Followers

Thursday, June 16, 2016

பிராமணாள் போட்ட அப்பளம் வாங்கறீங்களா!



பிராமணாள் போட்ட அப்பளம் வாங்கறீங்களா!

சூத்திரன்: அய்யரே.... அது என்ன பிராமணாள் செய்த அப்பளம்?

அய்யர்: மத்த சாதி பெண்கள் செய்தால் எங்களுக்கு தீட்டுடா அம்பி.... அதான்..

சூத்திரன்: எங்க வீட்டு பெண்கள் செய்த அப்பளத்தை சாப்பிடக் கூடாது என்று கும்புடற சாமி சொல்லிச்சா... ஆதாரம் காமிங்க சாமி....

அய்யர்: சாமி சொல்லலடா... உங்க ஆத்துல சுத்த பத்தமா இருக்க மாட்டேள்.... அதான் காரணம்.

சூத்திரன்: நீங்க எங்க வீட்டுல வந்து பாத்திங்களா சாமி...

அய்யர்: நான் வீட்டுக்கு வரலேண்ணாலும் ரோட்டில் பார்க்கிறேனே.... அழுக்கு பிடித்த உடைகள். ஒரே வியர்வை நாத்தம்.... எப்படிடா சாப்பிட முடியும்?

சூத்திரன்: அய்யரே! உங்க ஆளுங்க எப்படியாவது ஆபீஸ் வேலையை புடுச்சுகிறீங்கோ... எங்க ஆளுங்க படிச்சு வந்தாலும் வேலை தர மாட்டேங்கறீங்கோ.... ஒண்ணு ரெண்டு பேர் இட ஒதுக்கீட்டில் அலுவலக வேலைக்கு வந்தாலும் எங்க ஆளுங்களுக்கு உரிய மரியாதை தர மாட்டேங்கிறீங்கோ....

பல உண்மைகள் வெளி வருவதை பார்த்து சுதாரித்த அய்யர் வேகமாக நடையை கட்டுகிறார்.

No comments: