Followers

Friday, December 04, 2015

ராஜ்குமார் என்ன சொல்கிறார் கொஞ்சம் கேளுங்கள்!

டிவி யில் மீட்புப் பணிகள் நடைபெறுவதை உணவு, பால், நீர் தரப்படுவதைக் காட்டுகிறார்கள் ..மீட்பு நடவடிக்கை ஊடக வீடியோக்களில் களப்பணியில் முஷ்லிம்கள் இல்லாத வீடியோவே இல்லை கடைசிக்கு 2 டொப்பியாவது தென்படுகிறது பொதுத் தொண்டில் ,.வாழ்க முகமதிசம்..,

அவர்களின் பள்ளிக்கு அடைக்கலம் புகுந்த நம் பெண்களிடம் , குழந்தைகளிடம் , மக்களிடம் அவர்கள் தீட்டுப்பார்க்கவில்லை., பள்ளிவாசலில் குடம் குடமாய் குடி நீர் எடுத்துக் கொள்ளவும் அனுமதித்துள்ளார்கள் .,

துலுகன் புத்தி தொண்டைகுழி வரைக்கும் என்றீர்கள் ,. ஆம் தொண்டையில் நீர்வார்த்தார்கள் ., தொண்டையில் கடந்த சில தினங்களில் இரங்கிய உணவு அவர்கள் கொடுத்தது தான்..,

நம்மை அவர்கள் மாமா , மச்சான் என்று அழைத்தது உதட்டில் அல்ல உள்ளத்தில் இருந்து என்றும் உணர முடிகிறது .,

இனி ஒரு பாபர் மசூதியும் இடிக்கப்படக் கூடாது ,. மழைக்கு ஒதுங்க உதவும்.,

இனி இந்திய மசூதிகள் நம்முடையது ., உயிரைக் கொடுத்தேனும் நம் தெருவில் இருக்கும் அவர்களின் மசூதிகளை., நம் புகழிடங்களை நாம் காக்க வேண்டும்.. சர்ச்சுகளுக்கும் இது பொருந்தும்..,

யாருடைய தேச பக்தியை நாம் காலமெல்லாம் சந்தேகிக்க நிர்பந்திக்கப்பட்டோமோ??! யாரை பாகிஷ்தானுக்கு போ என சங்கப்பரிவார் RSS, BJP சொன்னபோது நாம் வேடிக்கை பார்த்தோமோ?? அந்த முஷ்லிம்கள் ., யாரைக் காரில் அடிபட்ட நாய் என்று மோடி சொன்னாரோ?! அந்த முஷ்லிம்கள்.., ஆம் மாட்டுக்கறியின் பெயரால் கொல்லப்பட்ட , வேட்டையாடப்பட்ட அதே முஷ்லிம்கள்..மீட்புப்பணியில் உயிரைப் பணயம் வைத்து ...

ஆனால் இவர்களது தேச பக்தியைக் கேள்விக்கு உட்படுத்திய தேச பக்தர்களைக் கானோம் களத்தில் .,

- ராஜ்குமார்

@abdul hakeem

No comments: