
வன் புணர்வு செய்யப்பட்ட நர்ஸ் 42 வருடங்களாக கோமாவில்!
(இது ஒரு மீள் பதிவு!)
1973 ஆம் வருடம் அருணா சண்பக் என்ற செவிலியர் சக மருத்தவ ஊழியர்களால் கற்பழிக்கப்பட்டார். அன்றிலிருந்து கோமாவில் தனது வாழ்நாளை கிட்டத் தட்ட 42 வருடங்களாக கழித்து வருகிறார். தற்போது அவரது உடல் நிலை மோசமாகி வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது வாழ்நாளில் பெரும் பகுதியை மருத்துவ மனையிலேயே கழித்து விட்டார் அருணா. குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று குரல் எழுப்புபவர்கள் இந்த பெண்ணின் இழந்து போன வாழ்வுக்கு என்ன பதிலை வைத்திருக்கிறார்கள்?
இன்றைய செய்தியில் அவர் இறந்து விட்டதாக செய்தி வந்துள்ளது.
தகவல் உதவி
NDTV NEWS
May, 16, 2015
No comments:
Post a Comment