Followers

Monday, May 30, 2016

ரானா அய்யூபின் புத்தகத்துக்கு சங் பரிவார் எதிர்ப்பு!



ரானா அய்யூபின் புத்தகத்துக்கு சங் பரிவார் எதிர்ப்பு!

"GUJARAT FILES:ANATOMY OF A COVER UP" என்ற புத்தகத்தை ரானா அய்யூப் எழுதியுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை பின்னணியாகப் கொண்டு எழுதப்பட்டுள்ளது இந்த புத்தகம். கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரிடையாக சென்று பேட்டியெடுத்துள்ளார். அரசு அதிகாரிகளையும் இவர் விடவில்லை. நரேந்திர மோடி தனது அதிகாரத்தை எப்படி துஷ்பிரயோகம் பண்ணினார் என்பதும் விலாவாரியாக விளக்கப்பட்டுள்ளது. பல புதிய உண்மைகள் ஆதாரங்களோடு தற்போது புத்தகமாக வெளிவந்துள்ளது.

இந்த புத்தகத்தை ஆன்லைனில் அமேஜான்.காம் வெளியிட்டுள்ளது. உண்மைகள் வெளி வருவதை இந்துத்வாவாதிகள் விரும்புவார்களா? எனவே அந்த தளத்திற்கு சென்று இந்த புத்தகத்துக்கு எதிராக விஷத்தைக் கக்கி வருகின்றனர்.

“Anti national book,” “toilet paper,” “Do not waste your money,” “fictional story by a so-called journalist,” and “lousy book, lousy author.”

'தேச துரோக புத்தகம்' ' கழிவறை பேப்பர்' 'உங்கள் பணத்தை வீணாக்க வேண்டாம்' என்று இந்த புத்தகத்துக்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக அவர்களுக்கு ராணா அய்யூப் ட்விட்டரில் 'நன்றி நண்பர்களே! செலவு இல்லாமல் இந்த புத்தகத்துக்கு அதிக விளம்பரத்தையும், எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளீர்கள். எதிர்பார்த்ததை விட அதிக புத்தகங்கள் விற்றுத் தீர்க்கும்' என்று கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களை மிரட்டுவதும், பெண்களாக இருந்தால் கற்பழித்து கொன்று விடுவோம் என்று மிரட்டுவதும் மோடிக்கு எதிராக எழுதினால் அது தேச துரோகம் என்பதும் இந்துத்வாவின் வழமையான காமெடிகள். எனவே உண்மை மக்களுக்கு சென்றடைய வேண்டும். அந்த புத்தகம் இந்தியா மற்றும் உலகம் முழுக்க சென்றடைய வேண்டும். மோடியின் உண்மை முகம் உலகுக்கு தெரிய வேண்டும்.

எனவே நாம் ஒவ்வொருவரும் அந்த புத்தகத்தை வாங்குவோம். வசதியுள்ளவர்கள் இந்து நண்பர்களுக்கு இலவசமாக வாங்கிக் கொடுப்போம். இந்த செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்வோம்.

தகவல் உதவி
வாஷிங்டன் போஸ்ட்
26-05-2016

https://www.washingtonpost.com/news/worldviews/wp/2016/05/26/the-new-battleground-for-indias-trolls-amazon-reviews/



No comments: