பிடுதல் ஆகாது.

இந்து கோவில்களில் விவசாய பொருட்கள் பயன்படுத்துவது விவசாயப் பெர்ருட்கள் செலவு ஆகி விவசாயியளுக்கு விற்பனை ஆவதற்கே. இந்து பண்டிகையின் நோக்கமே விவசாய பொருளாதாரம் ஆகும்.

அரேபிய மத பண்டிகை என்றால் ஒட்டகத்திற்கும் மாட்டிற்கும் ஆட்டுக்கும் கோழிக்கும் மரணம்.

இந்தியாவில் ஒரு பண்டிகை முடிந்திருந்தால் விவசாயி கையில் பணம் மீந்திருக்கும். அவன் முகத்தில் சிாிப்பு காணப்படும். உம் பொங்கல் பண்டிகை.