Followers

Saturday, June 04, 2016

முகமது அலி அவர்களின் மிக அழகிய பேட்டி!




முகமது அலி அவர்களின் மிக அழகிய பேட்டி!
-------------------------------------------------------------------------

கேள்வி:
உங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளாமல் அனைவரிடமும் சகஜமாக பழகுகிறீர்களே... மரணத்தைப் பற்றிய பயம் இல்லையா?'

பதில்:
எனக்கு மரணத்தைப் பற்றிய பயம் இல்லை. இறைவன் குர்ஆனில் கூறுகிறான் 'எந்த ஒரு ஆத்மாவும் அவனது உத்தரவின்றி பூமிக்கு வருவதில்லை. அதே போல் எந்த ஒரு ஆத்மாவும் அவனது இறப்புக்கான நேரம் குறிக்கப்பட்டு விட்டால் ஒரு நொடி நேரம் கூட முந்துவதில்லை: ஒரு நொடி நேரம் கூட பிந்துவதில்லை' எனவே எனது இறப்பு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அதைக் கண்டு நான் ஏன் ஓடி ஒளிய வேண்டும்?

கேள்வி:
நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ள 'பாடி கார்ட்' வைத்துள்ளீர்களா?

பதில்:
ஆம்... எனக்கு ஒரு பாடி கார்ட் இருக்கிறார். எந்த கண்களும் அவனை பார்த்ததில்லை: அவனோ உலக மக்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். எந்த காதுகளும் அவனது சப்தத்தை கேட்டதில்லை : அவனோ உலக மக்களின் சப்தத்துக்கு பதிலளிக்கிறான். அத்தகைய ஆற்றல் மிக்க அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்தான் எனது பாதுகாவலன்'

No comments: